வியாழன், 27 ஏப்ரல், 2017

மனிதகொல்லி புலியை கொல்லலாமா


இந்திய காடுகளில் சிங்கம் புலி போன்ற காட்டுவாழ்விளங்குகள் வாழ்ந்துவருவதே இயற்கையே அவ்வாறான விலங்குகள் மற்ற காட்டு விலங்குகளை அடித்து கொன்று தங்களுக்கு தேவையான இரையாக உட்கொள்வதும் இயற்கையே இவ்வாறான புலி ஒன்று வயதாகிவிட்டதால் காட்டில் ஓடும்விலங்குகளை பாய்ந்து சென்று பிடித்திடமுடியாமல் ஆன நிலையில் காடுகளில் தங்களுடைய தேவைக்கான காய்கணிகள் வேர்கள் விறகு போன்றவைகளை சேகரிக்க செல்லும் விலங்குகளை போன்று வேகமாகஓடமுடியாத மனிதர்களை அடித்து கொன்று உணவாக்கி கொண்டது இதனால் மனிதர்கள் அந்த காட்டிற்குள் செல்வதை தவிர்த்தனர் அதனால் அந்தபுலியானது காட்டைவிட்டு மனிதர்கள் வாழும் கிராமப்புறத்திற்குள் வந்து கிராமத்தில் வளர்க்கும் ஆடுமாடுகளையும் சிறுவர்களையும் அடித்துகொன்று சாப்பிட்டு செயலை வழக்கமாக கொண்டிருந்தது அதனால் பாதிப்புற்ற அந்த கிராமத்து மக்கள் தங்களையும் தங்களுடைய உடமையான விலங்குகளையும் காத்துகொள்வதற்காக மிகப்பிரபலமான வேட்டையாடி ஒருவரை இந்தமனிதனை கொல்லும் புலியை கொன்று தங்களுடைய கிராமத்தை காத்திடுமாறு வேண்டிகொண்டனர் அதனடிப்படையில் அந்த வேட்டைகாரர் அந்த புலியானது அந்த கிராமத்திற்கு வரும் வழி திரும்பசெல்லும் வழி ஆகியவிவரங்களை அறிந்துகொண்டபின்னர் அந்த புலிவழக்கமாக அந்த கிராமத்திற்கு வரும் வழியில்ஒரு மரத்தின் அடியில்நல்ல காளைகன்றினை கட்டிவைத்தவிட்டு மரத்தின் மேலே கையில் துப்பாக்கியுடன் காத்திருந்தார் அந்த மனிதகொல்லியான புலியானது வேட்டைக்காரன் மரத்தின் மீது தன்னை குறிவைத்து கொல்வதற்கு தயாராக இருப்பதையும் காளைகன்று மரத்தினடியில் கட்டப்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டு தூரத்திலேயே நின்றுவிட்டது வெகுநேரமாகியும் அந்த மனிதகொல்லியான புலியானது வராததால் வெறுப்புற்று சரி சாப்பிட்டுவரலாம் எனஅந்த வேட்டைக்காரன் மரத்திலிருந்து கீழே இறங்கி ஊருக்குள் சென்றார் தூரத்திலிருந்து இதனை பார்த்து கொண்டிருந்த மனிதகொல்லி புலியானது இன்று நமக்கு நல்ல இரைகிடைத்தது என மிகமெதுவாக வந்துஅந்த காளைக்கன்றை அடித்து காட்டிற்குள் இழுத்து சென்று தின்றது நல்ல உணவு கிடைத்ததால் ஒருபுதருக்கு அருகில் அப்படியே படுத்து உறங்கிவிட்டது இந்த செய்தியை கேட்டறிந்த வேட்டைக்காரன் உடன் அந்த புலி சென்றவழியை பின்பற்றி அருகே சென்றபோது அந்த புலியானது உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைபோன்று நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது . தூங்குகின்ற விலங்கினை கொல்லலாமா என மனதில் கேள்வி ஒன்று உறுத்தியது அதனால் அந்த வேட்டைக்காரன் சிறிது தயங்கினார் ஆனாலும் அது சாதாரன புலியாக இருந்தால் இவ்வாறு தூங்கிடும்போது கொல்லாமல் விட்டுவிடலாம் அது மனிதகொல்லி புலியாக இருப்பதால் தயங்ககூடாது என அதனை துப்பாக்கியால்சுட்டு கொன்றார் உடன் கிராமமக்கள் அனைவரும் வந்து பார்த்து அவரை தங்களுடைய உயிரை காத்த உத்தமர் எனவாழ்த்தி சென்றனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...