ஞாயிறு, 12 மார்ச், 2023

யார் உயர்ந்தவர் கொடுப்பவரா அல்லது பெறுபவரா?

 முன்பு பணக்காரர் ஒருவர் பெரிய தொழிற்சாலைகளுக்கு முதலாளியாக இருந்தார். ஆயினும் ஒரு நாள் அவர் தனது தொழிற்சாலைகளிலிருந்தும் வணிகங்களிலிருந்தும் வெளியேறி துறவியானார்.
 விரைவில் அவர் பிரபலமானார். அவருடைய சொற்பொழிவைக் கேட்க ஏராளமான மக்கள் கு வரத் தொடங்கினர்.
அவ்வாறான சொற்பொழிவின்போது ஒரு நாள், தான் தன்னுடைய வணிக நிறுவனத்திலிருந்து வெளியேி துறவியாக ஆக்க தூண்டியச் செய்த நிகழ்வைப் பற்றி பின்வருமாறுகூறினார்

அவர் , "ஒரு நாள் நான் எனது தொழிற்சாலையில் சுற்றி மேற்பார்வை பார்த்து கொண்டுவந்தபோது, ஒரு நாயின் மீது வாகனம் ஒன்று மோதியது, அதனால் அதன் மூன்று கால்கள் உடைந்தன, விபத்துக்குப் பிறகு அது ஒரு காலால் மட்டும் ஊர்ந்து செல்லத்துவங்கியது.
அதைகண்டு நான் மிகவும் வருந்தினேன், உடன ஒரு விலங்குகளுக்கான மருத்துவமனைக்கு அடிபட்ட நாயை எடுத்து செல்ல ஏற்பாடு செய்தேன், அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
 இதன்பிறகு இந்த நாய்க்கு தேவையான உணவு கிடைக்கும் என காண வேண்டும் என்று நான் நினைத்தேன்
 அடிபட்ட நாய்க்கு தேவையானசிகிச்சை அளித்தபின் சாலையோரம் விடபட்டது அதன்பின்னர் என்ன ஆச்சரியம் மற்றொரு நாய் வாயில் ரொட்டிதுண்டு எடுத்துவந்து அடிபட்ட நாய்க்கு கொடுத்தது.
அடிபட்ட நாயும் அந்த ரொட்டியை சாப்பிட்டு தன்னுடைய பசியாற்றிக்கொண்டது. அதன் பிறகு, மற்றொரு நாய் அடிபட்ட நாய்க்கு தினமும் ரொட்டி துண்டுகளை கொண்டு வந்து கொடுத்துது வந்தது , அடிபட்ட நாயும் விரைவில் குணமடைந்து தானாகவே நடக்கதுவங்கியது.
இந்த நிகழ்வை கண்டவுடன் எல்லோருக்கும் அவரவர்கள் உயிர்வாழத்தேவையான பொருட்கள் இயற்கையான நிகழவாக அனைவருக்கும் கிடைத்து கொண்டே இருக்கின்றன என்பதை உணர்ந்து, நாம் ஏன் இவ்வளவு தொழிற்சாலைகளுக்கு முதலாளியாக இருக்கவேண்டும் என முடிவுசெய்து அன்றே நான்  தொழிற்சாலைகள் வணிகங்கள் ஆகியவற்றினை விட்டுவிட்டு  துறவியாகிவிட்டேன்  ."
அந்த துறவியின் சொற்பொழிவை கேட்பதற்காக அங்கே அமர்ந்திருந்த  ஒருவர் இந்த விளக்கத்தை கேட்டு சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார்.தொடர்ந்துஅந்த நபர், "காயமடைந்த அந்த நாய்க்கு வேறொரு நாய் உணவு வழங்குவதை நீங்கள் பார்த்தீர்கள், ஆனால் அவ்விரண்டில்  யார் உயர்ந்தவர் உணவளித்தவரா அல்லது உணவினை பெற்றவரா?  என்பதை நீங்கள் அறிந்து  கொள்ளமுயற்சி செய்யவில்லை  ஆனாலும் மற்றவர்களுக்கு உணவளிப்பவரே உயர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லையா?
 அதைப் பார்த்த பிறகு, மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டியஉயர்ந்த நிலையலிருந்து தாழ்ந்து உங்களுடைய உணவிற்காக மற்றவர்களைச் சார்ந்து வாழத்துவங்கி அடிபட்ட நாய் போன்று ஆகிவிட்டீர்கள். முன்பெல்லாம் அடிபட்ட நாய்க்கு உணவளித்த நாய்போன்று மற்றவர்களுக்கு உணவளிக்கும்உயர்ந்த நிலையில். பலருக்கு வாழ்வளிக்கும் தொழிற்சாலைகளை நடத்தினீர்கள்.
நீங்கள் முன்பு செய்து கொண்டிருந்தது  பெரிய பணியா அல்லது இப்போது நீங்கள் செய்வது பெரிய பணியா எது உயர்ந்தது  என்று நீங்களே நினைக்கிறீர்கள்?" என பதிலுக்கு நீண்ட விளக்கமளித்தார்
இதனை கேட்டபின்னர் துறவி தனது தவறை உணர்ந்து திரும்பிச் சென்று  மீண்டும் தனது வணிகத்திலும் தொழிற்சாலையிலும் தன்னுடைய பணியை தொடர்ந்து நடத்த தொடங்கினார்.
கற்றல்:
 தற்போது நாம் செய்யும் பணியைநிறுத்தக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்க.  நாம் உழைத்து மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் நாம் உழைக்காமல் நம்முடைய  உணவிற்காக மற்றவர்களிடம் பிச்சையெடுக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...