புதன், 19 ஏப்ரல், 2017

எதிரியின் உயிரை பாதுகாத்திடும் மனநிலை பெற்றிடுக


ஒருகாலத்தில் அரேபிய நாட்டில் தலைவர் யூசுப் என்பவர் வாழ்ந்துவந்தார் அவர் பாலைவணத்தில் தன்னுடைய கூடாரத்தில் தனியாக அமர்ந்திருந்தார் அதுஒரு இரவு நேரம் என்பதால் வானத்தில் ஜொலிக்கும் நட்சரத்தின் ஒளியை தவிர அந்த கூடாரத்தில் வேறு ஒளிவசதி எதுவும் இல்லை அவர் மிகவும் ஆழ்ந்த மனவருத்ததுடன் அமர்ந்திருந்தார் கடந்த பலநாட்களாக இரவும் பகலும் அழுதுகொண்டே இருந்ததால் அவருடைய கண்களிருந்து கண்ணீரானது ஆறுபோன்று தரையில் ஓடிக்கொண்டே இருந்தது ஏனெனில் அவருடைய ஒரேமகனான அவருக்குபிறகு அரசனாக வேண்டிய மகன் எதிரிகளால் கொல்லப்பட்டதால் அவருடைய மனதில் ஏற்பட்ட வருத்தம் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு மிகஅதிகமாக இருந்தது அதனால் அவர் வேறு எந்தவொரு பணியையும் செய்திடாமல் அப்படியே அமர்ந்தவிட்டார் அந்த சமயத்தில் புதியவன் ஒருவன் மிகவிரைவாக அந்த பாலைவணத்தில் தன்னுடைய உயிர்தப்பித்தால் போதுமென ஓடிவந்துகொண்டிருந்தான் . அப்புதியநபர் யூசுப் அமர்ந்திருந்த கூடாரத்திற்குள் உள்நுழைந்து அவருடையகாலடியில் வீழ்ந்துவணங்கி தலைவரே என்னை கொல்லுவதற்கு பல்வேறு எதிரிகள் துரத்திவருகின்றனர் அவர்களிடம் உயிர்தப்பித்தால் போதுமெனவ ஓடிவருகின்றேன் நீங்கள்தான் என்னுடைய உயிரை காப்பாற்றவேண்டும் என்னால் இந்த பாலைவணத்தில் இதற்கு மேல் ஓடமுடியாது நீங்கள் நல்ல தலைவர் என அனைவரும் கூறுகின்றனர் இன்று ஒரு இரவு மட்டும் நான் தங்குவதற்கு உங்களுடைய கூடாரத்தில் இடமளித்தால் போதும் நீங்கள் கோடிபுன்னியம் செய்தவராவீர் என பணிவாக கூறினான் ஐயா புதியவரே நீங்கள் என்னுடைய விருந்தாளி அதனால் எழுந்துவாருங்கள் இரவு உணவை உங்களுடைய வயிறார சாப்பிடுங்கள் பின்னர் இரவு நன்றாக ஓய்வெடுங்கள் எனக்கூறி அந்தநபுதிய நபருக்கு தேவையான இரவு உணவையும் ஓய்வெடுப்பதற்கான படுக்கையும் வழங்கினார் இரவு தூங்கியபின் விடியற்காலை யூசுப் ஆனவர் எழுந்து அந்த புதியநபரை எழுப்பி ஜயா எழுந்திருங்கள் சூரியன் உதித்து நல்ல வெளிச்சம் வருவதற்குமுன் இந்த இடத்தைவிட்டு சென்றுவிடுவது உங்களுக்கு நல்லது உங்களால் மேலும் நடக்கமுடியாது என்பதால் குதிரை ஒன்று உங்களுடைய பயனத்திற்கு தயாராக இருக்கின்றது இந்தாருங்கள் உங்களுடைய செலவிற்கு தேவையான பொற்காசுகள் என அந்த புதிய நபர் புறப்பட்டு செல்வதற்கு தேவையான ஏற்பாட்டுடன் அவரை புறப்பட துரிதபடுத்தினார் இந்நிலையில் அந்த புதியநபர் தலைவர் யூசுப்பை பார்த்தவுடன் இவருடைய மகனைத்தான் தான் கொன்றுவிட்டோம் ஆயினும் தன்னை பழிவாங்காமல் இரவு தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதிசெய்துகொடுத்ததுமட்டுமல்லாமல் மிகபாதுகாப்பாக செல்ல ஏற்பாடு வேறு செய்கின்றாரே என மிகவெட்கத்துடன் யூசுப்பின் கால்களில் மீண்டும் விழுந்து வணங்கி ஐயா நான்தான் உங்களுடைய மகனை கொன்றவன் இந்தாருங்கள் குறுவாள் என்னை இந்த குறுவாளால் குத்தி உங்களுடைய மகனை கொன்ற பழியை தீர்த்து கொள்ளுங்கள் என அழுது புரண்டான் யூசுப்பானவர் ஐயா புதியவரே நீங்கள் தற்போது என்னுடைய விருந்தாளி விருந்தாளியை சகமனிதன் கொல்வது நல்லதன்று மேலும் உங்களை பழிவாங்கவேண்டும் என்ற என்னமே எனக்கு துளிகூட இல்லை என்னுடைய மகன் இந்த பாலைவனத்தில் கடினமான வாழ்க்கையில் வருத்தப்படாமல் இருக்கும்பொருட்டு அவனை ஆழ்ந்த உறக்கத்தில் செல்வதற்கு உதவியுள்ளீர்கள் அதனால் இந்தாருங்கள் என கூடுதலாக மேலும் மூன்றுமடங்கு பொற்காசுகளை வழங்கி உங்களுடைய எதிரி யாரும் இங்கு வந்து சேருவதற்குள் நீங்கள் இங்கிருந்து தப்பித்து செல்லுங்கள் என்று கூறி யூசுப் ஆனவர்அந்த புதிய நபரை வழிகூட்டி பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...