வெள்ளி, 31 மார்ச், 2017

பொருட்களை விட மனித பாதுகாப்பே மிகமுக்கியமானது


முற்காலத்தில் வாழ்ந்துவந்த ஒரு அரசனுக்கு ஏராளமான அடிமைகள் சேவகர்களாக பணிபுரிந்து வந்தனர் ஒரு நாள் பக்கத்து நாட்டுக்கு முக்கிய செய்தியை நேரடியாக விவாதிப்பதற்காக அந்த அரசன் தன்னுடைய அடிமைகளுடன் குதிரைவண்டியில் பயனம் செய்தார் பயனம் செய்த பாதையானது மேடுபள்ளம் அதிகமாக இருந்தன அவ்வாறான பள்ளம் ஒன்று பாதையில் குறுக்கிட்டபோது குதிரைவண்டியானது பள்ளத்தில் இறங்கி பின்னர் மேட்டில் எகிறி ஏறி சென்றது இதனால் அந்த அரசன் கைகளில் வைத்திருந்தசிறுபெட்டியில் இருந்த முத்துக்கள் அனைத்தும் தரையில் கொட்டிசிதறிவிட்டன உடன் அரசன் தான் பயனம் செயந்துவந்த குதிரை வண்டியை நிறுத்தம் செய்து தன்னுடைய கையில் இருந்த பெட்டியலிருந்து சிதறியோடிய முத்துகள் அனைத்தையும் தேடிசேகரித்திடுமாறு உத்திர – விட்டார். அதனை தொடர்ந்து ஒரு அடிமையை தவிர மற்றவர்கள் அனைவரும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்தனர் ஒரு அடிமை மட்டும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் அரசனுக்கு அருகிலேயே பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தான் இதனை கண்ணுற்ற அரசன் தன்னருகிலேயே நின்று கொண்டிருந்த அடிமையிடம் ஏன் அவ்வாறு சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் நிற்கின்றாய் என வினவியபோது ஐயா அதைபோன்ற ஏராளமானமுத்துகள் நீங்கள் சம்பாதித்து விடுவீர்கள் அதைவிட உங்களை பாதுகாப்பதுதான் என்னுடைய தலையான பணியாகும் என பதில்கூறினான் அதனை தொடர்ந்து அந்த அடிமையை தன்னுடைய அந்தரங்க பாதுகாவலனாக தன்னுடைய வாழ்நாள்முழுவதும் பணியமர்த்தி கொண்டார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...