புதன், 12 ஜூன், 2013

தகவல் தொடர்பு என்பது மிகமுக்கியமான கருவியாகும்


பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் பேரளவு தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தற்போது என்ன நிகழ்வு நடந்துகொண்டிருக்கின்றது என்றே தெரியாமலும் அறிந்து கொள்ளாமலும் இருந்துவருவார்கள் ஏனெனில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபறும் நிகழ்வுகளை பற்றிய போதுமான தகவல்கள் அவர்களுக்கு போய்ச்சேருவதில்லை

பொதுவாக எந்தவொரு நிருவாகிக்கும் தகவல் தொடர்பு என்பது மிகமுக்கியமான கருவியாகும் அதனால் மிகத்திறனுடன் அந்த தவல் தொடர்பை கையாளதெரிந்த ஒரு நிருவாகி பணிபுரியும் ஒருநிறுவனத்தில் அந்நிருவாகியில்லை யெனில் குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல் எதுவுமே நடைபெறாது என அந்த நிருவாகியினுடைய பணி அந்நிறுவனத்திற்கு அதிமுக்கியத்துவம் பெறுகின்றது

வேறுசில நிருவாகிகள் அதிக கூச்ச சுபாவமுடையவர்கள் அதனால் தம்முடைய பணியாளர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதையே தவிர்த்துவிடுவார்கள் அதாவது அந்த செயலால் தமக்கு எதிர்மறையான நிகழ்வு ஏற்பட்டவிடுமோ என்ற பயத்தில் பணியாளர்களுடன் தகவல்தொடர்பு கொள்ளவே பயப்படுவார்கள்

மற்றும் சிலர் தங்களுக்கு கீழ் பணியாளர்கள் பணிபுரிவதையே மறந்துவிடுவார்கள் அதனால் தகவல் தொடர்பு என்பதேஅவருடைய நிறுவனத்தில் இல்லாத நிலையேற்படும்

பொதுவாக ஒருநிறுவனத்தில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் உடனுக்குடன் அந்த நிகழ்வை பற்றிய தகவல் அந்நிறுவனம் முழுவதும் பரவிடவேண்டும் அப்போதுதான் அந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் தம்முடைய கடமைஎன்ன தாம் எதில் தவறவிட்டோம், மிகச்சரியான முடிவு என்ன? அதனால் நிறுவனத்திற்கு என்ன வகையான பாதிப்பு ஏற்படும்? மிக்குறைந்த வாய்ப்புகளில், மிகவிரைவாக, மேலதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு செயலையும் எவ்வாறு செய்திடமுடியும் என்பன போன்ற அனைத்து நிகழ்தகவுகளையும் அலசிஆறாய்ந்து சரியாக செயல்படஏதுவாகும்

ஒருசில பணியாளர்கள் நம்முடைய நிறுவனத்தின் வளங்களாகும். அதனால் அந்நிறுவனம் அவர்களை சார்ந்திருக்கவேண்டிய நிலைஏற்படும் வேறுசிலர் நாம் அவர்களை நமக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டியிருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது நம்முடைய வழிகாட்டுதல்களும் கண்காணிப்பும் அவசியம் இருந்துகொண்டே இருக்கவேண்டும்

அதுபோன்றே ஒருசில பணியாளர்கள் அதிக பணிஅனுபவம் இருப்பதால் அவர்களை சிறிதளவிற்கு மட்டும் மேற்பார்வை செய்தால் போதும் மற்றும் சிலருக்கு மேலாளரின் மேற்பார்வை தொடர்ந்து இருந்தால் மட்டுமே அவர்களினுடைய பணிசரியாக நடைபெறும் வேறுசிலர் அவர்கள் கூறும் செய்தியை ஆலோசனைகளை நிருவாகி காதுகொடுத்து கேட்க வேண்டும் என விரும்புவார்கள் அவ்வாறானவர்கள் தம்மை சந்திக்க வரும்போது தன்னுடைய அனைத்து செயல்களையும் தற்காலிகமாக நிறுத்தம் செய்து அவ்வாறான பணியாளர்களின் செய்தியையும் ஆலோசனைகளையும் ஒருமுகபடுத்தி கேட்டிடும்போது நிருவாகி நம்முடைய கருத்துகளை கவணிக்கின்றார் என மகிழ்வுற்று தம்முடைய பணியை திறம்பட செய்யமுயல்வார்கள்

இவ்வாறான மேலே காணும் அனைத்தையும் மனதில் கொண்டு சிறந்த தகவல்தொடர்பை பணியாளர்களுடன் ஏற்படுத்திகொள்ளும் நிருவாகியின் செயலால் அந்நிறுவனத்தை நல்ல வெற்றிபாதைக்கு அழைத்து செல்லமுடியும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...