சனி, 19 மார்ச், 2016

உண்மையான அன்புமட்டும் இருந்தால் எந்த செயலும் நடைபெறும்


ஒரு ஊரில் ஒரு எட்டுவயது பெண் இருந்தாள் அவளுக்கு இளைய சகோதரன் ஒருவன் இருந்தான் அவன் அதிக நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக இருந்தான் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்தால்தான் அவனுடைய உயரை காத்திடமுடியும் என்றும் அதற்காக பணம் அதிகம் செலவாகும்என்றும் தங்களிடம் அந்த அளவிற்கு பணம் இல்லையென்றும் ஏதாவது அதிசயம் நடந்தால் தான் அவனுடைய உயிரை காத்திடமுடியும் என்றும் அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலையுடன் விவாதித்துகொண்டிருந்தனர் இந்த செய்தியை அந்த பெண் கேட்டவுடன் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டில் அவளுக்காக ஒதுக்கிய தன்னுடைய அறைக்கு சென்று அங்கிருந்த சிறுசிறு பெட்டிகளில் தன்னுடைய பெற்றோர்கள் அவ்வப்போது அவளுக்கு வழங்கும் தொகைகளை சேமித்து வைத்திருந்தை முழுவதையும் எண்ணிக்கை செய்து பார்த்தபோது நூற்று பத்துரூபாய்மட்டும் இருந்தது அந்த பெண் அந்த தொகைமுழுவதையும் எடுத்து கொண்டு நேராக அடுத்த தெருவில் இருந்த மருந்து விற்பணை செய்திடும் கடைக்கு சென் றாள் அங்கு ஏராளமான மக்கள் அந்த மருந்து கடைக்கு வந்து மருந்து களை வாங்கி சென்றுகொண்டிருந்தனர் அந்த கடையின் விற்பணையாளர் அந்த சிறு பெண்ணை திரும்பி கூட பார்க்கமுடியாத வாறு பரபரப்பாக தன்னுடைய பணியை செய்துகொண்டிருந்தார் அந்த பெண் அவருடைய கவணத்தை ஈர்ப்பதற்காக செருமினாள் உடன் அந்த விற்பணையாளர் என்னம்மா வேண்டும் என வினவியவுடன் ஐயா உங்களுடைய மருந்துகடையில் அதிசயம் இருக்கின்றதா என வினவினாள் உடன் அந்த மருந்து விற்பணையாள் தன்னுடைய மற்ற பணியை விட்டுவிட்டு அந்த பெண்ணை என்னவேண்டும் மீண்டும் சொல் என கோரினார் மருந்து வாங்கிட வந்தவர்களும் அந்த தெருவில் சென்ற நபர்களும் இதனை வேடிக்கை பார்க்கதுவங்கினர் ஐயா என்னுடைய தம்பி உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கின்றான் அவனுக்கு பெரிய அறுவைசிகிச்சை செய்தால் தான் உயிர்பிழைப்பானாம் அல்லது அதிசயம் கிடைத்தால்தான் உயிர் பிழைப்பான் எனஎங்களுடைய பெற்றோர்கள் விவாதித்தனர் அதனால் அந்த அதிசயத்தை நான் உங்களுடைய கடையில் வாங்கி செல்லவந்தேன் என விவரமாக அந்த பெண் கூறினாள் உடன் அந்த மருந்த கடை விற்பணையாளர் உண்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என கோரியபோது உடன் இதோ என்னுடைய முழு சேமிப்பு தொகையான ரூபாய் நூற்று பத்து மட்டும் உள்ளது என கைகளில் காட்டினாள் அந்த சமயத்தில் அங்கு வந்த மருத்துவர் உடன் அந்த பெண்ணிடம் உங்களுடைய வீட்டினை காண்பி நான் வந்த உன்னுடைய தம்பியை பார்த்து அந்த அதிசயத்தை தருகின்றேன் எனக்கூறினார் உடன் அவர்களுடைய வீட்டிற்கு அந்த பெண் அந்த மருத்துவரை அழைத்து சென்றாள் அதன்பின்னர் அந்த மருத்துவர் அந்த பெண்ணின் உண்மையான அன்பிற்காக தொகை எதுவும் பெற்றுகொள்ளாமல் அவளுடைய தம்பிக்கு அறுவைசிகிச்சை செய்து அவளுடைய தம்பியின் உயிரை காத்தார் உண்மையான அன்புமட்டும் இருந்தால் எந்த செயலும் நடைபெறும் எனஇதன்மூலம் அறிந்துகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...