சனி, 31 டிசம்பர், 2022

பாம்பும் மரம் அறுக்கும் வாளும் - கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்

 ஒரு நாள்இரவில் ஒரு தச்சரின் மரப்பட்டறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது இரவுநேரமானதால் அந்த மரப்பட்டறையானது இருள்சூழ்ந்து இருந்தது. அந்த பாம்பு  மரப்பட்டறைக்குள் ஊர்ந்து நகர்ந்தசென்றுகொண்டிருந்த போது ஏதோ ஒன்று அதன் மீது உராய்ந்ததால் அந்த பாம்பின் உடலில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த காயத்தினால் ஏற்பட்ட உடல் வலியால்  ஆத்திரமடைந்த பாம்பு தனது தலையை தூக்கி படம் எடுத்து ஆடியவாாறு சீறிக்கொண்டு தன்னுடைய உடலில் உராய்ந்து காயம் ஏற்படுத்திய பொருளை கடிக்க முயன்றது . இந்த முயற்சியில் அந்த பாம்பின் வாயிலும்  முகத்திலும் மேலும் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், எதிரி  தன்னைத் தாக்க முயல்கின்றார் எனதவறாக நினைத்து கொண்டு, அந்த பாம்பானது அதிக கோபத்துடன் கடுமையாக சீறிக்கொண்டு தன்னுடைய முழு பலத்துடன் தன்னுடைய எதிரியை மூச்சுத் திணறச் செய்வது போன்று தன்னுடைய நீண்ட உடலால் அதைச் சுற்றி வளைக்க முடிவு செய்து அவ்வாறே செய்தது. ஆனால் மறுநாள் காலையில், அந்த தச்சர் தனது மரப்பட்டறைக்குள் நுழைந்தபோது, கூர்மையான மரம் அறுக்கும் வாளில் பாம்பு ஒன்று சுற்றப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டார்.
கற்றல் சில நேரங்களில், நாம் கோபத்தில் எந்தவொரு செயலிற்கும் பதில் செயல்செய்திடுமாறு நடந்து கொள்கிறோம், அதாவது நம்மை காயப்படுத்து பவர்களை தீங்கிழைப்ப வர்களை  பதிலுக்கு பதில் காயப்படுத்த நினைக்கிறோம், ஆனால் அதன்மூலம் நம்மை அறியாமல் நமக்கு நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். எனவே, அவ்வாறான சூழல்களில் அத்தகைய நபர்களையும் சூழ்நிலையையும் புறக்கணிப்பது நல்லது, ஏனென்றால் அவர்களுக்கு எதிர்வினையாற்றுவதாக எண்ணிக்கொண்டு நாம் நமக்கான மீளமுடியாத பேரழிவுகளையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் சூழலில் மாட்டிகொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...