வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

மதிப்பு மிக்க வளங்களை வீணாக்காதீர்


ஜெர்மனியானது அதிகஅளவிற்கு தொழிலகங்களை கொண்ட மிகுந்த பணக்கார நாடாகும் அதனால் அங்கு வாழும் மக்கள்மிகவும் வசதியான வாழ்க்கையுடைவர்கள் ஆவார்கள் அவ்வாறான நாட்டின் லக்ஸம்பர்க் எனும் நகரத்தில் நாங்கள் ஒருமுறை அந்நாட்டு நண்பர் ஒருவருடைய துனையுடன் சுற்றுலாவாக சென்றிருந்தோம் மதியம் சாப்பாட்டுநேரம் தாண்டிகொண்டிருந்த சமயத்தில் நாங்கள் அதிக பசியுடன் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தபோது அங்கு உணருந்துவதற்காக போடப்பட்டிருந்த இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன என்ன இவ்வளவு பெரிய நகரில் இந்த உணவகம் காலியாக இருக்கின்றதே நம்முடைய இந்தியநாட்டின் ஒரு நடுத்தர நகரத்தின் உணவகம் என்றாலும் இதுபோன்றநேரத்தில் கூட்டம் அலைமோதுவதுபோன்று இருக்குமே என ஆச்சரியமாக இருந்தது மேலும் அங்கு இருக்கைகளில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தவர்களும் ஒருசில வகை உணவுகளையே அவர்களுக்கு முன்இருந்தன அதிலும் அவ்வாறான எளிய உணவுவகைகளையும் முழுவதுமாக உண்டு உணவு வைத்திருந்த பாத்திரங்களை சுத்தமாக காலிசெய்திருந்தனர் நாங்கள் மிகவும் பசியோடு இருந்ததால் எங்களுக்குஅந்நாட்டு நண்பர் ஏராளமான உணவுவகைகளை கொண்டுவருமாறு உத்திரவிட்டு அதற்கான தொகையும் செலுத்தியிருந்தார் நாங்கள் எங்களுக்கு வழங்கிய உணவுவகைகளில் மூன்றில் இருபங்கு அளவு மட்டுமே சாப்பி்ட்டோம் மிகுதி ஒருபங்கு அளவிற்கு அப்படியே பாத்திரங்களில் வைத்துவிட்டு கைகழுவ எழுந்து சென்றபோது அருகில் உணவருந்திகொண்டிருந்த வயதானவர் ஒருவர் ஆங்கிலத்தில் "தம்பிகளே உங்களுங்கு வழங்கபட்டஉணவுவகைகளை முழுவதுமாக உண்டு காலிசெய்தபின்னர் கைகழுவ எழுந்து செல்லுங்கள்" என அறிவுரைகூறினார் "நாங்கள்தான் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவிற்கான தொகை முழுவதும் செலுத்திவிட்டோமே அதனால் எங்களுக்குவழங்கப்பட்ட உணவுவகைகளை முழுவதும் சாப்பிடுவதும் அல்லது மிகுதி வீணாக்குவதும் எங்களுடைய விருப்பம்தானே" என நாங்கள் பதில்கூறியவுடன் உடன் கைபேசியில் அரசுஅதிகாரிகளிடம் வயதானவர் ஏதோ பேசியவுடன் அரசுஅலுவலர்கள் இருவர் வந்து நாங்கள் உணவுகளை வீணாக ஆக்கியதற்கு 50யூரோ டாலர் அளவிற்கு அபராதம் செலுத்துமாறு கட்டளையிட்டனர் உடன் அவர்களிடம் "நாங்கள்தான் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவுவகைமுழுவதற்கும் கட்டணம் செலுத்திவிட்டோமே" என விவாதித்தபோது "கட்டணம் செலுத்தினாலும் அந்த உணவுவகைகளை நாங்கள் பெறாமல் இருந்திருந்தால் அவை வேறுயாருக்காவது பயன்படுமல்லவா" என அறிவுரை கூறியதோடுமட்டுமல்லாமல் அபராத தொகையை எங்களிடம் பெற்று கொண்டுபின்னரே எங்களை வெளியில் செல்லவிட்டனர் இந்தியாவில் இவ்வாறான நடைமுறை எந்தகாலத்திற்கு செயல்படுத்துபடுமோ அப்போதுதான் நம்முடைய நாடும் வளமிகுந்தததாக உயரும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...