ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பயத்திலிருந்து வெளியேறிடுக

   "ஒரு காலத்தில் அரேபியாவிலிருந்து இரண்டு அற்புதமான பருந்துகளைப் பரிசாகப் பெற்ற ஒரு மன்னன். அவை தான் இதுவரை கண்டிராத மிக அழகான பறவைகளான அவ்விலைமதிப்பற்ற பருந்துகளுக்கு நன்கு பறப்பதற்கான பயிற்சி அளிக்க ஒருபயிற்சியாளரை நியமித்து பயற்சி கொடுத்தார். பலமாதங்கள் கடந்தபின்னர் ஒரு நாள் பருந்துகளில் ஒன்று கம்பீரமாகப்  வானத்தில் உயர்ந்து பறந்தது ஆனால், மற்றொருப் பறவையானது வந்த நாள் முதல் அது அமர்ந்திருந்த கிளையை விட்டு நகரவேயில்லை என அப்பருந்துகளுக்கான பயிற்சியாளர் அரசனிடம் தெரிவித்தார்.  பலவகைகளில் சிறந்த அறிவுதிறனுள்ள பலரும் பல்வேறு வகையில் முயன்றாலும் யாராலும் அந்த மற்றொரு பறவையை மட்டும் பறக்க வைக்க முடியவில்லை, அதனால் அரசன் தனது அமைச்சரிடம் அந்தபணியை வழங்கினார், அமைச்சராலும் அந்த மற்றொருபறவையை பறக்கவைக்கமுடியவில்லை  உடன் தன்னுடைய நாடுமுழுவதும்  அந்த மற்றொரு பறவையை  பறக்க வைக்க கோரி அறிவிப்பு செய்தார்
. அறிவிப்பு செய்த சிலநாட்களுக்கு பிறகு மற்றொரு பருந்து வானத்தில் பறப்பதை கண்டு அவ்வரசன் மிக பரவசமடைந்து. அரசன் தனது அரசவையில், "இந்த அதிசயத்தைச் செய்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அரசன் முன் வந்து நின்ற ஒரு எளிய விவசாயியை கண்ட . அரசன், "நீ மட்டும் எப்படி அந்த பருந்தினை பறக்க வைத்தாய்? "  என்ற கேள்வியை எழுப்பினார் அந்த விவசாயி அரசனை வணங்கி, "அரசே அந்தபணி மிகவும் எளிதானது, நான் வேறொன்றும் செய்யவில்லை, நான் பறவை அமர்ந்திருந்த கிளையை வெட்டத்துவங்கினேன் அவ்வளவுதான் அந்த பறவை வானத்தி்ல் பறக்க ஆரம்பிததுவிட்டது." என பதில் கூறினார்
 மனிதர்களாகிய நாமும் நம்மிடம் உள்ள நம்பமுடியாத பல்வேறு திறமைகளை பயன்படுத்தி கொள்ளாமல் , நமக்குப் பாதுகா்பான செயல்களை மட்டும் அப்படியே பற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறாமல் வாழ்ந்துவருகின்றோம் . நமக்குள் இருக்கும் திறன்கள் முடிவற்றவை, ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு அவை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. . எனவே பெரும்பாலும், நம் வாழ்க்கை உற்சாகமாகவும்,, நிறைவாகவும் இருப்பதற்குப் பதிலாக  நாம் பழக்கமான,  சாதாரணமான செயல்களைமட்டும் செய்து வருகின்றோம்து.
  எனவே நாம் நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் பயத்தின் கிளையை அழித்து,  மறைந்திருக்கும் சக்திகளைப் பயன்படுத்தி வானத்தை நோக்கி உயர்ந்து வெற்றியை அடைய  ஆறுதல் மண்டலங்களை விட்டு வெளியேறிடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...