ஞாயிறு, 16 அக்டோபர், 2016

எளியவர்களுக்கும் உதவிடுக


ஒரு ஏழுவயது சிறுவனும் அவனுடன் அவனிடைய நான்கு வயது தங்கையும் கடற்கரையோரம் காற்றாட விளையாட சென்றார்கள் விளையாடி முடிந்தபின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பினர் அப்போது அவனுடைய தங்கைமட்டும் தொடர்ந்து நடந்துவராமல் ஒரு பொம்மை கடையில் நின்றுவிட்டது அதனால் அந்த சிறுவன் அந்த பொம்மை கடைக்கு திரும்பிபார்த்தபோது அவனுடைய தங்கையானவள் குறிப்பிட்ட ஒரு பொம்மையையே பார்த்து கொண்டு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது உடன் இந்த பொம்மைதான் உனக்கு வேண்டுமா இந்தா எடுத்துகொள்க என தன்னுடைய தங்கைக்கு எடுத்து கொடுத்துவிட்டு அந்த கடைமுதலாளியிடம் அந்த விளையாட்டு பொம்மையை வாங்குவதற்கு என்ன தரவேண்டும் என அந்த சிறுவன் வினவினான் உடன் அந்த பொம்மைகடை முதலாளியானவர் தம்பி உன்னுடைய பையில் என்னஇருக்கின்றதோ அதனை கொடு என பதில் கூறினான் உடன்அந்த சிறுவன் தன்னுடைய கால்சட்டை பையில்கையைவிட்டு கடற்கரையோரம் விளையாடும் போது சேகரித்து சேர்த்து வைத்த கிளிஞ்சல்கள் முழுவதையும் எடுத்து அந்த பொம்மை கடைகாரரிடம் கொடுத்தான் உடன் அவர் அந்த கிளிஞ்சல்களை பணத்த போன்று எண்ணிக்கை செய்து கொண்டிருந்தார் ஐயா இந்த கிளிஞ்சல்கள் அந்த பொம்மைக்கு போதுமானதாக இல்லையா அப்படியாயின் மீண்டும் நான் கடற்கரைக்கு சென்று கிளிஞ்சல்களை சேகரித்து வருகின்றேன் எனக்கூறினான் இல்லைதம்பி போதுமானதாக உள்ளது என க்கூறி பத்து கிளிஞ்சல்களை எடுத்து கொண்டு மிகுதியை அந்த சிறுவனிடமே திருப்பி அளித்தார் அந்த சிறுவர்களும் மிகமகிழ்ச்சியாக பொம்மைகடையை விட்டு தாங்கள் வாங்கிய பொம்மையுடன் சென்றனர் உடன் அங்கு பணிசெய்திடும் பணியாளர் ஐயா அந்த பொம்மைக்கான விலையை பணமாக பெறாமல் சாதாரணமான கிளிஞ்சல்களை பெற்றுகொண்டு கொடுக்கின்றீர்களே ஐயா எனவினவியபோது அந்த பொம்மை கடை முதலாளி அந்த சிறுவன் உண்மையான அன்புடன் தன்னுடைய தங்கைக்கு விரும்பிய பொம்மையை வாங்கி கொடுக்கும் அக்கறையுடன் தான் ஆசையாக சேகரித்த கிளஞ்சல்களை அதற்கு ஈடாக வழங்க முன்வரும் போது அவர்களின் ஆசையை பூர்த்தி செய்தால் வளர்ந்து பெரியவனாகும் போது இந்த நிகழ்வை மனதில் கொண்டு நம்முடைய கடையின் பெருமையை உலகிற்கு கூறுவான் அதுவே இந்த கடைக்கான விளம்பரமாகும் என பதில் கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...