ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நம்முடைய வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய மூன்று விதிகள்


முற்காலத்தில் பணக்காரன் ஒருவன் வாழ்ந்துவந்தான் அவன் எப்போதும் பணம் பணம் என பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்துவந்தான் இந்நிலையில் ஒரு அழகான பளபளவென தங்கம்போன்று மின்னிடும் பறவை ஒன்று மரம் ஒன்றில் அமர்ந்திருப்பதை கண்டவுடன் அதனை பிடித்து விற்றால் நல்லவிலைகிடைக்கும் என அந்த வித்தியாசமான பறவையை எப்படியோ பிடித்து விட்டான் உடன் அந்த பறவையானது ஐயா என்னை ஏன் பிடித்தீர்கள் என்னை விட்டுவிடுங்கள் எனக்கதறியது உன்னை விடுவதற்கா பிடித்தேன் நீ நன்றாக பளபளவென்று தங்கம்போன்று மின்னுகின்றாய் அதனால் உன்னை நல்ல விலைக்கு விற்று மேலும் என்னால் பொருள் சேர்த்திடமுடியும் என கூறியதை தொடர்ந்து உங்களிடம்தான் ஏராளமான பணம் இருக்கின்றதே என பதில் கூறியது உடன் பணக்காரன் உன்னை விற்று மேலும் பணம் சேர்ப்பதற்குத்தான் உன்னை பிடித்தேன் அதனால் உன்னை எப்படி விடமுடியும் எனகூறினான் நீங்கள் தொடர்ந்து என்னை பிடித்து கொண்டிருந்தால் என்னுடைய தோற்றம் பார்க்க சகிக்காத மாறிவிடும் எனகூறியதை தொடர்ந்த அதனுடைய பளபளவென மின்னும் தோற்றமும் மாறிவிட்டது உடன் அவனுக்கு கோபம் அதிகமாகி உன்னை கொன்று சாப்பிட்டுவிடுகின்றேன் என கருவினான் உடன் அந்த பறவை ஐயா என்னை மன்னித்து விடுதலை செய்திடுங்கள் உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கின்றேன் என மிகவும் பரிதாபமாக கேட்டது அதனால் அந்த பணக்காரண் மனமிரங்கி சரியென விடுதலை செய்தான் உடன் அந்த பறவையும் அருகிலிருந்த மரத்திற்கு சென்று உட்கார்ந்து கொண்டு மிக்க நன்றி ஐயா உங்களுக்காக பொதுவாக மனிதர்கள் கடைபிடிக்கவேண்டிய மூன்று விதிகளை கூறுகின்றேன் எனக்கூறி முதல் விதி மற்றவர்கள்கூறும் எந்தவொரு செய்தியை அப்படியே நம்பாதீர்கள் இரண்டாவது விதி நம்முடைய கையில் கிடைத்த பொருளை விட்டுவிடாதீர்கள் மூன்றாவது நம்மிடம் இருந்த பொருளை இழந்து விட்டால் அதற்காக வருத்தபடாதீர்கள் என மூன்று விதிகளை கூறியது அந்த பணக்காரன் அடமடப்பறவையே இந்த எளிய விதிகள்தான் எங்கள் எல்லோருக்கும்தான் ஏற்கனவே தெரியுமே மேலும் அவைகளைதான் நாங்கள் அனைவரும் ஏற்கனவே பின்பற்றி வாழ்ந்துவருகின்றோமே என எகத்தாளமாக கூறினான் அப்படியா ஐயா அப்படியெனில் நான்கூறியதை நம்பினேர்களே அதுஏன் அதனை தொடர்ந்து உங்களுடைய கையில் கிடைத்த என்னை ஏன் விட்டுவிட்டீர்கள் இது இரண்டும் நான்கூறிய முதலிரண்டு விதிகளாயிற்றே அதனை பின்பற்றியிருந்தால் நான் இவ்வாறு சுதந்திரமாக மரக்கிளையில் எவ்வாறு உட்கார்ந்திருக்குமுடியும் ரொம்ப நல்லது ஐயா மூன்றாவது விதியையும் கடைபிடியுங்கள் எனக்கூறியவாறு அந்த பறவை அந்த மரத்தில் இருந்து பறந்து சென்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...