சனி, 28 அக்டோபர், 2017

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து சன்டைசச்சரவில்லாமல் ஒற்றுமையுடன் வாழமுயற்சி செய்க


இது ஒரு தம்பதியரின் திருமணநாளாகும் மனைவி தன்னுடைய கணவரின் வருகைக்காக காத்திருந்தார் இந்த தம்பதியரின் திருமணத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் ஏதாவது தொரு பிரச்சினைக்காக இருவரும் சண்டையிட்டுகொண்டும் ஒருவருக்கொருவர் திட்டிகொண்டும் எலியும் பூனையுமாகவே இருந்துவந்ததால் இவர்களுடைய மணவாழ்க்கை காலப்போக்கில் மிகவும் கசப்பாகவே மாறிவிட்டது அதனால் ஒவ்வொருநாளும் மிகவும் சிரமமாகவே கழித்து வந்தனர் இவ்வாறான நிலையில் அம்மனைவியின் கைபேசிஅழைப்பு மணி ஒலித்தது அவர் எடுத்தவுடன் . "வணக்கம் அம்மா நான் காவல் நிலையத்திலிருந்து அழைக்கின்றேன். "நீங்கள் 'க' என்பவரின் மனைவியா?" என கேட்டார் அதற்கு "ஆமாம் ஐயா!"என பதிலிறுத்ததும் "அம்மா நீங்கள் மனதினை தைரியபடுத்திகொள்ளுங்கள் தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது அதில் இறந்தவருடைய பணப்பையிலிருந்து நாங்கள் இந்த கைபேசி எண்ணைப் பெற்றோம், அவ்வாறு இறந்தது 'க' என்பவர்தானா என நீங்கள் நேரில் வந்து அடையாளம் கூற வேண்டும்." என்று கூறினார் உடன் 'க' என்பவரின் மனைவியானவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்! தொடர்ந்து ஐயோ !!!என்னசெய்வேன்? !!! மிகுதி நாட்களை யாருடைய துனையுடன் வாழ்வேன் ? !!! எங்களுக்கு இடையே சிறிய வேறுபாடுகள் இருந்த போதிலும் அவர் மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் என்னை விட்டுகொடுக்காமல் என்னோடு வாழ்ந்து வந்தாரே !!! என தரையில் விழந்து புரண்டு அழுதார் இவ்வாறான நிலையில் சிறிதுநேரத்தில் அவர்களுடைய வீட்டுவாயிலில் இருந்த அழைப்புமணி ஒலித்தது "ஐயோ! இன்னும் என்னென்ன தீங்கு நேர்ந்துவிட்டதோ ! "என பதைபதைப்புடன் 'க' என்பவரின் மனைவியானவர் தரையிலிருந்து மிகவும் மெதுவாக எழுந்து சென்ற வாயில் கதவினை திறந்தார் "என்னஆச்சரியம்!” நுழைவுவாயிலில் அவருடையகணவர் நின்றிருப்பதை கண்டதும்ஓடிசென்று "ஐயோ! நீங்கள் விபத்தில் அடிபட்டு இருந்துவிட்டதாக காவல்நிலையத்திலிருந்து சற்றுமுன்னர்தானே கூறினார்கள் அவ்வாறு நிகழவில்லையா பதை பதைத்து விட்டே !ரொம்ப மகிழ்ச்சி!” என ஆர்வத்துடன் அவருடைய கணவருடன் இறுக கட்டி ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக புலம்ப ஆரம்பித்தாள் அவளுடைய கணவன் "அன்பே! இன்று காலையில் போக்குவரத்து நெரிசலில் என்னுடைய பணப்பையினை திருடி கொண்டுவிட்டனர் அதில் என்னுடைய கைபேசியும் இருந்ததால் உனக்கு தகவல்எதுவம் கூறமுடியவில்லை இன்று சீக்கிரமாக வீடு்வந்து நேராக உன்னிடம் பணப்பை திருட்டு போனதை கூறலாம் என வந்து சேர்ந்தேன்" என கூறியதும் "பணப்பை போனால் பரவாயில்லை நீங்கள் நான் உயிர்வாழும் அளவும் என்னோடு இருந்தால் போதும்" என மனமகிழ்வுடன் கூறினாள் அம்மனைவி நாம் வாழ்வது சிலகாலமே அதுவரையில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து சன்டைசச்சரவில்லாமல் ஒற்றுமையுடன் வாழமுயற்சி செய்க என பரிந்துரைக்கபடுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...