ஞாயிறு, 24 ஜூலை, 2016

சிங்கப்பூரின் வாடகைமகிழ்வுந்தின் ஓட்டுநர்


வெளிநாட்டு பயனி ஒருவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார் அங்கு அவசரமாக குறிப்பிட்ட இடத்திற்கு போகவேண்டியிருந்ததால் வாடகைமகிழ்வுந்தில் சென்றார் அந்த வண்டியின் ஓட்டுநர் பயனம் துவங்கும்போது பயனதூரம் அதற்கான வாடகை தொகை ஆகியவற்றை காண்பிக்கும் கருவியை செயல்படசெய்தார்

பின்னர் குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அந்த கருவியில் 110 டாலர் என காண்பித்தது உடன் வெளிநாட்டு பயனியும் 110 டாலரை தன்னுடைய பையிலிருந்து எடுத்து ஓட்டுநரிடம் கொடுத்தார்

ஆனால் அந்த ஓட்டுநர் "வாடகை தொகையாக எனக்கு 100 டாலர் மட்டும் கொடுத்தால் போதும் ஐயா" என 100 டாலர் மட்டும் வாங்கி கொண்டார் "என்ன ஓட்டுநரே பயனதூரம் காண்பிக்கும் கருவியில் 110 டாலர்தானே கணக்கிட்டு காண்பிக்கின்றது" என வெளிநாட்டு பயனி வினவியபோது

"இல்லை ஐயா இந்த இடத்திற்கு நேர்வழியில் வந்தால் 100 டாலர் மட்டுமே அந்த கருவி கணக்கிட்டு காண்பிக்கும் . ஆனால் அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் விரைவில் உங்களை இங்கு கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்ற அவசரத்தை கருதி போக்கு வரத்து நெரிசல் இல்லாத சுற்றுவழியில் இன்று கொண்டு வந்து சேர்த்தேன் அதனால் கணக்கிடும் கருவி அதிக தொகையை காண்பிக்கின்றது" என பதில் கூறியதை தொடர்ந்து ஓட்டுநரின் அந்த பதிலால் திருப்தியுற்று அந்த வெளிநாட்டு பயனியும் அடுத்தபணியை செய்வதற்குசென்றார்

அந்த ஓட்டுநருக்கு குறைந்த அளவே கல்வி அறிவு இருந்தபோதிலும் வெளிநாடுகளில் தம்முடைய நாட்டை பற்றிய தவறான எண்ணம் ஏற்படக்கூடாது என இந்த ஓட்டுநர் நடந்துகொண்டார் இதுதான் உண்மையான ஒரு நாட்டின் ஒவ்வொரு மனிதனின் மிகச்சரியான செயலாகும் தன்னுடைய வாழ்க்கைக்கு பணம் மட்டுமே முக்கியமன்று நாட்டின் கெளரவமே முக்கியம் என அந்த ஓட்டுநர் நடந்து கொண்டதே மிகச்சரியான செயலாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...