செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திட வேண்டாம்


மனநல மனைக்கு தேவையான பொருட்களை வழக்கமாக ஏற்றிவரும் சுமைஉந்துவண்டியின் ஓட்டுநர் பொருட்களை இறக்கியபின் தன்னுடைய வண்டியின் அனைத்து சக்கரங்களின் டயர்களும் நல்லநிலையில் உள்ளதாவென சரிபார்த்தபோது ஒருசக்கரத்தில் காற்றில்லாமல் மிகமேசமாக இருப்பதை கண்டு உடனடியாக அதனை கழற்றி தயார்நிலையில் உள்ள மாற்று சக்கரத்தை மாற்றியமைக்கலாம் என முனையும்போது அந்த சக்கர்த்தை பொருத்துவதற்கான திருகாணிகள் அனைத்தும் தவறி அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடைநீரில் விழுந்துவிட்டன

அய்யோ திருகாணிகள் இல்லாமல் எவ்வாறு அந்த பழுதடைந்த சக்கரத்திற்குபதிலாக மாற்று சக்கரத்தை பொருத்துவது என தவித்து நின்றபோது அந்தவ்வழியாக ஒருநமனநலன் பாதித்த ஒருநபர் கடந்து செல்லும்போது இந்த ஓட்டுநருடைய நிலையை பார்த்து என்ன நடந்து என வினவியபோது நடந்த நிகழ்வை ஓட்டுநர் அந்த மனநிலை பாதித்தநபரிடம் கூறினார்

இந்த நிகழ்விற்காகவா கலங்கியபோய் இருக்கின்றீர்கள் பயப்படவேண்டாம் மிகுதி சக்கரங்களில் இருந்து ஒவ்வொரு திருகாணிகளை கழற்றி இதில் பொருத்தி அருகில் இருக்கும் பணிமனைவரை பத்திரமாக மெதுவாக ஓட்டிசென்றுவிட்டு அங்கு உங்களுக்கு தேவையான திருகாணிகளை வாங்கி பொருத்தி வழக்கம்போன்று ஓட்டி செல்லலாமே என பதிலிருத்ததை கண்டு அடடா அருமையான ஆலோசனையாயிற்றே இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் நீங்கள் எப்படி இந்த மனநல மருத்தவமனைக்கு வந்து சேர்ந்தீர்கள் என இந்த ஓட்டுநர் ஆச்சரியம்க கேட்டபோது நான் மனநலன் பாதித்தவனேயன்றி முட்டாள் அன்று என கூறிசென்றார்

அதாவது யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து இப்படித்தான் இருப்பார் என தவறாக முடிவுசெய்திட வேண்டாம் அவரவருடைய உண்மையான குணநலன்களையும் செயல்களையும் தெரிந்து அதன்பின் முடிவுசெய்க என்பதேயாகும்

1 கருத்து:

DHAKSHNA சொன்னது…

நம்மில் பெரும்பான்மையானவர்கள் இப்படிதான் இருக்கிறோம்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...