வியாழன், 26 ஜூலை, 2012

பங்குசந்தை விளக்கம்


முன்னொரு சமயத்தில் கிராமம் ஒன்றிற்கு வியாபாரியொருவர் வந்து அந்தவூர்மக்களிடம் குரங்கு ஒன்றிற்கு ரூபாய்பத்துவீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் தான் வாங்கி கொள்வதாக அறிவிப்பு செய்தார் உடன் அந்தவூர் கிராமமக்கள் அனைவரும் ஊர்முழுவதும் தேடிபிடித்து குரங்குகளை கொண்டுவந்து அவ்வியாபாரியிடம் குரங்கு ஒன்றிற்கு ரூபாய்பத்துவீதம் விற்றனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

பின்னர் அதேவியாபாரி குரங்கு ஒன்றிற்கு ரூபாய் இருபது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக மறுஅறிவிப்பு செய்தார் மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று ஊருக்குஅருகிலிருக்கும் தம்முடைய நிலங்களில் சுற்றிதிரிந்த குரங்குகளை தேடிபிடித்து கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் இருபது வீதம் விற்பனை செய்தனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

அதன்பின்னர் அதேவியாபாரி மூன்றாவது முறையாக குரங்கு ஒன்றிற்கு ரூபாய் முப்பது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக மூன்றாவது முறையாக மறுஅறிவிப்பு செய்தார் மூன்றாவதுமுறையாக மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று தம்முடைய நிலங்களுக்கு அருகிலிருக்கும் காடுகளில் சுற்றிதிரிந்த குரங்குகளை தேடிபிடித்து கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் முப்பது வீதம் விற்பனை செய்தனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

அதன்பின்னர் அதேவியாபாரி நான்காவது முறையாக குரங்கு ஒன்றிற்கு ரூபாய் நாற்பது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக நான்காவது முறையாக மறுஅறிவிப்பு செய்தார் நான்காவது முறையாக மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று தம்முடைய ஊரின் அனைத்து இடங்களிலும் தேடியும் ஒருசிலகுரங்குகளே கிடைத்தன அதனை கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் நாற்பது வீதம் விற்பனை செய்தனர் அதற்கு மேலும் குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியையே கைவிட்டனர்

இந்நிலையில் அந்த குரங்கு வாங்கும் வியாபாரி தம்முடைய உதவியாளரை அழைத்து தமக்குபதிலாக இந்த குரங்கு வாங்கும் பணியை பார்த்துகொள்ளுமாறும் தான் தம்முடைய ஊருக்கு சென்றுவருவதாகவும் கூறி சென்றார்

மறுநாள் அவ்வியாபாரியின் உதவியாளர் அவ்வூர் மக்களிடம் தான் பாதுகாத்து வைத்துள்ள குரங்குகளை குரங்குஒன்றிற்கு முப்பதுவீதம் விற்பனைசெய்யவிருப்பதாகவும் தம்முடைய முதலாளி வந்தால் அதே குரங்குகளை குரங்குஒன்றிற்கு நாற்பதுவீதம் வாங்கிகொள்வார் என்றும் புதிய அறிவிப்பினை வெளியிட்டார்

இந்த புதியஅறிவிப்பினை கேள்விபட்ட அவ்வூர் மக்கள் அனைவரும் இன்று அக்குரங்களை வாங்கி அதேகுரங்களை நாளை அந்த வியாபாரியிடம் விற்பனைசெய்தால் நமக்கு ஒரேநாளில் குரங்கு ஒன்றிற்கு பத்துரூபாயும் அலைந்து திரிந்து தேடிபிடிக்கும் சிரமம் எதுவுமில்லாமல் கிடைக்குமே என்ற பேராசை கொண்டு தம்முடைய சேமிப்புகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து கூண்டிலிருந்த அனைத்து குரங்குகளையும் குரங்குஒன்றிற்கு முப்பதுவீதம் வாங்கிகொண்டனர்

அவ்வாறு அனைத்து குரங்குகளும் விற்றவுடன் அதாவது அவ்வூர் மக்களிடம் பொருட்களை வாங்கி அவ்வூர் மக்களிடமே அதிக இலாபத்துடன் விற்பனை செய்த பணத்தினை எடுத்துகொண்டு அவ்வியாபாரியின் உதவியாளர் அன்று சாயுங்காலமே மறுநாள் தம்முடைய முதலாளி வருவார் என உறுதிகூறி தம்முடைய ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்

பிறகு மறுநாள் அக்குரங்கு வியாபாரி திரும்பி வரவேயில்லை மறுநாள் மட்டுமல்லாது எப்போதுமே அக்குரங்கு வியாபாரியும் அவருடைய உதவியாளரும் அவ்வூர்பக்கம் திரும்பி வந்ததேயில்லை பழையபடி குரங்குகள் மட்டுமே அவ்வூர்முழுவதும் சுற்றிதிரிந்தன இதுதான் ஒருபங்கு சந்தையின் நடைமுறையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...