திங்கள், 22 மே, 2017

சிறந்த மகன் யார்


முன்னொரு காலத்தில் மிகவும் பணக்கார நபர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதல் மகன் தந்தையின் சொல்லை தட்டாமல் மிககடினமாக பணிபுரிந்து மிகநல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்ந்து வந்தாதான்.. ஆனால் இரண்டாவது மகன் முதல் மகனை காட்டிலும் மிகவும் முற்றிலும் வேறுபட்டவனாக சோம்பேறியாக தந்தையின் சொல்லை கேட்டு கீழ்ப்படியாமல் உல்லாசமான வாழ்க்கை யை பின்பற்றிவந்தான் அதிலும் அவ்வாறான உள்ளாச வாழ்க்கையை தந்தையின் குறுக்கீடுஇல்லாமல் தொடர்ந்து வாழ விரும்பியதால் ஒரு நாள் இளைய மகன் தன் தந்தையிடம் . "தந்தையே, உங்களுடைய சொத்தில் என்னுடைய பங்கினை பிரித்து எனக்குக் கொடுங்கள்" என்று கோரினான் அதனை தொடர்ந்து அந்த தந்தையும் சொத்துக்களைப் பிரித்து இரண்டாவது மகனுடைய பங்கை அவனிடம் கொடுத்தார் உடன் அந்த இரண்டாவது மகன் தன்னுடைய பங்கு சொத்துகளை விற்று பணமாக எடுத்துக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி, தொலைதூர தேசத்திற்குச் சென்றான் , அங்கு கெடுதலான நண்பர்களுடனும் சேர்ந்து உணவுப் பழக்கங்களிலும், உல்லாச பொழுதுபோக்குகளிலும் தன்னுடைய பணத்தினை தண்ணீர் போன்ற கணக்கு வழக்கில்லாமல் பணத்தை செலவழித்தான் .அவனிடமிருந்த பணம் முழுவதும் வீணாகி காலியாகவிட்டதால் அவனோடு சேர்ந்திருந்த கெடுதலான நண்பர்கள் அனைவரும் அவனைவிட்டு விலகி சென்றுவிட்டனர் மேலும் அந்த பகுதியில் கொடிய பஞ்சம் வேறு வந்துவிட்டது அதனால் யாரும் அவனுக்கு உதவிசெய்திடாமல் தம்மிடம் அன்டவிடாமல் துரத்தினர் அன்றாட உணவிற்குஅல்லாட வேண்டிய நிலையில் அந்த நாட்டில்ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால்.அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.அவனுடைய நண்பர்கள் யாரும் அவனுக்கு உணவோ அல்லது அதனை பெறுவதற்கான பணத்தையோ அளிக்கவில்லை.அவன் ஏதாவது கூலிவேலையாவது செய்து தன்னுடைய உணவிற்கு தேவையானஅளவு சம்பாதிக்கமுடியாமல் தின்டாடினான் அதனால் தெருவில் சுற்றித்திரியும் பன்றிகளுக்கான உணவை மட்டும் எப்படியோபெற்று உண்டு உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்ப ட்டான் இந்நிலையில் அவன் தன்னுடைய தகப்பனாரையும் சகோதரனையும் குறித்து நினைத்து: ஏங்கினான் தன்னுடைய தகப்பன் வீட்டில் ஊழியஞ்செய்கிறவர்களுக்கு கிடைக்கும் உணவுக்கூட எனக்கு கிடைக்கவில்லையே என்றும் தகப்பனாரின் வீட்டின் வேலைக்காரர்கள் கூட எவ்வளவு சுகமாயிருப்பார்கள்; ஆனால், இங்கே நான் உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்காகவே மிகவும் போராடி வருகிறேன், அதனால் நான் இன்றே என்னுடைய தந்தையின் இருப்பிடத்திற்கு திரும்பி சென்று அவருடைய வேலைக்காரனாக என்னைக் ஏற்று காப்பாற்றுமாறு என்னுடைய தந்தையிடம் கோருவேன். " என முடிவுசெய்து தன்தையின் வீட்டிற்கு திரும்பி சென்றான் இதற்கிடையில், அவரது தந்தை எப்போதும் தனது இரண்டாவது மகனை நினைத்து கொண்டிருந்தார். அவர் ஜன்னல்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய இரண்டாவது மகன் எப்போது மனம்திருந்தி தன்னுடைய வீட்டிற்கு திரும்பிவருவான் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஒரு நாள் சன்னல் வழியாக பார்த்திடும்போது தூரத்தில் தன்னுடைய இரண்டாவது மகன் வருவதைக் கண்டார். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் வீட்டை விட்டு வெளியில் வந்து தன்னுடைய இரண்டாவது மகனை வரவேற்றார் இரண்டாவது மகன், "அப்பா, நான் உன்னுடைய மகனாக இருப்பதற்குக தகுதியற்றவன் நான் உங்களுடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாழாமல் தான்தோன்றிதனமாக வாழ்ந்த சொத்துக்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன் எனக்கு உணவிற்கு வழியெதுவும் இல்லை அதனால் என்னை உங்களுடைய வீட்டில் ஒரு வேலைக்காரணாக பணியமர்த்தி எனக்கு தேவையான உணவு.அளித்தால் மட்டும் போதும் " என அழுதுபுலம்பினான் தந்தையானவர் தன்னுடைய இரண்டாவது மகன் உயிருடன் திரும்பி தன்னிடம் வந்துசேர்ந்ததால் போதும் என தவித்துகொண்டிருந்தவர் உடன் அனைவருக்கும் நல்ல விருந்துடனும் இன்னிசையோடும் கொண்டாடிமாறு உத்திரவிட்டார் மூத்த மகன் தன்னுடைய வேலையில் இருந்து திரும்பி வந்தான். அவன் தன்னுடைய வீட்டில் இசை , நடனம் ,பாட்டொலி விருந்து என பரபரப்பாக இருந்ததால் என்னகாரணம் என தங்களுடைய வீட்டின் பணிபுரியும் வேலைக்காரன் ஒருவனை விசாரித்தபோது இரண்டாவது மகன் திரும்பி வந்த மகிழ்ச்சியை கொண்டாட தன்னுடைய தந்தையால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டு அவன் நேராக தந்தையிடம் மிககோபமாக சென்று நான் எப்போதும் உங்களுடைய உத்திரவின்படி செயல்பட்டு உங்களுடனேயே இருந்தும் எந்தவித மகிழ்ச்சியான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செயதிடாமல் தற்போது இரண்டாவது மகன் தந்னுடைய பங்கு சொத்தினை அழித்ததோடு மட்டுமல்லாது கெட்டுபோய் திரும்பிவந்ததை இவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடுவதா என கேட்டான் அதற்த அவருடைய தந்தைானவர்து, "என் மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், மிகுதியுள்ள சொத்து முழுவதும் உன்னுடையதுதான் , உன் னுடைய இளைய சகோதரன் இறந்துவிட்டான், இப்போது தான் அவன் உயிரோடு திரும்பிவந்திருக்கிறான், அதனால் நாம் இப்பொழுது அவன்மனம் திருந்தி வந்ததற்காக நாம் மகிழ்ச்சியடையவேண்டும் ?" கூறியதை தொடர்ந்து மூத்த மகன் தனது தந்தையின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள அன்பை புரிந்து கொண்டாருஇளைய சகோதரனைப் பற்றிய பழைய நிகழ்வுகளை எல்லாம் மறந்துவிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...