வியாழன், 21 ஜூலை, 2016

மனிதன் முதலில் தத்தமது உடல்நலனை சரியாக பராமரித்துவந்தால்தான் மற்றவர்களுக்கு உதவமுடியும்


ஒருகிராமத்தில் நாம் காலில் அணியும் காலணிகளை உருவாக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார் அவர்மட்டும் தான் அந்த ஊரிலுள்ளஅனைவருக்குமான காலணியை உருவாக்குபவர் அதனால் அந்த கிராமத்தில் இருந்த அனைவருக்குமான காலணியை அவர் மட்டுமே தைத்து வழங்குவதால் அந்த தொழிலாளியால் நாள்முழுக்க பணிசெய்தாலும் இந்த பணியை செய்துமுடிக்கஇயலாத நிலையில் இருந்தார் ஆனால் இவ்வாறான வேலைபளுவால் அந்த தொழிலாளி தனக்கு மட்டும் தேவையான காலணியை செய்து அணிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தார் அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் உடன் வாழும் மக்கள் அனைவரும் முதலில் உங்களுடைய காலிற்கான காலணியை செய்து அணிந்து பணிபுரிந்தால்தான் உங்களுடைய உடல்நிலை நலமாக இருக்கமுடியும் அதனடிப்படையில் மற்றவர்களுக்கு தேவையான காலணிகளை உங்களால் செய்து வழங்கமுடியும் என அறிவுரை கூறியும் அவர் அதனை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை அதனை தொடர்ந்து அவருடைய கால் பழுதாகி அவரால் நடக்கமுடியாத அளவிற்கு காலையே வெட்டி எடுத்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது அதனால் அந்த தொழிலாளியால் அந்த கிராமத்து மக்களுக்கு தேவையான காலணியை செய்து கொடுக்கமுடியாத நிலையில் இருந்தார் அதன்காரணமாக ஊர்மக்கள் அனைவருக்கும் தேவையான காலணி அவரால் உருவாக்கமுடியாததால் மக்கள்அனைவரும் தத்தமது கால்களில் காலணி அணிந்திடாமல் நடப்பதற்கு சிரமபட்டனர் இவ்வாறே பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், தலைவர்கள் ,அரசாள்பவர்கள் ஆகியோர் முதலில் தங்களுடைய உடல்நலனை சரியாக பராமரித்துவந்தால்தான் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்ற அடிப்படை செய்தியை தெரிந்து அதன்படி செயல்படுவது நல்லது என அறிவுறுத்தபடுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...