சனி, 12 டிசம்பர், 2015

இதில் யார் பணக்காரன்? யார் ஏழை?


நடுத்தர குடும்பத்தாய் ஒருத்தி வியாபார பணித்தொடர்பாக சென்னைக்கு தன்னுடைய மகிழ்வுந்தில் வந்து ஐந்துநட்சத்திர தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்

தங்கும் விடுதிக்குள் நுழையும்போதே அவருடைய கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது உடன் தற்போதைய. நாகரிகத்தின்படி தாய்ப்பாலை அந்த கைக்குழந்தைக்கு புகட்டாமல் புட்டிபால் புகட்டுவதற்காக அந்தஐந்துநட்சத்திர தங்குவிடுதியில் பசும்பால் கோரினால் உடன் கால்லிட்டர் பால் ரூபாய் 50.00 என்ற விலையில் வழங்கியதை தன்னுடைய கைக்குழந்தைக்கு புகட்டினார்

அன்ற சாயுங்காலம் அந்தாய் பணி முடிவடைந்தபின் தன்னுடைய சொந்தஊருக்கு நெடுஞ்சாலைவழியாக மகிழ்வந்தில் திரும்பி சென்று கின்றிருந்தபோது மீண்டும் அந்தக் கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது

உடன் சாலையோர இருந்த தேநீர் கடை ஒன்றில் வண்டியை நிறுத்தம் செய்து அந்த கைக்குழந்தைக்கான கால்லிட்டர் பால் வழங்குமாறு கோரினார் அந்த தேநீர் கடையின் வயதான சொந்தக்காரர் உடன் தேவையான பாலை அந்த தாய்க்கு வழங்கியது மட்டுமல்லாது மேலும் கால்லிட்டர் பாலை வழியில் மீண்டும் அந்தக்கைக்குழந்தை அழுதால் புகட்டிடுமாறு வழங்கினார்

இந்த பாலிற்கான விலைஎவ்வளவுஎன அந்த தாய் வினவியபோது குழந்தைகளுக்கான பாலை விலையில்லாமல் தங்களுடைய தேநீர்கடையில் வழங்குவது வழக்கமென க்கூறி அந்த தாய் கொடுத்த பணத்தை ஏற்றுக்கொள்ளமறுத்துவிட்டார் அந்த கிராமத்து வயதான தேநீர்கடை முதலாளி.

இதில்யார் பணக்காரன் யார் ஏழை என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள் மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாது உதவிசெய்வதே மனித்தன்மையாகும் என்ற நியதியை மனதில் கொள்க.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...