சனி, 28 நவம்பர், 2020

புத்திசாலி தனமான திருடன்

 முன்பு ஒருகாலத்தின் அன்பு என்பவன் மிகவும் புத்திசாலியானதிருடனாக இருந்துவந்தான் .ஆயினும் அன்பு எப்போதும் பணக்காரர்களிடமிருந்து பொருட்களையும் பணத்தையும் திருடி வயதானவர்களுக்கும்,நோய்வாய் பட்டவர் களுக்கும் ஏழைஎளியவர்களுக்கும் அதாவது உதவி தேவைப்படுவர்கள் அனைவருக்கும் அவற்றை பிரித்து பகிரந்து வழங்குவது அன்பினுடைய வழக்கமான செயலாகும். இவ்வாறான திருடிய பொருட்களை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்ற அன்பினுடைய செயலை மற்ற திருடர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளமறுத்தனர் அதனால் அவர்கள் அனைவரும் நம்முடைய பிழைப்பை இந்த அன்பு கெடுத்துவிடுவான் அதனாஆல் அன்பு எங்காவது திருடிடும்போது காட்டிகொடுத்தல் அல்லது திருடவே முடியாத இடத்தில் திருடுமாறு செய்து இந்த திருட்டு தொழிலிலிருந்து அன்பை விரட்டிவிடவேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்தனர் .அதற்காக ஒரு நாள் அவர்கள் அன்பு என்ற திருடனிடம் அந்நாட்டு அரசன் போட்டிருக்கின்ற உடையை தங்களால் திருடி கொண்டுவரமுடியும் என்றும் அன்பினால் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுவரமுடியுமா எனவும் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுந்தால் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொள்வோம் எனும் புதிய போட்டிஒன்றிற்கு அழைத்தனர் .அந்த போட்டியை அன்பு ஏற்றுகொண்டான் அதற்கான ஆயத்த பணிகளை செய்தபின்னர் இறுதியாக, அரசனுடைய அரண்மனைக்கு சென்றான் . அப்போது அரசன் தன்னுடைய படுக்கையில் படுத்து தூங்கி கொண்டுஇருப்பதை கண்டவுடன் தன்கைவசம் நிறைய கட்டெறும்புகளை பாதுகாத்து வைத்திருந்த கண்ணாடி புட்டியின் மூடியை திறந்து விட்டான். உடன் அடைபட்டிருந்த கட்டெறும்புகள் சுதந்திரமாக வெளியேறி அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்தன.ஏராளமான கட்டெறும்புகள் அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்ததால் வலிதாளாமல் அரசன் விழித்தெழுந்து கத்தி கூப்பாடு போடஆரம்பித்தான் உடன் அரண்மனையில் பணிபுரியும் பணியாளர்கள் விரைவாக அரசனின் படுக்கை அறைக்கு ஓடிவந்து அரசனுடை உடலை கடித்து கொண்டிருந்த கட்டெறும்புகளை துடைத்து எறியத்துவங்கினர் இந்நிலையில் அன்பு எனும் திருடன் அரசனுடைய பணியாளரில் ஒருவனைன்போன்று அரசனின் உடையை கழற்றுவதற்கு உதவிசெய்து அதனை அரண்மனையுில் வேறு அறையில் வைப்பதற்கு எடுத்து செல்வதை போல நாடகமாடி அவைகளை எடுத்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி மற்ற திருடர்களிடம் கொண்டுசென்று அரசன் அணிந்திருந்த உடைகளைதான்திருடி வந்ததை காண்பித்தான். அதனை தொடர்ந்து திருடர்கள் போட்டியின் விதியின்படி மறுபேச்சு எதுவும் பேசாமல் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொண்டனர் .
எப்போதும் புத்திசாலித்தனமாக இருந்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...