திங்கள், 30 ஏப்ரல், 2018

பொய் பேசினாலும் பொருத்தமாக பேசுக


ஒரு இரவு கல்லூரியில் பயிலும் நான்கு கல்லூரி மாணவர்கள் அடுத்தநாள் நடக்கவிருக்கும் மாதாந்திர தேர்விற்கு தயார்செய்திடாமல் இரவு விருந்தில் கலந்து கொண்டு வீணாக கழித்துவிட்டு அடுத்த நாள் காலையில் அழுக்குடன் கூடிய ஆடையைஅணிந்து கொண்டு "நேற்று இரவு எங்களுடைய நண்பனின் திருமணத்திற்கு சென்று தாங்கல் சென்றுதிரும்புவதற்கு பயன்படுத்திய காரின் டயர் வெடித்து விட்டதால் கைகளால் அந்த காரினை இரவு தூங்காமல் தள்ளிக்கொண்டே வந்து காலையில் தான் வந்த சேர்ந்தோம் அதனால் எங்களால் இன்றைய தேர்விற்கு தயாராக முடியவில்லை வேறு நாளிற்கு இந்த தேர்வினை தள்ளிவைத்தால் நல்லது ஐயா!” என கல்லூரி முதல்வரிடம் வேண்டிகேட்டு கொண்டனர் இவர்களுடைய தோற்றத்தை பார்த்த அக்கல்லூரிமுதல்வர் இவர்களிடம்உண்மைநிலையை எவ்வாறு அறிந்து கொள்வது என .யோசித்து பின்னர் சரி தம்பிகளா நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்வதாக இருந்தால் நான் கூறுமாறு செய்திடுங்கள் என நான்கு கல்லூரிமாணவர்களையும் தனித்தனிய அறையில் உட்கார வைத்து ஒரு வெள்ளைதாளில் அவர்களனைவரும் சென்றுவந்த காரின் டயர் எத்தனைமணிக்கு எந்தஇடத்தில் வரும்போது வெடித்தது அவ்வாறு வெடித்த டயர் முன்பகுதி சக்கரங்களெனில் எந்தபக்கசக்கரத்தினுடையது பின்பகுதி சக்கரங்களினெனில் எந்தபக்கசக்கரத்தினுடையது என தனித்தனியாக பதிலெழுதி வருமாறுகோரினார் உடன் அந்த கல்லூரி மாணவர்கள் நால்ரும் தங்களுடைய குட்டுவெளிப்பட்டுவிட்டதால் தங்களை மன்னிக்குமாறு கோரினர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...