சனி, 28 ஜூலை, 2012

நன்பரின் சிக்கலை களைந்து ஆற்றுபடுத்துதல்


என்னுடைய நண்பர் ஒருவர் ஒருநாள் பின்வருமாறு என்னிடம் உதவி கோரினார் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் பணி புரிந்துவந்தேன். இக்காலத்தில் நான் அனுபவம் நிறைய பெற்றும் என்னுடை பணியை அனுபவித்தும் வந்தேன். மேலும், நான் எனது வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு செய்வது மட்டுமல்லாது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எனது வேலையை முடித்து வந்தேன், மேலும் கூடுதலாக என்னுடைய உதவி தேவைப்படும் போதெல்லாம் என்னுடைய உடனடி மேலதிகாரி அதனை எனக்கு தெரியப்படுத்தியவுடன் நான் எப்போதும் அதனை செய்வதற்கு தயாராக இருந்துவந்தேன். நான் என்னுடைய வேலையில் ஒரு படைப்பு ஆற்றல் கொண்ட அணுகுமுறையை பின்பற்றிவந்தேன் , அதனால் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மிகவும் பயனுள்ள வழிகளில் தீர்வுசெய்து நிரூபித்துவந்தேன் . என்னுடைய பிரச்சனை என்னவென்றால், எங்களுடைய நிறுவனத்தில் சில முக்கியமான சிக்கலான பிரச்சினை வரும்போதெல்லாம் அதனை தீர்வுசெய்வதற்கான ஆலோசனைகளை அவ்வப்போது நான் என்னுடைய உடனடி மேலதிகாரியிடம் கூறியவுடன் அதனை அவர்செயற்படுத்தி தான்மட்டுமே அந்த தீர்வு ஏற்படுவதற்கு காரணமானவர் என்றும் அந்த பிரச்சினை மிகசுலபமாக தீர்வுசெய்வதற்கு தம்முடைய பங்களிப்பே மிகமுக்கிய காரணம் என்றும் எங்களுடைய மேல்அதிகாரிகளிடம் நல்லபெயரை எனக்கு கிடைப்பதற்கு பதிலாக அவர் தட்டிசெல்வார் இவ்வாறு பலமுறை நடைபெற்றுள்ளன. இது மட்டுமன்றி, அடிக்கடி எனக்கு கூடுதல் பணியை அளித்து உடன்முடித்து தரும்படி என்னுடைய உடனடி மேலதிகாரி கோரியபோதெல்லாம் நான் சோர்ந்து போகாமலும் காலநேரம் பார்க்காமலும் என்னுடைய பணியை செய்துவந்துள்ளேன்

ஆனால் அதற்கு பதிலாக என்னுடைய உடனடி மேலதிகாரியானவர் என் முயற்சிகளை முற்றிலும் புறக்கணித்து விடுவது மட்டமின்றி என் கடின உழைப்பை அங்கீகரிப்பதுகூட கிடையாது, . நான் இவ்வாறு கூடுதல்பணியை சுனக்கமின்றி செய்தது மற்றும் முன்முயற்சி எடுத்துவந்தது தவறு ஒன்றும் இல்லை ,

ஆனால் என்னுடைய உடனடி மேலதிகாரியானவர் இந்த என்னுடைய முயற்சியையும் கடினஉழைப்பையும் அவரது சொந்த முயற்சியாகவும் தன்னுடைய கடின உழைப்பால் இந்த விளைவு ஏற்பட்டதாகவும் எங்களுடைய மேலதிகாரிகளிடம் இதனை காண்பித்து தட்டிபறித்து செல்லும் செயல் எனக்கு துரோகம் செய்வதாகவும் எனக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் நிலையும் உருவாகின்றது இவ்வாறான சிக்கலான சூழலில் குறைந்த பட்சம் அவர் தனது சொந்த பணியை நிறைவேற்ற முடியாதநிலையில் இருந்தும் நான்தான் அதனைசெய்ததாக ஒப்புக்கொண்டிருந்தால்கூட மிகநன்றாக இருந்திருக்கும், இவ்வாறு தொடர்ந்து என்னுடைய கடின உழைப்பை எல்லாம் தன்னுடைய கடினஉழைப்பாக தட்டிபறித்துசெல்வது கண்டிப்பாக நான் என்னுடைய பணியின் நோக்கம் மற்றும் வேலையை துறக்கும்நிலை எனக்கு ஏற்படுத்துகின்றது . நான் இந்த நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று எனக்கு தெரியாது. நான் என்னுடைய உடனடிமேலதிகாரியிடம் பேச வேண்டுமா அல்லது நான் அவரது மேலதிகாரிகளிடம் சென்று அவரது தவறான நடத்தை பற்றி கூற வேண்டுமா? நான் என்னுடைய இந்த வேலையை விட்டுவெளியேறி வேறொரு புதிய ஒன்றை தேடலாம் என இருக்கின்றேன். நான் முற்றிலும் குழம்பியுள்ளேன் தயவு செய்து. எனக்கு சரியான வழிகாட்டி உதவும்படியும் இந்த குழப்பத்திலிருந்து என்னை விடுவிக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றேன்,

அதற்கு நான் பின்வருமாறு பதிலை அவருக்கு விளக்கமாக அளித்து ஆற்றுபடுத்துதல் செய்தேன்

நம்முடைய இந்த கடின உயர்ந்த உழைப்பை தன்னுடையதாக தட்டிபறித்துசெல்லும் நம்முடைய உடனடி மேலதிகாரியின் செயலினால் நாம் விரக்தியடைந்தும் கலங்கியுள்ளதுமான நிலை முற்றிலும் அனுதாபத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகும், ஆனால் நாம் இந்நிலைமையை மிகநன்றாக திறமையாக சமாளிக்க வேண்டும். முதலில், நம்முடைய மேலதிகாரிகளிடம் உடனடி அதிகாரிகாரியினுடைய இவ்வாறான தவறான செயலை பற்றி அவருடைய முதுகிற்கு பின்னால் சென்று புகார் கூறுவது மிக அபத்தமான செயலாகும் மேலும் நாம் இதனை மேலதிகாரியிடம் இவ்வாறு காட்டிகொடுத்தோம் என விரைவில் அவரால் மிகஎளிதாக கண்டு பிடித்து விட முடியும் அதனைதொடர்ந்து அவர் செய்யும் அனைத்து செயல்களும் நிகழ்வுகளும் நம்முடைய நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கிவிடும் இது ஒரு மோசமான யோசனை ஆகும். மேலும், உடனடி மேலதிகாரி யானவர் நாம் இந்நிறுவனத்திற்கும் அவருக்கும் விசுவாசமாக செயல்படவில்லை என்றும் நாம் நம்முடைய ஆலோசனைகளை மற்றவர்களுடன் பகிர்த்துகொள்வதற்கு பதிலாக நம்முடைய தனிப்பட்ட உயர்வைமட்டுமே நாம் கருத்தில் கொண்டுள்ளதாகவும் ஆகிய தவறான எண்ணத்திற்கு இட்டுசெல்லும் வழிஏற்பட வாய்ப்புள்ளது எனவே பின்வரும் ஒருசில ஆலோசனைகளை இவ்வாறான சூழலில் முயற்சிசெய்து பின்பற்றி இந்த சிக்கலில் இருந்து விடுபடமுயலற்சி செய்யலாம்

உடனடிமேலதிகாரிஏன்அவ்வாறு செய்தார் என நம்முடையஉடனடி மேலதிகாரியிடம் நேரடியாக கேள்விஎழுப்பலாம் அவ்வாறு கேள்வியை எழுப்பும்போது மிகஅமைதியாக கோபம் எதுவும் நமக்கு ஏற்படாமல் பாதுகாக்கவேண்டும் நம்முடைய பேச்சுத்த தொனி மோதல்போக்கு கொண்டதாக இருக்க கூடாது மேலும் பின் கதவு வழியாக சென்று நம்முடைய இந்த கருத்துகளுக்கான அவருடைய பதில்செயல் என்னவாக இருக்கும் என அறிந்துகொள்வது இதற்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும் . நம்முடைய ஆலோசனைக்கும் முயற்சிகளுக்கும் நாம் எதிர்பார்க்கும் யோசனைக்கும் இந்நிறுவனமேலதிகாரிகள் என்னவகையான ஒப்புதலை வழங்கவிருக்கிறார்கள் என நம்முடைய உடனடிமேலதிகாரிமூலம் அறிந்துகொள்ள முடியும் நம்முடை கடினஉழைப்பிற்கும் முயற்சிக்கும் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும் உடனடிமேலதிகாரி யானவர் நம்முடைய இந்த முயற்சியையும் ஆலோசனையும் கருத்தில் கொணடு நம்முடைய பதவிஉயர்வு கிடைப்பதற்கான காலங்களில் அதனை மிகவிரைவில் கிடைத்திட ஆவன செய்வதற்கான வாய்ப்பை குறிப்பால் நாம் அறிந்துகொள்ளமுடியும்

மற்றொரு வழிமுறையில் சிக்கலை தீர்வுசெய்வதற்கான யோசனைகள் நமக்கு தோன்றியவுடன் அப்படியே அதனை உடனடியாக வெளியிடாமல் தகுந்த நேரம் காலம் வரும்வரை காத்திருந்து அந்நிறுவனத்தின் ஆலோசனைகூட்டம் நடைபெறும் போது அல்லது நம்மைசுற்றி நம்மோடு பணிபுரியும் மற்ற சகபணியாளர்கள் கூட்டமாக குழுமிமற்றவர்கள் கூறுவதை கேட்கதயாரக உள்ள நேரத்தில் மட்டுமே நமது நிறுவனத்தின் சிக்கலை தீர்வுசெய்வதற்கான நம்முடைய சொந்த கருத்துக்களை கூற வேண்டும். இந்த வழியில் நம்முடைய உடனடி அதிகாரியானவர் நம்மை தட்டிகழித்து நம்முடைய ஆலோசனைகளை தம்முடையதாக காண்பித்து நமக்கு கிடைக்கவேண்டிய பாராட்டுகளை அவருடையதாக தட்டிபறிக்கமுடியாது அப்படியே இருந்தாலும், குழுமியிருந்த மற்ற பணியாளர்கள் நம்முடைய கடின உழைப்பாலும் ஆலோசனையாலும் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வுஏற்பட்டுள்ளதாக தெரிந்துகொள்வார்கள் முடிவில் நிறுவனத்தின் உயர்அதிகாரியும் இந்த மேலான உண்மையை தெரிந்து நமக்கு தகுந்த சமயத்தில் பாராட்டுதலும் தக்க சன்மானமும் அவரால் நமக்கு கிடைக்கும் நிலை ஏற்படும்.

குறிப்பு இந்த குறிப்புகள் எந்தபணியாளரும் தன்னுடைய பணியின்போது தாம் எதிர்கொள்ளும் இவ்வாறான சிக்கலை தீர்க்க உதவும் என நம்புகின்றேன்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...