வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

மற்றவர்களின் மனம் புண்படுமாறு கின்டல் செய்யாதீர்


கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் சிலர் குழுவாக இந்திய நாட்டின் தலைநகரான புதுதில்லிக்கு சுற்றலா சென்றிருந்தனர் அங்கு முக்கியமான இடங்களை சுற்றிபார்ப்பதற்கு பஞ்சாபி நபர் ஒருவரின் வாடகை வண்டியை அமர்த்தி கொண்டு தங்களுடைய பயனத்தை துவக்கினார் பஞ்சாபிநபரின் தலைப்பாகையையும் தாடியையும் பார்த்தவுடன் இளைஞர்கள் சர்தர்ஜி ஜோக்குகளை நாள்முழுவதும் சொல்லி கிண்டலும் கேலியுமாக சிரித்து பேசி கும்மாளமிட்டவாறு பார்க்கவேண்டிய இடங்களை பார்த்து கொண்டு தங்களுடைய பொழுதை கழித்தனர் ஆயினும் அந்த வாடகைவண்டியின் வண்டியோட்டுநர் இந்த இளைஞரகளின் கிண்டல் கேலி பேச்சுகளை காதில் கேட்டாலும் அமைதியாக தன்னுடைய பணியை பார்த்து கொண்டிருந்தார் முடிவாக அன்று இரவு வாடகை வண்டியை விட்டு இறங்கும்போது அதற்கான வாடகை தொகையை இளைஞர்கள் அந்த வாடகை வண்டி ஓட்டுநரிடம் வழங்கி தீர்வுசெய்திடும்போதுமட்டும் தம்பிகளே இங்கு வாருங்கள் என அந்த வாடகை வண்டி ஓட்டுநர் கல்லூரி இளைஞர்கள் அனைவரையும் தன்னுடைய அருகில் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஐந்து ஐந்து ரூபாய் நாணயங்களை வழங்கி தம்பிகளே இந்த ஐந்துரூபாய் நாணயத்தை யாராவது பஞ்சாபி பிச்சைகாரர் மட்டும் உங்களுடைய கண்களில் தென்பட்டால் அவருக்கு பிச்சையிடுங்கள் என கூறினார் உடன் அனைவரும் ஐயா இன்று நாள்முழுவதும் ஒரு பஞ்சாபி பிச்சைகாரரைகூட நாங்கள் பார்க்கவே இல்லையேநாங்கள் எங்கு போய்தேடி இந்த ஐந்து ரூபாயை பிச்சையிடுவது என எங்களுடைய சந்தேகத்தை எழுப்பியபோது தம்பிகளே பஞ்சாபியர்களாகிய நாங்கள் உழைத்து அதில்கிடைக்கும் ஊதியத்தில் மட்டுமே வாழ்வோம் பிச்சை எடுக்கமாட்டோம் என்பதை மனதில் கொள்ளுங்கள் என அவர்கூறியதும் எங்களுடை நெஞ்சில் சுருக்கென்ற ஊசியால் குத்தியதைபோன்ற வலியுடன் அ்மைதியாகிவிட்டமோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...