சனி, 11 மார்ச், 2017

நம்முடைய சக்திக்கு ஏற்ப நம்மால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்திடுக


வெகு நாட்களுக்கு முன் மலையுச்சியில் பருந்து ஒன்றும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்தில் காகம் ஒன்றும் வாழ்ந்தவந்தன இந்த காகமானது அறிவில்லாத முட்டாளாகும் அதைவிட மற்றவர்கள் என்ன செய்கின்றார்களோ அதே செயலை அப்படியே தானும் போலியாக செய்திடும் மனப்பாங்கு உடையதாகும்

தினமும் மலையுச்சியில் இருக்கும் பருந்தானது ஏதேனும் உணவு இருக்கின்றதாவென தேடுவதற்காக சமதரைக்கு பறந்துவந்திடும். வெகுஉயரத்தில் இந்த பருந்து பறந்து செல்லும்போது சுன்டெலி யொன்று தன்னுடைய வலையைவிட்டு வெளியில் நடமாடுவதை தன்னுடைய கூறிய பார்வையால் கண்டுபிடித்தவிட்டது அதனால் பருந்தானது உடன் கீழே தாழ்ந்து பறந்து சென்று தன்னுடைய இரையான சுன்டெலியை அலகால் பிடித்து கொண்டு பழையபடி மேலே பறந்து சென்றது இந்த முட்டாள் காகமானது பருந்து செய்வதை பார்த்து கொண்டே இருந்த பின் ஏன் நாமும் அந்த பருந்துபோன்றே உயரத்தில் பறந்தவாறே நம்முடைய இரையை தேடி அவ்வாறு இரை கிடைத்தவுடன் கீழே தாழ்ந்த பறந்து பிடித்திடுவோமே என எண்ணியது அதனை தொடர்ந்து அந்த முட்டாள் காகமும் அவ்வாறே ஆலமரத்தில் இருந்து உயரத்தில் தன்னுடைய இரையை தேடி பறந்து கொண்டிருந்தது அப்போது பெரிய எலி ஒன்று வயல்வெளியில் இரைதேடி கொண்டிருந்ததை கண்ணுற்றதும் காகமானது தாழ்ந்த பறந்து சென்று இரையை பிடிக்க முயன்றது அதற்குமுன் காகம் தரையை நோக்கி தாழ்ந்த பறக்கஆரம்பித்ததை கண்ட பெரிய எலியானது தன்னுடைய வலைக்குள் உட்புக ஆரம்பித்தது அதனால் காகம் தன்னுடைய இரையை பிடிக்கமுடியாமல் தரையில் மோதி அதனுடைய அலகுமட்டும் காயமாகிவிட்டதா ஆ வலிக்குதே என்னசெய்வேன் என அப்படியே தரையில் வீழ்ந்ததுபின்னர் எப்படியோமுயன்று ஆலமரத்த்திலுள்ள தன்னுடைய கூட்டிற்கு பறந்து சென்றது இதே போன்று பலமுறை அந்த காகமானது பருந்து போன்று தன்னுடைய இரையை பிடிக்க முயலும்போது இரைக்கு பதிலாக தரையில் அது அடிபட்டு அதனுடைய உடலில் வலி மட்டும்தான் மிஞ்சியதே தவிர இரை எதையும் பிடிக்கமுடியாத நிலைஏற்பட்டன

இதன்பின்னர் அந்த காகமானது இவ்வாறு மற்றவர்களை போன்று போலியாக நடந்துகொள்வதை விட்டிட்டு தன்னால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்யஆரம்பித்தது அதே போன்று நாமும் நம்முடைய சக்திக்கு ஏற்ப நம்மால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...