ஞாயிறு, 23 அக்டோபர், 2016

நல்லத்தலைவனக்கு உரிய பண்பியல்புகள் எவை


முன்பு ஒருகாலத்தில் நம்முடைய இந்தியாவில் இருந்த ஒரு சிறிய நாட்டில் மழைஇல்லாமல் பஞ்சத்தில் மிகசிரமமாக மக்கள் வாழ்ந்து வநதனர் அதனால் அடுத்தவரும் மழைகாலத்திற்குள் ஆங்காங்கு புதிய ஏரிகளை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கின்ற ஏரிகளை தூர்வாருதல் செய்துவிட்டால் வரும் ஆண்டுகளிலாவாது மக்கள் பஞ்சமில்லாமல் வாழ்வார்கள் என அரசன் ஒருவன் தன்னுடைய இரு இளவரசர்களையும் அழைத்து இந்த பணியை இரு மாதத்திற்குள் முடிக்குமாறு உத்திரவிட்டார் உடன் மூத்த இளவரசன் நாட்டின் வடக்குபகுதியிலும் மற்றொரு இளவரசன் நாட்டின் தெற்கு பகுதியிலும் பணியை முடிப்பது என தமக்குள் பிரித்து செயல்படுத்துவது என முடிவுசெய்தனர் அதனை தொடர்ந்து மூத்த இளவரசன் அரசனின் கருவூலத்தில் இருந்து ஏராளமான பணமும் பாதியளவு நாட்டின் படைவீரர்களையும் அழைத்து கொண்டு வடக்கு பகுதிக்கு சென்று அங்கு கிராமங்களில் வாழும் மக்களையும் தன்னுடன் அழைத்து சென்றபடைவீரர்களையும் அந்த பணியில் ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு ஏராளமான அளவில் பொருட்களை அவர்கள் பணிபுரிவதற்காக வழங்கி புதிய ஏரிகுளங்களை அமைத்தல் ஏற்கனவே இருக்கும் ஏரிகுளங்களில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணியை மிகசிறப்பாக தன்னுடைய பணியை முடித்து திரும்பி வந்தார் அப்போது அரண்மனையில் அவருடைய இளைய சகோதரனுக்கு அரசனாக முடிசூட்டுவதற்கான ஏற்பாடுநடந்து கொண்டிருந்ததை கண்ணுற்றுதும் நேராக தன்னுடைய தந்தையிடம் நாங்கள் இருவருமே சமமாக பணிபுரிந்து தலைநகர் திரும்பியுள்ளபோது இளைய சகோதரனுக்கு மட்டும் அரசனாக பதவியேற்பு செய்வது சரியான செயலா அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு அரசனாக முடிசூடலாமா என கோபத்துடன் பொரிந்து தள்ளினான் மகனே அமைதியாக இரு உன்னுடைய தம்பி உன்னை போன்று அரசாங்க கருவூலத்திலிருந்து எடுத்து சென்ற பணத்தை செலவுஎதுவும் செய்யவில்லை அவ்வாறே அரசு படைவீரர்களையும் இந்த பணிக்காக பயன்படுத்தி கொள்ளவில்லை அதற்கு பதிலாக அந்தந்த கிராம மக்களையை இந்த பணிகளை முடிப்பதற்காக அவர்களாகவே முன்வந்து செய்திடுமாறு பயன்படுத்தி கொண்டது மட்டுமில்லாமல் அந்தந்த ஏரி குளங்களில் தேக்கிவைத்திடும் ஏரிகளில் நீரினை அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு பல்வேறு கால்வாய்களையும் உருவாக்கி அந்த பகுதியின் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார் அதனால் உன்னுடைய தம்பிதான் சிறந்த தலைவனுக்கு உரிய பண்பியல்புகளை யும் தகுதியையும் பெற்றுள்ளார் அதனால் அவரையே எனக்கு பிறகு அரசாளுவதற்காக அரசனாக முடிசூட்டுவதற்கு முடிவுசெய்தேன் என பதில் கூறினான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...