வியாழன், 25 மே, 2017

வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்


அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் வகுப்பு முடிந்து அறுவை சிகிச்சைக்கான நேரடி களப்பயிற்சிக்காக அதற்கான பேராசிரியருடன் பினவறைக்கு சென்றனர் அப்பிணைவறையில் இவர்களுக்கு முன்புறம் மேஜையின்மீது இறந்தபோன பிணம் ஒன்று அறுவைசிகிச்சைபயிற்சிக்காக வெள்ளைத்துனியால் மூடிதயாராகஇருந்தது அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் "அன்பான மாணவர்களே நாம் இதுவரையில் புத்தகத்தில் படித்த கல்விவேறு இப்போது நாம் செய்யவேருக்கின்ற நேரடி களப்பயிற்சி வேறுஎன்பதை மனதில் கொள்ளுங்கள் தற்போது நாமெல்லோரும்அறுவைசிகச்சை செய்யதயாராகவிருக்கின்றோம் நம்மை போன்ற அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு முதலில் சகிப்புத்தன்மை இருக்கவேண்டும் என்ற செய்தியை நன்குமனதில் கொள்ளுங்கள் மேலும் அன்புமாணவர்களே நன்கு கவணியுங்கள் நான்செய்வதை போன்று அனைவரும் செய்க" எனக்கூறி அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் பிணத்தின்முகம் இருந்தபக்கத்தில் மூடியிருந்த வெள்ளைதுணியை நீக்கினார் அந்த அந்த பிணத்தின் முகத்தில் புழுக்குள் நெளிந்தவாறு சிதைந்த நிலையில் பார்ப்பதற்கு மிகஅறுவறுப்பாக இருந்தது அவ்வாறு இருந்தபோதிலும் அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் தன்னுடைய கைவிரல்களால் தொட்டு தன்னுடைய வாயில் வைத்து சூப்பினார் பின்னர் அனைத்து மருத்துவமாணவர்களையும் அவ்வாறே செய்யுமாறு கோரினார் இது முதலாவது நிகழ்வு என்பதால் மருத்துவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அவ்வாறு செய்வதற்கு சிறிது தயங்கினர் இருந்தபோதிலும் அவர்களில் ஒவ்வொருமாணவராக தயங்கி மயங்கி அவ்வாறே அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் அவரவர்களின் கைவிரல்களால் தொட்டு தத்தமது வாயில் வைத்து சூப்பினார்கள் அவர்களுள் ஒருமாணவன் மட்டும் சிறந்த அறுவைசிகிச்சை மாணவன் என அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் தேர்வுசெய்தார் மற்றஅனைவரும் உடன் மருத்தவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அந்தவொருமாணவரைமட்டும் அந்த மருத்துவ பேராசிரியர் எப்படி தெரிவுசெய்தார் என மிகஆச்சரியமாக அவரிடம் வினவினர் "மாணவர்களே நன்கு கவணியுங்கள் என நான் கூறி என்னுடைய பணியை செய்தபோதுவேறு எந்த மாணவனும் நான் செய்த செயலை பின்பற்றவில்லை அதாவது நான் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் என்னுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு வாயில் என்னுடைய நடுவிரலை வைத்து சூப்பினேன் ஆனால் அந்த ஒருமாணவர்மட்டும் நான்செய்த செயலை மிகநுணுக்கமாக மிகச்சரியாக கவணித்து அப்படியே பின்பற்றினார் அதனால் அம்மாணவனே வெற்றியாளன் எனக்கூறினார் அதேபோன்று வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...