திங்கள், 11 மார்ச், 2013

முக்கியபணிக்கும் உடனே செய்யவேண்டிய பணிக்குமானவேறுபாடு யாது


இன்றைய நாகரிக வாழ்க்கையில் நாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன அவற்றுள் எதனை உடனே செய்வது எதனை சிறிது காலம் தாழ்த்தி செய்வது அல்லது எது முக்கியபணி எது முக்கியமற்ற பணி என முதலில் தெரிந்து அறிந்து கொள்ளவேண்டும் .

பின்னர் அதற்கேற்ற வாறு நாம் முடிக்கவேண்டிய பணிகளை வரிசைபடுத்திடாமல் குழம்பி போய் நம்முடைய மனதில் எது சரியென தோன்றுகின்றதோ அவ்வாறே நாமும் செயல்படுகின்றோம் .

அதனால் முக்கிய மற்ற பணியை அதிக சிரமமும் காலவிரயமும் செய்து முடிக்கின்றோம் ஆனால் முக்கியமான பணியை கோட்டை விடுகின்றோம்

அதனால் முக்கியமான பணிஎன்றால் என்ன உடனடியாக செய்யவேண்டிய பணிஎன்றால் என்ன என இவைகளுக்கிடைய உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொண்டால் நாம் தெளிவாக முடிவுசெய்து அந்த பணியை முடிக்கமுடியும்

இராமேசுவரம் தீவை இணைக்கின்ற பாம்பன் பாலமானது கப்பல் கள் செல்லும்போது தூக்கி நிறுத்தவும் கப்பல் போனபின் தொடர்வண்டி இராமசுவரம் செல்வதற்காக அதே பாலத்தை கீழே தரைமட்டத்தில் படுக்கைவசமாக வைத்திடவேண்டியது ம் அங்கு காவல் பணிசெய்பவரின் அன்றாட பணியாகும்

சில ஆண்டுகளுக்கு முன் அந்த பாம்பன் பாலத்தில் பணிபுரிந்துவந்தார் காவலர் ஒருவர் சிறுகுழந்தைபருவத்தில் உள்ள தன்னுடைய ஒரேஒரு மகனை தான் பணிபுரியும் இடத்தில் வைத்து கொண்டிருந்தார் அக்குழந்தையானது அந்த பாம்பன் பாலத்தை மேலேற்றுதல் செய்வதற்கும் கீழிறக்குதல் செய்வதற்குமான பெரிய பற்சக்கரத்தில் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தார் அந்நேரத்தில் தொடர் வண்டியொன்று இராமேசுவரம் தீவிற்கு செல்வதற்காக அருகில் வந்து கொண்டிருந்தது தெரியவந்தது உடன் அக்காவலர் தன்னுடைய ஒரே மகனை தூக்கி வெளியிலெடுக்க முடியாத நிலையில் பாலத்தை கீழிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்

அந்நேரத்தில் பாசத்திற்கு உரிய ஒரு உயிர் முக்கியமா தொடர்வண்டியில் பயனம் செய்துவரும் ஆயிரக்கணக்கான உயிர் முக்கியமா என்ற கேள்வி அவர்முன் எழுந்தவுடன் ஆயிரகணக்கான அப்பாவி பயனம் செய்பவர்களே மிகமுக்கியமென கருதி உடன் தொடர்வண்டி செல்வதற்கான பாலத்தை கீழ் இறக்கினார் தொடர்வண்டியின் பயனிகள் பத்திரமாக அந்த பாம்பன் பாலம் வழியாக பயனித்து சென்றனர் ஆனால் அக்காவலரின் பச்சிளம் குழந்தையானது அந்த பற்சக்கரத்தில் நசுங்கி உயிரழந்தது

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அறிவுரை யாது எனில் முக்கியமான பணியை என்ன விலைகொடுத்தாலும் முதலில் முடித்திடவேண்டும் என்பதேயாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...