ஞாயிறு, 21 நவம்பர், 2021

ஒவ்வொரு உயிரும் முக்கியம்

 


மிகவும் பொருத்தமான ஆனால் பரவலாக விவாதிக்கப்படாத "தற்கொலை".எனும் செய்தியை பற்றிஇப்போது அறிந்துகொள்வோம். இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் உயர்ந்து கொண்டே வருகிறது.


ஆயினும தற்கொலை என்பது தனிநபரின் மரணம் மட்டுமன்று நாம் வாழ்கின்ற இந்த சமூகத்தின் மரணமுமாகும்.

நாமனைவரும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் நபரை கோழை என்று அழைக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு தனிநபரின் துயரத்தை உண்மையில்ஏதோ ஒரு கடுமையான பிரச்சனையால்தான் அவர் இந்த முடிவினை எடுக்கவுள்ளார் என அமைதியாக அவருடைய பிரச்சினையை காதுகொடுத்து கேட்கின்றோம்? ஏனெனில் தற்போதைய சூழலில் நாமனைவரும் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக மாறிவிட்டோம், நம்மோடு வாழ்கின்ற மக்களின் இருப்பையே மறந்துவிட்டோம்.

தற்போது சமூக ஊடகங்கள் நம்மை அந்நியர்களுடன் மிகநெருக்கமாக கொண்டு வந்துள்ளன, ஆனால் நம்மை நம்முடைய உண்மையான நண்பர்களிடமிருந்தும் , நலன் விரும்பிகளிடமிருந்தும் பிரித்துவிட்டன.


மற்றவர்களின் பிரச்சினையைக் கேட்பது என்பது நமக்கு ஒருநேர விரயமாகின்ற செயலாகிவிட்டது. நம் தரப்பின் துயரத்தை யாராவது காது கொடுத்து கேட்க மாட்டார்களா என மனிதமனம் தேடுகின்ற ஒரு காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்துவருன்கிறோம். நாம் அனைவரும் எவ்வளவு வலுவாக மாற முயற்சி செய்யலாம் என்று பாதிக்கப்படக்கூடிய பக்கம் நம் அனைவருக்கும் உள்ளது. நாம் இருக்கும் அந்த உள்வெளியில் ஒரு சிலர் மட்டுமே உள்நுழைய முடியும்

நம்மடைய உண்மையான பாதுகாப்பின்மையை மறைக்கவும், ஆனால் சில நேரங்களில் இந்த பாதுகாப்பின்மை மிகவும் துயரத்துடன் மாறும், மேலும் நம்மைக் கேட்க யாரையும் காணாதபோது, நாம் கடுமையான ஒன்றை நினைக்கிறோம். ஆனால் ஒரு சமூகமாக நாம் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம் அல்லது அந்த நபரை கோழை அல்லது பலவீனமானவர் என்று முத்திரை குத்திவிடுகின்றோம்.

அவ்வாறு தற்கொலை செய்துகொள்கின்ற நபர் உண்மையில் அதற்கான பொறுப்பு அன்று, உண்மையில் அதற்கு நாம் வாழ்கின்ற இந்த சமூகம் முழுவதும்தான் பொறுப்பு. இது அந்த நபரின் மனப்போராட்டத்தைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் தவறிய ஒரு சமூகத்தின் கொலையாகும்.

நாம் பணத்தையோஅல்லது யதார்த்தமான செய்திகளையோ நம்முடைய சட்டைபையில் வைத்திருக்கவில்லை அவை எப்போதுவேண்டுமானாலும் கடந்து செல்லககூடும் நாம் சில உணர்ச்சிகளுடனா பிறந்தோம். ஒரு சிறு குழந்தைக்கு எப்படி சிரிக்க அல்லது அழுவது என்று யாரும் கற்பிப்ப தில்லை. . சிலரால் அந்த உணர்ச்சி வெடிப்பை சமாளிக்க முடிவதில்லை

போட்டியுடனான அவசரத்தில் ஓடிக்கொண்டேயிருக்கன்ற இந்த குருட்டு உலகில் நாம் ஒருவருக்கொருவர் அனுசரனையாக வாழ மறந்துவிட்டோம். பொருள் சார்ந்த செய்திகள் மட்டுமே நமக்கு முக்கியம் என்றும். நமக்கு அதிக பணம், அதிக வெற்றி, அதிக புகழ் வேண்டுமென, நாம்அவைகளை துரத்திகொண்டே இருக்கின்றோம் ஆனால் நாம் அதை என்ன விலையில் பெறுகிறோம்? என்பதை காணத்தவறுகின்றோம்

இந்தியாவில் உடனடி தலைவர்களையும் அல்லது போக்கிரிகளையும் உருவாக்குகின்ற மனப்பான்மை கொண்டவர்களாகிய நாம். மற்றவர்களை விமர்சிப்பதில் அல்லது மற்றவர்களின் செயல்களுக்கு தீர்ப்பளிப்பதில் நாம் மிகவும் இரக்கமற்றவர்களாக இருக்கின்றோம், மற்றவர்களுக்கும் உணர்ச்சிகள் இருப்பது என்பதையே மறந்து விடுகின்றோம்.

தேர்வில் தோல்வியடையும் போது அல்லது கனவு வேலை கிடைக்காதபோது உலகமே முடிந்துவிடாது. இவ்வாறு மனச்சோர்வடையும் போது மறறவர்களிடம் மனக்குறைகளை கூறுக, ஏதாவது எழுதுக, ஆலோசனை உதவிக்கு மனநில மருத்துவரிடம்செல்க. அதன் வாயிலாக நம்முடைய மனதையும் எண்ணங்களையும் தெளிவுபடுத்திடுக,

நம் வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பதே தவிர, நம்மிடம் இல்லாதவற்றிற்காக அதிருப்தி அல்லது சோகமாக இருக்கக்கூடாது. நாம் சம்பாதிக்கும் பொருட்களையும் பணத்தையும் விட ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முக்கியம். பணம் சம்பாதிப்பது போன்றே நம்முடைய அன்புக்குரியவர்களின், நம்முடைய நண்பர்களின் மனக்குறைகளை அறிந்து அவர்கள் தொடர்ந்து வாழுகின்ற சூழலை உருவாக்குவது மிகமுக்கியமாகும்.


திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டார் அல்லது அதிகமாகப் பேசுவார், .அல்லது நீண்ட காலமாக பேசாு இருக்கின்றார் என்றவாறு மனம் மாறிவிட்ட நம்முடைய மனநிலையை வழக்கமான நிலைக்கு கொண்டுவருவதற்காக நண்பரை நேரில் அழைத்து அவருடைய மனக்குறைகளை மனந்திறந்து பேசுகின்ற பேச்சைக் கேட்க தினமும் 10-15 நிமிடங்கள் ஒதுக்குக, அவர் மனம்திறந்து பேசுவதை காதுகொடுத்து கேட்டிடுக . இவ்வாறு சில நிமிடங்கள் ஒதுக்குவதன் வாயிலாக யாரோ ஒருவருக்கு மீட்பாளராக செயல்பட்டு அவருடைய உயிரை காத்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...