புதன், 5 ஏப்ரல், 2017

வயதான மூதாட்டியும் வங்கிகிளையின் காசாளரும்


கடந்த நவம்பர் 8,2016 பிறகு ஒரு வயதான மூதாட்டி வாழ்க்கையின் அன்றாட செலவிற்காக தன்னுடைய வங்கி கணக்கில்இருந்து ரூபாய் 500 மட்டும் எடுத்திடுவதற்காக வங்கியின் கிளைஅலுவலகத்திற்கு சென்றார் அப்போது அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளரிடம் தான் காசோலை வைத்திருப்பதாகவும் தன்னுடைய கணக்கில் இருந்து ரூபாய் 500 மட்டும் வழங்கும்படியும் கோரினார் உடன் அவ்வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் ரூபாய் 500 ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் மட்டுமே எடுக்கவேண்டும் இங்கு அவ்வளவு குறைந்த தொகை வழங்கஇயலாது என மறுத்தார் உடன் ஐயா நான் மிகவும் வயதானவள் அவ்வாறான தானியங்கி இயந்திரத்திற்கு சென்று என்னால் பணம் எடுக்கமுடியாது என மன்றாடியபோது அதுதான் எங்களுடைய வங்கியின் விதி நீங்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திற்கு சென்று பணம் எடுப்பதுதான் நல்லது நகருங்கள் வரிசையாக உங்களுக்கு பின்புறம் நிற்பவர்களின் தேவையை நான் செயற்படுத்தவேண்டும் என அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் மிகுதி எவ்வளவுதான் தொகை இருக்கின்றது எனக்கோரியபோது அவருடைய கணக்கில் ரூபாய் முப்பது இலட்சம் இருப்பதாக அந்த பணம் வழங்கும் காசாளர் கூறினார் உடன் அந்த மூதாட்டியானவர் அப்படியா ஐயா ரொம்ப நல்லது என்னுடைய வங்கி கணக்கினை இன்றே முடித்துகொள்கின்றேன் அந்த தொகை முழுவதும் இப்போதே வழங்கிடுங்கள் என மூதாட்டி கோரியபோது அவ்வளவு அதிக தொகை எடுக்கவேண்டும் எனில் வங்கிகிளைமேலாளரைத்தான் நாளை நேரில் சந்தித்து எடுத்து செல்லமுடியும் அதனால் தயவுசெய்து இடத்தை காலி செய்து என்னுடைய மற்றைய பணியை செய்யவிடுங்கள் என மீண்டு்மஅந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் இருந்து நான் தற்போது அதிகபட்சம் எவ்வளவு தொகைதான் எடுக்கமுடியும் எனக்கோரினார் அதனை தொடர்ந்து பணம் வழங்கும் காசாளர் அதிகபட்சம் தற்போது நீங்கள் ரூபாய் மூன்றுஇலட்சம் எடுக்கலாம் எனபதில் கூறியவுடன் தன்னுடைய கையிலிருந்த காசோலையில் தொகை ரூபாய் 300000 என எழுதி தன்னுடைய கையொப்பமிட்டு இப்போது அந்த தொகையை உடன் தனக்கு வழங்கிடுமாறு அந்த மூதாட்டி கோரினார் அதன்பின்னர் அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டி கோரியவாறு தொகை ரூபாய் 300000 வழங்கினார் பின்னர் அந்த மூதாட்டியானவர் அதில் ரூபாய் 500 ஐ மட்டும் தன்னுடைய பணப்பையில் எடுத்துவைத்துகொண்டு மிகுதி 299500ஐ அந்த காசாளரிடம் கொடுத்து இதனை என்னுடைய வங்கிகணக்கில் வரவு வைத்திடுக என கூறி கொடுத்தார் அதனை தொடர்ந்து அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் பதிலேதும் பேசமுடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...