வயதான தந்தையும் அவருடைய மகனும் ஒரு வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தினர் மகன் மும்முரமாக எதோ எழுதி கொண்டருந்தார் அப்போது அவர்களின் வீட்டு தோட்டத்தில் காகம் ஒன்று காகா என கரைந்தது வயதான தந்தைக்கு காது சிறிது கேட்காது அதனால் என்னப்பா அது சத்தம் என வினாவினார் உடன் மகனும் காகம் ஒன்று கத்துவதாக கூறினார்
மீண்டும் அதே காகம் கரைந்தது மீண்டும் அது என்ன சத்தம் என அந்த தந்தை வினவியபோது மீண்டும் அம்மகன் காகம் ஒன்று கத்துவதாக கூறினார்
மூன்றாவது முறையாக அதே காகம் காகா என கத்தியது மூன்றாவது முறையாக அந்த வயதான தந்தை மகனிடம் அது என்ன சத்தம் என வினவியபோது தோ பெருசு சும்மா வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்தை விட்டுவிட்டு அதுஎன்ன இதுஎன்ன என கேள்வியெல்லாம் கேட்காதே எனக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடும் அதனை தொடர்ந்து உன்னை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவேன் என அவருடைய மகனும் கோபமாக கத்தினார்
நிரம்ப சரிமகனே நீ சிறிய வயதில் இதேபோன்று நாம் அமர்ந்து இருந்தபோது இதேபோன்றே ஒரு காகம் பத்து தடவை கத்தியது ஒவ்வொரு தடவையும் அது என்ன என நீ வினவியபோது நானும் இவ்வாறு கோப படாமல் நம்முடைய மகன் இந்த உலகை பற்றிய இதனுடைய செயல்களைபற்றி அறிந்து கொள்ளவேண்டும் என அக்கறையோடு பொறுமையாக மகிழ்வோடு பதில் கூறிவந்தேன் என அமைதியாக பதிலளித்தார்
ஆம் நாம் அனைவரும் இந்த அவசர யுகத்தில் பொறுமை யின்றி மிகவேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம்
ஆயினும் நாம் நல்ல மனிதனாக வளருவதற்காக நம்முடைய பெற்றோர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள் என்ற நன்றியுனர்வு சிறிதும் இல்லாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிடும் நன்றியுனர்வற்ற மனப்பான்மை இன்றி நாளை நமக்கும் இதே நிலைமை வரும் என்ற உணர்வும் சிறிதும் இல்லாமல் உதாசினப்படுத்துகின்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக