சனி, 4 மார்ச், 2017

எது நடந்தாலும் அது நல்லதாகவே நடக்கும்


முன்பு ஒருகாலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அரசன் ஒருவன் இருந்தான் அவனுடைய அரண்மனை வாயிலில் இரு பிச்சைக்காரர்கள் எப்போதும் நின்று பிச்சை வாங்கிகொண்டிருப்பது வழக்கமானசெயலாகும் முதல் பிச்சைகாரன் "அரசனிடம் உதவி கோருபவர்களுக்கு அரசன் உதவிடுவார்" என எப்போதும் அரசன் வெளியே செல்லும்போதும் உள்ளே அரண்மனைக்கு திரும்பிடும்போதும் கூறி கொண்டிருப்பான் ஆனால் இரண்டாமவன் "ஆண்டவனிடவனிடம் உதவி கோருபவர்களுக்கு ஆண்டவன் உதவிடுவார்" என எப்போதும் அரசன் வெளியே செல்லும்போதும் உள்ளே அரண்மனைக்கு திரும்பிடும்போதும் கூறி கொண்டிருப்பான் முதலாவது பிச்சைகாகாரன் கூறுவதை கேட்டு மகிழ்ச்சியுற்ற அரசன் ஒருநாள் உணவினை பொட்டலமாக மடித்து அதனுள் தங்க நாணயங்களை உள்பொதியவைத்து முதலாவது பிச்சைகாகாரனுக்கு பிச்சையாக இட்டுசென்றார் முதலாவது பிச்சைகாகாரனுக்கு செலவிற்கு பணம் உடனடியாக தேவைப்பட்டதால் அந்த உணவு பொட்டலத்தை இரண்டாவது பிச்சைகாகாரனுக்கு மிக குறைந்த தொகையை வாங்கி விற்றுவிட்டு தன்னுடைய பணியை கவணிக்க சென்றுவிட்டான் இரண்டாவதுபிச்சைக்காரன் அந்த உணவு பொட்டலத்தை தன்னுடைய குடிசைக்கு சென்று பிரித்து பார்த்தபோது தங்க நாணயங்கள் அதனுள் இருந்ததை கண்ணுற்று அவைகளை எடுத்து கடைகளில் விற்று அதனால் கிடைத்த தொகையை கொண்டு பிச்சை எடுத்திடும் தொழிலையே மறுநாளில் இருந்து நிறுத்திவிட்டான் ஆனால் முதல் பிச்சைகாரன் மறுநாள் வழக்கம்போன்று "அரசனிடம் உதவி கோருபவர்களுக்குஅரசன் உதவிடுவார்" என பிச்சை எடுத்து கொண்டிருப்பதை கண்ணுற்ற அரசன் திடுக்கிட்டு நின்று "என்னப்பா நேற்று நான் கொடுத்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டாயா " என வினவியபோது " இல்லை அரசே நேற்று நீங்கள் உனவு பொட்டலத்தை என்னிடம் கொடுத்து சென்றவுடன் அதனை எனக்கு அருகில் "ஆண்டவனிடவனிடம் உதவி கோருபவர்களுக்கு ஆண்டவன் உதவிடுவார்" எனக்கூறும் பிச்சைக்காரனிடம் விற்றுவிட்டேன்" என பதிலளித்தான் "அடடா அப்படியா ஆயிற்று அதுவும் நல்லதுதான்" என கூறி சென்றார் அந்த அரசன்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...