ஞாயிறு, 27 டிசம்பர், 2015

எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு முன் நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம்


முந்தைய காலத்தில் இராணுவத்தில் போர்பயிற்சி என்பது வில்வித்தையே முதண்மையானதாகும் அதிலும் முதன்முதல் வில்வித்தை கற்க விரும்பும் போர்விரன் தன்னுடைய கையால் வில்லையும் அம்பையும் சேர்த்து பிடித்துதயாரானவுடன் எதிரே உள்ள ஒரு பொருளை அவனுக்கு காண்பித்து அவனுடைய குருவானவர் அவனிடம் கேட்கும் முதல் கேள்வி் நீ கண்களால் என்ன காண்கிறாய் என்பதுதான் உடன் அந்த போர்வீரண் அந்த பொருளிற்கு அருகேயுள்ள மரத்தை பார்க்கின்றேன் மேலே சூரியனை பார்க்கின்றேன் தூரத்தில் ஒடும் விளங்குகள் பார்க்கின்றேன் அவைகளின் கீழே உள்ள பசுமையான நிலங்களை பார்க்கின்றேன் என விவரி்க்க ஆரம்பித்தால் ரொம்ப சரிதம்பி நீசென்று நாளைவா என அனுப்பி விட்டு அடுத்தவனிடம் இதே போன்ற கேள்வியை கேட்க ஆரம்பித்துவிடுவார்

சரியான போர்விரன் இந்த கேள்விக்கு பதிலாக அவர்குறிப்பிடும் பொருள் மட்டும் தன்கண்களுக்க புலப்படுவதாகவும் மற்றவை எதுவும் கண்ணிற்கு தோன்றவில்லை எதுவும் தோன்றவில்லை என கூறுவான் உடன் குருவும் இவனே சரியான போர்வீரண் என தெரிவுசெய்வார்

இது அந்த காலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தகூடிய கருத்தாகும் போர்விரணுக்கு மட்டுமல்லாது எந்த வொரு பணியைசெய்திடும் நம் அனைவருக்குமே இந்த கருத்து பொருந்துகின்றது எவ்வாறு எனில் நாம் எந்தவொரு செயலை செய்வதற்கு முடிவெடுத்தோமெனில் அதிலிருந்து நம்முடைய கவணத்தை திசை திருப்ப ஏராளமான நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன நம்முடைய மனமும் நிலையற்ற தன்மைமையால் அலைபாய்ந்து மாறக்கூடியதாக இருப்பதால் நாமும் நம்முடைய செயலில் கவணத்தை செலுத்திடாமல் புறக்காரணிகளால் மற்ற நிகழ்வுகளை கவணிக்க ஆரம்பித்துவிடுவோம் அதனால் நம்முடைய செயல் துவங்கபடாமலே அப்படியே இருந்துவிடும் அதனை தொடர்ந்து நாமும் நம்முடைய செயலில் வெற்றிபெறமுடியாது நின்றுவிடுவோம்

அதனால்தான் நாம் அனைவரும் நாம் எடுத்துகொண்ட நம்முடைய எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம் என உறுதி செய்துகொள்க என கோரப்படகின்றது அப்போதுதான் நாம் எடுத்துகொண்ட எந்தவொரு பணியும் முழுமையாக வெற்றிகரமாக முடிவடையும் நாம் எதிர்பார்த்த விளைவும் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை எப்போதும் மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...