புதன், 8 பிப்ரவரி, 2017

விருந்தோம்புதல் எனும் பண்பு


ஒரு காட்டில் ஒருசமயம் கணவன் மனைவியாக இரண்டு புறாக்கள் பெரிய மரம்ஒன்றில் கூடுகட்டி வாழ்ந்துவந்தன அவை தினமும் பகல் முழுவதும் அந்த காட்டில் பறந்து சென்று தங்களுக்கு தேவையான உணவினை தேடிபிடித்து தாம்உண்டதுபோதுமிகுதியை இரவு உண்பதற்கு தங்களுடைய கூட்டிற்குஎடுத்துவருவது வழக்கமான நடைமுறை செயலாகும் இந்நிலையில் அன்று மழை நன்கு பொழிந்து கொண்டிருந்ததால் இவைகளுக்க இரை அதிகமாக கிடைக்கவில்லை பொழுது சாயும் நேரம் பெண்புறாமட்டும் கூட்டிற்கு திரும்பிவந்து சேர்ந்தது ஆண்புறா திரும்பவில்லை அடடா ஏன் இன்னும் திரும்பவில்லை ஏதாவது ஆபத்தில் மாட்டிகொண்டதா என பதைபதைப்புடன் காத்திருந்தது மழைபொழிவும் நின்றுவிட்டது அப்போது ஒரு வேடன் குளிரில் வெடவெடன நடுங்கிகொண்டு இந்த புறாக்களின் கூடு இருந்த மரத்தின்அடியில் வந்த ஒதுங்கி நின்று ஓய்வெடுக்கவிரும்பினான் அவனுடைய கையிலிருந்த கூண்டில் ஆண்புறா மாட்டிகொண்டிருந்தது அதனை கண்ணுற்ற பென்புறாவானது ஐயோ எவ்வாறு இந்த வேடன் வலையில் மாட்டிகொண்டீர்கள் எவ்வாறு உங்களை நான் காப்பாற்றுவேன் ஒன்றும் புரியவில்லையே என அழுது புலம்பியது உடன் அந்த ஆண்புறாவானது அழாதே என்னை காப்பாற்றுவதை பற்றி பின்னர் யோசிக்கலாம் இந்த வேடன் வந்திருப்பது நாம் வாழும் கூடுள்ள மரத்திற்கு அதனால் அவர் நமக்கு விருந்தாளி அவரை வரவேற்று உபசரிப்பது நம்முடைய முதல் கடமையாகும் என க்கூறியதை தொடர்ந்த பெண்புறாவானது சிறுசிறு குச்சிகளையும் இலைதழைகளையும் கொண்டுவந்து அந்த வேடன் அருகில் வைத்து நெருப்பிட்டு எரியவைத்தது பின்னர் ஐயா வேடரே நீங்கள் எங்களுடைய விருந்தாளி உங்களுடைய குளிரை போக்குவதற்குக நெருப்பினை எரியவிட்டுள்ளேன் உங்களுடைய பசியை போக்குவதற்கு இன்ற மழை பொழிந்ததால் காய்கணிகளைஎங்களால் சேகரித்து கொண்டுவரமுடியவில்லை அதனால் உங்களுடைய பசியை போக்குவதற்காக நான் இந்த நெருப்பில் பாய்ந்துவிடுகின்றேன் உடன் நெருப்பில் என்னுடைய உடல் நீங்கள் உண்பதற்கேற்ப பதமாகி விடும் அதன்பின்னர் நீங்கள் உண்டு பசியாறலாம் எனக்கூறி அந்த பெண்புறாவானது நெருப்பில் பாய தயாரானது உடன் ஐயய்யோ புறாக்களே உங்களுடைய இந்த விருந்தோம்புதல் பண்பினை புரிந்து கொள்ளாமல் நான் மடையனாக உன்னுடைய கணவனை என்னுடைய கூண்டில் பிடித்து அடைத்துவிட்டேனே எனக்கூறி உடன் அந்த ஆண்புறாவை கூண்டிலிருந்து விடுவித்துவிட்டான் வேடன் புறாக்கள் இரண்டும் அதன்பின்னர் சுதந்திரமாக வாழ்ந்த வந்தன

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...