வெள்ளி, 24 ஜூன், 2016

பெற்றோர்கள் அழியக்கூடிய பெருஞ்செல்வத்தை நமக்காக சேர்த்து வைக்கவில்லை என அவர்களை மதிக்காமல் அவர்களுடைய வழ்க்கைமுறைகளே நமக்கு வழிகாட்டி என உறுதி கொண்டு வாழந்திடுக


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஒருவர் தான் வாழ்வதாற்கான வீடுகூட மாடிவீடாக இல்லாமல் சாதாரன கூறைவீட்டில் தன்னுடைய இறுதிகாலத்தில் வாழ்ந்து வந்தார் தன்னுடை ய மகனுக்கு செல்வும் எதுவும் சம்பாதித்து வைத்திடாமல் நல்ல கல்வியைமட்டும் வழங்கிஇருந்தார் அவருடைய மகன் இன்னும் எந்தபணிக்கும் செல்லாமல் வேலைவெட்டியில்லாது இருந்தான்

அவர் தன்னுடைய வாழ்வின் கடைசி பயனத்தை துவங்கவிருந்தநிலையில் தன்னுடைய மகனை அருகில் அழைத்து தம்பி நீ உன்னுடைய வாழ்வில் என்னை போன்று நல்லவனாக வல்லவனாக நேர்மையானவனாக நான் வாழ்ந்தவாறு வாழ்ந்து வரவேண்டும்என அறிவுரைகூறினார்

உடன் அவருடைய மகன் போ அப்பா உங்களை மாதிரி வாழ்ந்தால் வாழ்க்கையை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் அடுத்தவேளை உணவிற்கு என்னசெய்வது என்ற இக்கட்டான நிலையில் தான் வாழவேண்டியிருக்கும் என மறுத்து கூறினான்

சரி தம்பி உன்விருப்பம் எப்போதும் நான் கூறியதை மனதில் கொண்டு வாழ்ந்தால் போதும் எனக்கூறியபின்னர் அவருடைய உயிர் பிரிந்தது

அதன்பின்னர் அவருடைய மகன் மிக சிரமமபட்டு அவரை அடக்கம் செய்து இறுதிசடங்கெல்லாம் செய்து முடித்தான் பிறகு சிறிது நாள் கழித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கிளைமேலாளர் பணியில் சேருவதற்கான நேர்முக தேர்வு கடிதம் கிடைக்கபெற்று அதில் கலந்து கொண்டான் ஆனால் அந்த நிறுவனமோ வேறு ஒருநபரை கிளைமேலாளராக பணிநியமனம் செய்வதற்கு ஏற்கனவே முடிவுசெய்து விட்டு ஒரு வழக்கமான நடைமுறைக்காக அவனுக்கும் சேர்த்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள கடிதம் அனுப்பியிருந்தது

நேர்முகத்தேர்வின்போது அந்த நேர்முகத்தேர்வு குழுவின் தலைவர் இவனுடைய பெயரையும் இவனுடைய தந்தையின் பெயரையும் கேட்டார் இவன் தன்னுடைய பெயரையும் தன்னுடைய தகப்பனாரின் பெயரையும் கூறியவுடன் அவருக்கு மிக ஆச்சரியமாகவிட்டது அதனால் அவனுடைய தந்தையின் பெயரை கூறி அவருடையு மகனா பரவாயில்லையே நல்லவனாகத்தான் இருப்பாய் இந்த பணிக்கு பொருத்தமானவன்தான் நீ

நான் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமே அவனுடைய அப்பாதான் காரணம்என்றும் அதற்காக எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்தார் என்றும் அவருடைய முகவரி போன்ற விவரம் எதுவும் தனக்குதெரியாது என்றும் அவர் தனக்கு செய்த உதவிக்கு கைமாறாக உடன் அவனை இப்போதே கிளைமேலாளராக நியமனம் செய்யவிருப்பதாகவும் தற்போது அவனுடைய அப்பா எவ்வாறு இருக்கின்றார் என வினவியபோது அவன் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது தொடர்ந்து அவனுடைய அப்பா இறந்து விட்டார் என க்கூறினான்

உடன் தேர்வு குழு உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய தந்தை இறந்ததற்காக ஓரிரு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தினர் அதனைதொடர்ந்து அவனுக்கு கிளைமேலாளர் பதவிக்கான பணிஆணையை உடன் வழங்கி அன்றே பணியில் சேருமாறு அறிவுறுத்தினர்

அவன் அப்பா உங்களுடைய பேரும் புகழையும் மதிக்காமல் பணம் மட்டுமே பெரியதாக எண்ணி அதை சேர்த்து வைக்காமல் விட்டதை மிகமரியாதை குறைவாக உங்களிடம் இறக்கும் தறுவாயில் நடந்துகொண்டேனே என அழுது புலம்பினான்

பின்னர் பதவியேற்று புதிய வீடுகட்டி குடிபுகுமுன் தன்னுடைய விட்டின் நுழைவு வாயிலில் அவருடைய உருவப்படத்தையும் அவருடையமுக்கியமா னஅறிவுரைகளையும் வைத்து வாழ்ந்துவந்தான்

நீதி பெற்றோர்கள் அழியக்கூடிய பெருஞ்செல்வத்தை நமக்காக சேர்த்து வைக்கவில்லை என அவர்களை மதிக்காமல் துச்சமாக எடுத்தெறிந்து பேசாமல் அவர்களுடைய வழ்க்கைமுறைகளே நமக்கு வழிகாட்டி என உறுதி கொண்டு நாமும் வாழ்ந்திடுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...