புதன், 7 செப்டம்பர், 2016

கூடியவரை தவறு எதுவும் செய்திடாமல் கவணமாக வாழ பழகுக


பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒருநாள் தன்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆம் பெருக்கல் வாய்ப்பாட்டினை பின்வருமாறு கரும்பலகையில் எழுதினார் :

1X 4 =2

2X 4 =8

3X 4 =12

4X 4 =16

5X 4 =20

6X 4 =24

7X 4 =28

8X 4 =32

9X 4 =36

10X 4 =40

உடன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கேலியாகவும் கிண்டலாகவும் ஆசிரியரை பார்த்து சிரித்து மகிழ்ந்தனர் ஏனெனில் இந்த 4 ஆம் வாய்ப்பாட்டின் முதலில் 1X 4 =4 என எழுவதற்கு பதிலாக 1X 4 =2 என தவறாக எழுதிவிட்டார்

உடன் ஆசிரியர் அந்த மாணவர்களை பார்த்து "மாணவர்களே இந்த வாய்ப்பாடு நான் எழுதியதிலிருந்து நீங்கள் அனைவரும் ஒரு படிப்பினை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே நான் இந்த வாய்ப்பாட்டின் முதல்வரியினை வேண்டுமென்றே தவறாக எழுதினேன் இந்த வாய்ப்பாட்டின் 1 முதல் 10 வரையிலுள்ள வரிகளை பார்த்தீர்கள் எனில் முதல் வரியை தவிர மிகுதி ஒன்பது வரியும் மிகச்சரியாக எழுதியிருந்தாலும் அந்தமுதல் வரியிலுள்ள தவறு மட்டுமே நம்முடைய கண்களுக்கு தெரிகின்றது ஆனால் யாரும் சரியான இந்த ஒன்பது வரிகளை மட்டும் ஆமோதிக்க மறுக்கின்றோம் அதே போன்று நாம் வாழும் இந்த சமுதாயத்தில் ஆயிரகணக்கான நன்மை செய்தாலும் அதனை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் ஆனால் ஒரேயொரு சிறு தவறு செய்துவிட்டாலும் அதனை ஊதி பெருக்கி பூதாகரமாக செய்து இந்த உலகமே அதனால் மட்டுமே அழியபோவதாக தவறாக செய்த நபரை கேலியும் கிண்டலுமாக பேசி ஒருவழியாக்கிவிடுவார்கள் அதனால் முடிந்தவரை கூடியவரை தவறு எதுவும் செய்திடாமல் கவணமாக வாழ பழகுங்கள்" என அறிவுரை வழங்கினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...