ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதே மனித தன்மையாகும்


ஒருமனிதன் வயதான கிழவி நடத்தும் பழக்கடையில் தினமும் ஒருகிலோ கொய்யா பழம் அல்லது ஆரஞ்சு பழம் வாங்குவது வழக்கமாகும் ஆனாலும் வாங்கியவுடன் ஒருபழத்தை எடுத்து கடித்துவிட்டு அந்த பழக்கடைகார கிழவியிடம் அம்மா உங்களிடம் வாங்கிய பழம் சுவையாக இல்லை வேண்டுமானால் இந்த பழத்தை தின்று பாருங்கள் என தான் அவர்களிடம் வாங்கிய பழங்களில் ஒன்றை எடுத்து கொடுத்து அந்த பழக்கடைகார கிழவியிடம் தின்று ருசி பார்க்குமாறு கூறுவார் உடன் அந்த பழக்கடைகார கிழவியும் அவரிடமிருந்து பழம் ஒன்றை வாங்கி கடித்து தின்று பார்த்து விட்டு இந்த பழம் சுவையாகத்தானே உள்ளது வீட்டிற்கு எடுத்து சென்று உங்களுடைய பிள்ளைகளுக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுங்கள் என பதிலளிப்பார் இவ்வாறான நிகழ்வு தினமும் நடந்துகொண்டிருந்தது அவருடன் வரும் அவருடைய குடும்ப உறுப்பினர் தங்களுடைய வீட்டிற்கு சென்றபின்னர் ஏன் தினமும் பழக்கடைகார கிழவியிடம் பழத்தை வாங்கியவுடன் ஒரு பழத்தை நீங்கள் கடித்து பார்த்துவிட்டு மற்றொன்றை அந்த பழக்கடைக்கார கிழவியிடம் கொடுத்து கடித்து தின்று பார்க்குமாறு கூறுகின்றீர்கள் என வினவினார் உடன் அவர் அந்த பழக்கடைகார கிழவி-யானவர் இவ்வளவு பழங்களை தன்னுடைய கடையில் விற்பணை செய்தாலும் ஒருபழம் கூட தனக்கு வேண்டுமென எடுத்து தின்று பசியாறுவதில்லை அதனால் நான் வாங்கு கின்ற பழத்திலாவது ஒன்றை அந்த அம்மா தின்று பசியாறட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு செய்வதாக கூறினார் இதேபோன்று அந்த கிழவியின் பழக்கடைக்கு அருகிலுள்ள மற்றொரு கடைகாரன் அம்மா தினமும் அந்த மனிதர் உங்களிடம் ஒருகிலோ பழம் வாங்குகின்றார் வாங்கியவுடன் ஒருபழத்தை எடுத்து தின்றுவிட்டு சுவையாக இல்லை எனக்கூறி மற்றொன்றை உங்களிடம் கொடுத்து கடித்து தின்று பார்க்குமாறு கூறுகின்றார் ஏன் இவ்வாறான நிகழ்வு தினமும் நடைபெறுகின்றது என வினவினார்

உடன் அந்த பழக்கடை கிழவியும் நானும் பலநாட்களாக இந்த மனிதனில் செயலை பார்த்தேன் அந்த மனிதன் தன்னுடைய பழத்தில் இருந்து எனக்கு கொடுப்பதாக எண்ணி கொண்டு அந்த மனிதன் பழம் ஒன்றை எனக்கு கொடுத்து கொண்டு உள்ளார் உண்மையில் நான் அவருக்கு விற்பணை செய்திடும் பழங்களை எடை போடும்போது மட்டும் உண்மையான எடையைவிட எனக்கு கொடுக்கும் பழம் ஒன்றையும் கூடுதலாக சேர்த்து எடையிட்டு அவரிடம் கொடுத்து விடுகின்றேன் ஆனால் அவர் தன்னுடைய பழத்தை எனக்கு கொடுப்பதாக மனதி்ற்குள் எண்ணிக் கொள்கின்றார் அவ்வாறெல்லாம் இல்லை என பதில்கூறினார் அந்த பழக்கடைக்கார கிழவி

நீதி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதே மனித தன்மையாகும் என இதிலிருந்து அறிந்துகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...