ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

ஏன் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமையவில்லை?

ஒருமுறை ஒரு பணக்காரன் புதிய விலையுயர்ந்த காலணிகளை அணிந்து கோவிலுக்குச் சென்றார். கோவிலின் முன் இருந்த போது, "கோயிலுக்குள் செல்ல, புதிய காலணிகளை கழற்ற வேண்டும், கோவிலுக்கு வெளியே விட்டால், திருடு போகலாம்... உள்ளே சென்ற பிறகும், காலணிகளை பற்றி தான் கவலைப்படுவேன். ,அப்போது  கூட நம்முடியை மனமானது கடவுளை வழிபடாது"
என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வெளியே ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்து பிச்சையெடுத்துகொண்டிருப்பதைப் பார்த்தான் பணக்காரன். பிச்சைக்காரணிடம் சென்று, "கோயிலிற்குள் நான் சென்று திரும்பும் வரை என் காலணிகளை  பார்த்து கொள்கின்றாயா?" எனக்கோரியபோது
பிச்சைக்காரன் சரி  என தலையசைத்தான்
"என்ன சமச்சீரற்ற உலகம்.. சிலர் இவ்வளவு பணம் கொடுத்து விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் வைத்துகொள்கிறார்கள், வேறு சிலரோ தாங்கள் உயிர்வாழ்வதற்கான உணவிற்கு கூட பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. எல்லோருக்கும் எல்லாப்பொருளும் சமமாககிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று எண்ணிக்கொண்டே கோயிலின் உள்ளே சென்றான் பணக்காரன்.
இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுப்பதாக மனதில் முடிவு செய்தான் பணக்காரன். கோயிலைவிட்டு வெளியே  பணக்காரன், வந்த போது அங்கே பிச்சைக்காரனோ, பணக்காரனுடைய காலணிகளோ இல்லை என்பதைக் கண்டான்.
உடன் பணக்காரன் தான் மிக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான், ஆனால் பிச்சைக்காரன் எங்காவது பிச்சையெடுக்க சென்றுஇருப்பான என பிச்சைக்காரன் திரும்பி வருவதற்கு சிறிது நேரம் காத்திருந்தான்,  நீண்ட நேரம் கழித்தும் பிச்சைக்காரன் திரும்பி வரவில்லை.
எனவே, பணக்காரன் தனது வீட்டை நோக்கி வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தான். செல்லும் வழியில், சாலையோரம் நடைபாதையில் ஒரு நபர் காலணிகளை விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அங்கு பணக்காரன்  தனது காலணிகளும் அங்கு விற்பணக்கு வைத்திருந்ததைக் கண்டான்.  அந்த விற்பனையாளரிடம் சென்று அந்த காலணிகளைப் பற்றி கேட்டபோது, முதலில் அந்த விற்பனையாளர் எவ்வாறு அந்த காலணி கிடைத்து எனும் பதிலைசொல்ல மறுத்துவிட்டான். ஆனால் பணக்காரன் கடைக்காரனை வற்புறுத்தியபோது,  "ஒரு பிச்சைக்காரன் இந்த காலணிகளுடன் என்னிடம் வந்து 1OOரூபாய்க்கு என்னிடம் விற்றுசென்றான்." எனக்கூறினான்
அந்த பணக்காரன் எதையோ யோசித்து கேட்டு சிரித்துக்கொண்டே அந்த விற்பணையாளரிடம் 1OOரூபாய் கொடுத்து தன்னுடைய காலணிகளை அணிந்துகொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான். அப்போது தான் தன் கேள்விக்கு பதில் கிடைத்ததை உணர்ந்த பணக்காரன், சமுதாயத்தில் ஏன் ஒற்றுமை இருக்க முடியாது என பின்வருமாறு தெளிவடைந்தான்.
ஏனென்றால், நமது செயல்கள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது, அது கடந்த காலத்தின், நாம் வாழும் இவ்வுலகில் வாழும்  சமூகத்தில் உள்ள அனைத்து வேறுபாடுகளும்  எதை எப்படி பெறுவது.. என்பது நம்முடைய செயல்களால் தீர்மானிக்கப்பட்டு முடிவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...