வியாழன், 6 ஜூன், 2013

ஏழைகளை சீண்டி விளையாட வேண்டாம் அதற்கு பதிலாக அவர்களுக்க உதவிடுக


ஒரு பல்கலைகழக பேராசிரியரும் அவருடை மாணாக்கர்களும் ஒருநாள் மாலைநேரத்தில் சிறிது நேரம் காலாற அந்த ஊரின் எல்லைவரை நடந்து உலாவரலாம் என முடிவுசெய்தனர் .

அவ்வாறே ஊரின் எல்லைவரை அவர்களனைவரும் பல்வேறு செய்திகளை பற்றி விவாதித்து கொண்டு சென்றனர் அப்போது இருமுழுகாலணிகள் பாதையோரம் இருப்பதையும் அருகிலுள்ள விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளி பணிசெய்வதையும் கண்ணுற்றனர்

உடன் மாணவன் ஒருவன் ஐயா இந்த முழுகாலணிகளை நாம் மறைத்து வைத்து விட்டு அந்த மரத்தின் அருகில் நாமல்லோரும் மறைந்து இருந்த பார்ப்போம் என்ன நடைபெறுகின்றது என அறிந்து கொள்வோம் என கூறினான் உடன் பேராசிரியர் நண்பரே நம்மைவிட கீழ்நிலையிலுள்ள ஒருஏழை கூலித்தொழிலாளியை அவ்வாறு சீண்டி ஏமாற்றவேண்டாம் மற்றவர்களை துன்புறுத்தி அதிலிருந்து மகிழ்ச்சி பெறவேண்டாம் அதற்கு பதிலாக காலணி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நூறு ரூபாய் என இரு நூறுரூபாய் தாட்களை உள்ளே வைத்துவிட்டு நாமல்லோரும் மறைந்து இருந்த பார்ப்போம் என்ன நடைபெறுகின்றது என அறிந்து கொள்வோம் என கூறினார்

அதனை தெடர்ந்து அம்மாணவனும் அவ்வாறே ஒவ்வொரு காலணியிலும் ஒரு நூறு ரூபாய் வீதம் இரு தாட்களை வைத்த பின் அனைவரும் அருகிலிருந்த மரத்திற்கு பின்புறம் சென்று என்ன நடைபெறபோகின்றது என மறைந்திருந்து பார்த்தனர்

சிறிது நேரம் கழித்து அவ்விவசாய கூலித்தொழிலாளி பணிமுடிவுற்றதால் குளித்துவிட்டு வந்து தன்னுடைய கால்களில் அந்த முழுகாலணிகளை அணிய முயற்சித்தபோது இருகால்களிலும் ஏதோவருடுவதை உணர்ந்து என்னவென்று காலனிகளிலிருந்து தன்னுடையகால்களை வெளியில் எடுத்துவிட்டு பார்த்தபோது ஒவேவொரு காலணியிலும் ஒவ்வொரு நூறு ரூபாய் வீதம் இருநூறுரூபாய் இருப்பதை கண்ணுற்று சுற்றும் முற்றும் யாராவது தென்படுகின்றார்களா அல்லது இருக்கின்றார்களா என தேடிபார்த்து போதுயாரும் அவருடைய கண்ணிற்கு தென்(புலப்)படவில்லை

அதனால் உடன் அவர் தரையில் மண்டியிட்டு வணங்கி ஆண்டவரே இன்று இரவு எங்களுடைய பிள்ளைகளுடைய உணவிற்கு என்னசெய்வது என நான் தவித்து திகைத்து இருந்த வேலையில் இந்த ரூபாய் தாட்களை எனக்கு வழங்கினாய் இதனால் இன்று இரவு சமையல் செய்து பிள்ளைகளும் நானும் வயிறாற பசியாற சாப்பிடுவதற்கான வழிகாட்டிவிட்டாய் உன்னுடைய கருணையை என்னவென்று சொல்வது என மீண்டும் தரையில் விழுந்து வணங்கி அந்த ரூபாய்தாட்களை தன்னுடைய பையில் வைத்துகொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்

இதனை கண்ணுற்ற மாணவன் ஐயா உங்களுடைய வழிகாட்டுதலினால் அந்த ஏழையை சீண்டி விளையாடவிருந்த என்னை தடுத்து அவருக்கு உதவுமாறு செய்து நல்வழி காட்டினீர்கள் ஐயா என நாத்தழுதழுக்க கூறினான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...