சனி, 26 மார்ச், 2016

தவறான நம்பிக்கையை விடுத்துமுயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம்


நெடுஞ்சாலையோரம் இருந்த கிராமப்பகுதியில் யானை ஒன்று சிறு கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது அந்த யானையும் நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருந்தது அந்த வழியாக சென்ற வழிபோக்கன் ஒருவன் . இந்த யானையை பார்த்து மிக ஆச்சரியத்துடன் "என்னடா இது இவ்வளவு பெரிய யானையை மிகச்சிறிய கயிற்றினால் அதனுடைய ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளனர் அந்த யானையும் அதனை கட்டிய சிறு கயிற்றினை அறுத்துகொண்டு செல்லாமல் அப்படியே நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருக்கின்றது" என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவ்விடத்தில் இருந்த யானைப்பாகனிடம் "ஐயா இவ்வளவு பெரிய யானையை மிகவும் சிறிய கயிற்றினால் ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளீர் இந்த யானையும் அந்த சிறிய கயிற்றினை அறுத்து கொண்டு செல்லாமல் அப்படியே நின்றுஅசைந்துகொண்டுமட்டும் உள்ளதே ஏன்?” என வினவினார் . " ஐயா இந்த யானை சிறிய குட்டியாக இருக்கும் போது இந்த சிறிய கயிற்றால் கட்டி பிடித்து அழைத்து கொண்டு செல்வதும் பின்னர் இந்த கட்டுத்தறியில் கொண்டுவந்த கட்டிவிடுவதும் வழக்கம் குட்டியானையால் அந்த கயிற்றினை அறுத்து செல்லமுடியாது அதே பழக்கத்தில் தற்போது யானை பெரியதாக வளர்ந்துவிட்டாலும் தன்னால் இந்த கயிற்றினை அறுத்து கொண்டு செல்லமுடியாது என நம்பிகொண்டுஅப்படியே நின்றஇடத்தில் அசைந்து கொண்டுமட்டும் உள்ளது"

அதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்வில் நாம் செய்திடும் செயலில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் அதனை தொடர்ந்து நம்மால் அந்த குறிப்பிட்ட செயலை செய்யமுடியாது செய்து வெற்றி கொள்ள முடியாது என நம்முடைய மனத்தில் தவறான நம்பிக்கை ஆழபதிந்துவிடும் அதன்பின்னர் நாமும் அந்த தவறான நம்பிக்கையிலிருந்து விடுபட்டு குறிப்பிட்ட செயலை செய்து வெற்றி கொள்வதற்காக மீண்டும் முயற்சி செய்யாமல் நம்மால் வெற்றிபெறமுடியாது என தவறாக நம்பிக்கொண்டு செயலை செய்திடாமல் விட்டுவிடுவோம் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...