சனி, 22 ஜூன், 2013

நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.


முன்னொரு காலத்தில் ஒரு மரத்தின்மீது இருந்த பறவையின் கூட்டில் நிறைய மூட்டைகள் இருந்தன திடீரன ஒருநாள் வீசிய பயங்கர சூறாவளி காற்றினால்அந்த மூட்டைகள் காற்றில் அடித்துசெல்லபட்டு தரையில் வீசியெறியபட்டது அவற்றில்ஒருமுட்டைமட்டும் விழுந்த இடம் கோழிகள் வாழும் இடமாக இருந்ததால் கோழிமுட்டையுடன் இந்த பறவையின் முட்டையும் கலந்துவிட்டது

ஒரு வயதானபெட்டைகோழி தன்னுடைய முட்டைகளுடன் இந்த பறவையின் முட்டையும் சேர்த்து அடைகாத்தது. இறுதியாக மற்ற முட்டைகளிலிருந்து கோழிகுஞ்சுகள் முட்டை ஓட்டை உடைத்து கொண்டு பிறந்ததை போன்று இந்த பறவையின் குஞ்சும் அதனுடைய ஓட்டை உடைத்து கொண்டு அழகிய பறவை குஞ்சாக பிறந்தது

இது மற்ற கோழிகுஞ்சுகள்போன்றே இரைதேடவும் தரையை சீய்த்து புழுபூச்சிகளை தேடிபிடித்து உண்ணவும் அதிகபட்சம் ஓரடி உயரம் மட்டும் தாவி பறக்கவும் பயிற்றுவிக்கபட்டு அந்த செயல்களைமட்டும் செய்ய பழகி அவைகளை மட்டும் பின்பற்றி வந்தது

ஒருநாள் ஒருஅழகியபறவைஒன்று வானத்தில் வட்டுமிட்டு பறப்பதை பார்த்த இந்த பறவையின் குஞ்சானது வயதான பெட்டைக்கோழியை பார்த்து அம்மாஅதோ உயரத்தில் பறக்கின்றதே அதுஎன்னஅம்மா அதுஎவ்வாறு வானத்தில் பறக்கின்றது என வினவியபோது அது ஒரு பறவை வனத்தில் பறப்பதற்காகவே பிறந்திருக்கின்றது நாமெல்லோரும் கோழிகள் நாம் தரையில் மட்டுமே நடக்கமுடியும் அந்த பறவை போன்று நம்மால் பறக்க முடியாது பறந்து சென்று இரைதேடிட முடியாது அதனால் நாம்நடந்து சென்று குப்பைமேடுகளில் சிந்தி சிதறிகிடக்கும் தானியங்களையும் புழுபூச்சிகளையும் இரையாக உட்கொள்ளமுடியும் என அறிவரைகூறியது

அதைஅப்படியேநம்பி தானும் ஒரு கோழிமட்டுமே தன்னால் அவ்வாறு வானத்தில் பறக்கமுடியாது மேலும் பலஇடங்களுக்கு பறந்து சென்று இரைதேடமுடியாது என எண்ணி வாழ்ந்து மடிந்தது.

அதுபோன்றே நம்மில் பலர் நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...