திங்கள், 11 மார்ச், 2013

நம்முடைய வாழ்வில் நேர்மறையான மனப்பாங்கினை வளர்த்திட


தற்போதைய சமூக வாழ்க்கை சூழலில் நம் ஒவ்வொருவரையும் கவலைகளும் மனவருத்தமும் கும்பலாக சேர்ந்து சூழ்ந்து கொள்வதால் நம்மால் நேர்மறையான சிந்தனையை எண்ணிபார்க்கவே முடியாத நிலை ஏற்படுகின்றது மேலும் அந்நேர்மறை மனப்பாங்கினை நம்மிடம் பராமரிக்க மிகவும் கடினமானதாகவும் உள்ளது , இருந்தாலும் நாம் நேர்மறையாக சிந்திக்கலாம் என முயற்சியை மேற்கொண்டால் எதிர்மறை சிந்தனை மிகவலுபெற்று அதனை தடுக்கின்றது அதனால் பின்வரும் வகை செயல்முறையை பின்பற்றி நேர்மறையான சிந்தனையையும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெறுவதற்கான வழியை கண்டிடுக மகிழ்ச்சிக்காக காத்திருக்க வேண்டாம்.

நமக்கு மகிழ்ச்சியான வாழ்வு தானாக வரும் என காத்திருக்கவேண்டாம் அந்த மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி பணியாற்றிடுக அதாவது இன்றைக்கு நம்மைசுற்றி நல்ல மகிழ்ச்சியான சூழலை உருவாக்கினால் அது நாளை நமக்கான மகிழ்ச்சியான சூழல் தானாகவே உருவாக்கிவிடும் இதுவே ஒருநல்ல அணுகுமுறையாகும் என்றும் நல்ல நடத்தையென்றும் கூறப்படுகின்றது நாம் எப்போதும் நம்முடைய வாழ்வில் நல்ல அணுகுமுறையை அல்லது நன்னடத்தையை மேற்கொண்டால் நம்முடைய வாழ்க்கையானது சாதனைபூங்காவாக மலரும் இல்லையெனில் போராட்டமாகவே அமைந்து நம்மை வாழ்க்கை சூழலிலிருந்து வெளியேற்றிவிடும்

தெளிவுபடுத்திடுக முன்னுரிமைவழங்கிடுக நாம் என்ன விரும்புகின்றோம் என முதலில் அறிந்து கொள்க நம்மிடமிருந்து நாம் என்ன எதிர்பாக்கின்றோம் என தெரிந்து கொண்டால் நம்முடைய எதிர்காலம் மிகத்தெளிவாகவும நம்முடைய இலக்கு எளிதில் அடையக்கூடியதாகவும் இருக்கும் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வதே நம்முடைய நோக்கமாகும் அதனால் முதலில் அந்நோக்கத்தை தெளிவுபடுத்துக பின்னர் அந்நோக்கத்தை கண்டறிந்திடுக அதன்பின்னர் நம்முடைய மனதில் எதிர்காலத்தை பற்றிய கனவுகளை காட்சியாக கண்ணுற்று. நம்முடைய வாழ்க்கையின் இலக்குகளை அடைய உறுதிய செய்து கொள்க வாழ்வின் நீண்ட இலக்கான முன்னேற்ற பட்டியலை அடைவதற்காக அதனை சிறுசிறு இடைக்கால குறுகிய கால இலக்காக பிரித்து பட்டியலாக ஆக்கிகொண்டு அவை ஒவ்வொன்றையும் அடைவதற்கு குறியீட்டை நிர்ணயித்து கொள்க

நெகிழ்திறன் இந்த நெகிழ்திறன் ஆனது மக்களை விடாமுயற்சி கொண்டு ஆபத்திலிருந்து மீட்டிடவும் பாதுகாத்திடவும் செய்வதற்கான வழியை எதிர்கொள்ள செய்கின்றது , ஒரு வலுவான விடாமுயற்சியை மேற்கொண்டு, வாழ்வின் கஷ்டங்களையும் சவால்களையும் வெற்றிகொள்க; எந்தவொரு செயலிற்கு ஏற்ற எதிர் செயலை செய்திடுக , அதற்கு மாறாக அச்சம், சுய இரக்கம், தாழ்வுமனப்பான்மை அல்லது குற்றச்சாட்டிடும் மனப்பான்மை கொள்ளவேண்டாம் . வாழ்க்கை மிகவும் சவாலானதாக முடியும் போது இந்த நெகிழ்திறன் நம்முன் ஒரு முக்கியமான படிக்கல்லாக அமைந்து வலுவானதும் வாழ்க்கை சவால்களை கையாளக்க்கூடியதுமான புத்திசாலித்தன்மையை நமக்கு வழங்குகின்றது உள்நோக்கு உரையாடல் நம்மை பற்றி நமக்கு நாமே உள்நோக்கு உரையாடல் செய்து கொள்வது நமக்கான மிகப்பெரிய பலமும் நல்ல விமர்சனமும் ஆகும்.அதனால் நம்மை பற்றி ய உள்நோக்கு உரையாடலை கவனித்து அதனோடு உரையாடிடுக மற்றவர்கள் நம்மை ஊக்குவிப்பார்கள் என எதிர்பார்த்திடாமல் நமக்கு நாமே உக்குவித்துடிகு அதுவே நம்முடையஆத்மாவின் குரலாகும் அது நம்மை விமர்சனம் செய்துநம்மை ஆட்சி செய்கின்றது

எப்போதும் முகத்தில் மகிழ்ச்சி புன்முருவலோடு இருந்திடுக மனதின் கவலையை மறப்பதற்கு நகைச்சுவை சிறந்த மருந்தாகும் . அதனால் எப்போதும் கவலையை மறந்த சிரிப்பை நம்முடைய வாழ்க்கையின் பகுதியாக உருவாக்கிகொள்க. இந்த சிரிப்பு மனநிலையானது நமக்கான மகிழ்ச்சியான வாழ்விற்கு நம்மை உயர்த்தி செல்வதற்கான ஒரு காரணியென அறிந்து கொள்க. அதனால் நம்முடைய வாழ்வில் சிரிப்பு குறைந்த்தாக உணரும் போது, உடனடியாக வேடிக்கை கதைகளை அல்லது ஒரு நகைச்சுவை புத்தகங்களை படித்திடுக. எப்போதும் நம்முடைய மனநிலையை சிரிப்பு பகுதிநோக்கி திறந்திருக்க அனுமதித்திடுக. வாழ்க்கை ஒரு சிக்கலான தாகும் அதனால் வேடிக்கையான விளையாட்டு சிரிப்பு என மற்றொரு சிறந்த பகுதியையும் நம்முடைய வாழ்வில் இருக்குமாறு பார்த்து கொள்க

வெட்டியாக பொழுதை வீணாக்கவேண்டாம் எப்போதும் இப்போதைய நிகழ்காலத்தை மட்டும் மகிழ்வோடு எதிர்கொண்டு வாழ்ந்திடுக கடந்த காலத்தை பற்றிய வருத்தமோ எதிர்காலத்தை பற்றிய பயமோ தேவையில்லை அதாவது கடந்தகாலம் செயல்முடிந்துபோனதொரு வரலாறாகும் எதிர்காலம் என்பது என்ன நடக்குமோ என யாருக்கும் தெரியாதவொரு புதிராகும் ஆனால் இன்றைய நிலையே நமக்கு இயற்கை அளித்த சிறந்த பரிசாகும் அதனால் நாம் நடப்பு நிகழ்காலத்தை மட்டும் பார்த்து நன்றாக வாழபழகினால் போதும்

நேர்மறையான அணுகுமுறை பராமரித்திடுக நேர்மறையான அணுகுமுறை பராமரித்தலே ஒரு சிறந்த விதியாகும் . நம்மை பற்றி முதலில் எப்போதும் நல்ல நம்பிக்கை வேண்டும் அந்த நன்னம்பிக்கை நம்மிடம் இருப்பது நம்முடைய வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தை பார்ப்பதற்கு மட்டுமன்று. ஒரு நன்னம்பிக்கை இருக்கும் சூழலில் நம்முடைய பலங்களையும் சாதனைகளையும் அதிகரிக்கவும் நம்முடைய பலவீனங்களையும் பதட்டத்தையும் குறைக்கவும் பயன்படுத்தி கொள்கம் . அதற்காக நம்மை ஒரே நாளில் மாற்றி கொள்ளமுடியாது ஆனால் அதை பெறுவதற்கு குறைந்த பட்சம் ஒரு சிறு முயற்சியாவது மேற்கொள்க . வாழ்வில் ஒரு நேர்மறையான அணுகுமுறையானது நாம் செல்லவேண்டிய பகுதிக்கு செல்வதற்காக நமக்கு உதவுகின்றது. நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும் என்ற அந்த பயம் நம்மனதில் இருந்தால் அது நம்மை கட்டுப்படுத்தி சரியான பாதையை நோக்கி நகர்த்தி செல்லும்

என்னால் முடியும் நான் வெற்றிபெறுவேன் ! என்ற மந்திர சொல்லை எப்போதும் நினைவில் வைத்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...