வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கெடுவான் கேடுநினைப்பான்


ரகு எனும் மிகவும் பேராசைபிடித்த பணக்காரனிடம் ஏராளமானஅளவில் பணம் பொன் பொருள் எனகுவிந்து இருந்தன இருந்தபோதிலும் மேலும் பணத்தினை எப்படியாவது சேர்ப்பதிலேயே ரகுகுறியாக இருந்துவந்தார் இந்நிலையில் 10இலட்சரூபாய் பணத்துடன்கூடிய பணப்பையும் வேறு முக்கிய ஆவணங்களையும் கையில் வைத்து கொண்டு அவருடைய வீட்டைசுற்றியுள்ள தோட்டத்தின் வாழியாக செல்லும்போது தடுக்கி விழுந்து எழும்போது கையில் வைத்திருந்த ஆவணங்களும் பணப்பையும் சேர்ந்து அனைத்தும் செடிகளுக்கிடையே சிதறி விழுந்தன உடன் எழுந்து அவைகளை தேடிசேகரித்து எடுத்து கொண்டு வங்கிக்கு சென்று பணத்தினை வங்கியில் செலுத்தலாம் என பணப்பையை தேடியபோதுதான் பணப்பையை மட்டும் தேடி எடுத்திடாமல் விடுபட்டுவிட்டது என தெரியவந்தது அதனை தொடர்ந்து அவருடைய வீட்டில் பணிபுரியும் ரவி என்பவருடைய மகள் அந்த தோட்டத்தில் விளையாடும்போது இந்த பணப்பை கிடைத்தது அதனை தன்னுடைய தந்தை ரவியிடம் கொண்டுவந்து கொடுத்தாள் அதனை ரவியெனும் பணியாளர் இதுநம்முடைய முதலாளியினுடைய பணப்பையாகத்தான் இருக்கும் என ரவி அந்த பணப்பையை தன்னுடைய முதலாளி ரகுவிடம் கொண்டுவந்து கொடுத்து ஐயா இந்த பையில் 10 இலட்சம் ரூபாய் உள்ளது நீங்கள் காணோம் என தேடியது இந்த பணப்பைதானா வென சரிபாருங்கள் என கூறினான் உடன் ரகுவானவர் தந்திரமாக ஐயோ நான் இதில் 11 இலட்சம் ரூபாயை வைத்திருந்தேனே 1இலட்சம் பணத்தினை நீஎடுத்து கொண்டு 10 இலட்சம் மட்டும் என்னிடம் கொண்டுவந்த கொடுக்கின்றாயா உன்னை என்ன செய்கின்றேன் பார் என திட்டினார் தொடர்ந்து உள்ளூர் காவல்நிலையத்தின் வாயிலாக ரவிமீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததது நீதிபதி ரகுவிடம் "ஐயா உங்களுடைய பணப்பையில் எவ்வளவு தொகை வைத்து வங்கிக்கு எடுத்து சென்றீர்" என வினவியபோது "நான் 11 இலட்சம் ரூபாயை வைத்திருந்தேன் அதனையும் அதனோடு வேறு ஆவணங்களும் சேர்த்து எடுத்து சென்றபோது வீட்டு தோட்டத்தில் கால்தடுக்கி விழந்துஎழுந்து போது அனைத்தும் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே விழந்துவிட்டன பின்னர் எழுந்து ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்று வங்கியில் பார்க்கும்போது இந்த பணப்பைமட்டும் காணாமல் போய்விட்டது" என பதில்கூறினார் ரவியிடம் "நீங்கள் உங்களுடைய மகள் கொண்டுவந்து கொடுத்த பணப்பையில் எவ்வளவு தொகை இருந்தது" என வினவினார் நீதிபதி "ஐயா நான் அந்த பணப்பையை திறந்து எண்ணிடும்போதும் 10 இலட்சம் மட்டுமே இருந்தது" என ரவி பதில் கூறினார் இருதரப்பு வாதமும் முடிந்துவிட்டதால் அதனை தொடர்ந்து "இந்த வழக்கில் இருதரப்பினையும் தீர விசாரிக்கப்பட்டது வாதியான ரகு என்பவர் தன்னுடைய பணப்பையில் ரூபாய்11 இலட்சம் இருந்து தொலைந்து போனதாக சாட்சியம் கூறியுள்ளார் பிரதிவாதியானவர் தன்னுடைய மகள் பணப்பையை கொண்டுவந்து கொடுத்தவுடன் எண்ணிக்கைசெய்தபோது அதில் பணம் ரூ.10 இலட்சம் மட்டுமே இருந்தது அந்த பணப்பை தன்னுடையதன்று வேறுயாருடையதோ அதனால் ரகுவிடம் அவருடைய பணப்பையா என சரிபார்த்திடுமாறு கூறி நாணயமாக கொண்டுவந்து கொடுத்துள்ளார் ரகுவின் காணாமல் போன பணப்பையில் ரூ.11 இலட்சம் இருந்தது ஆனால் ரவி கொண்டுவந்து கொடுத்ததில் ரூ.10 இலட்சம் மட்டுமே இருந்தது என்பதால் இந்த பணப்பை ரகுவுடையதன்று அதனால் அந்த பணப்பை அவரிடம் திருப்பி தரமுடியாது ரவி மிகநேர்மையாக அந்த பணப்பையை கொண்டுவந்து கொடுத்ததால் அவருடைய நேர்மையை மெச்சும் பொருட்டு அந்த ரூ.10இலட்சம் பணப்பையை நீதிமன்றம் ரவியிடமே வழங்கிடுமாறு உத்திரவிடுகின்றது" என நீதிபதி தீர்ப்பளித்தார். தந்திரமாக ரவிசம்பாதித்தில் பணம் ஏதேனும் சேர்த்து வைத்திருந்தால் அதனை அபகரிக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடுத்த ரகு எனும் பேராசைக்காரர் தன்னுடைய பணத்தையும் சேர்ந்து இந்த தீர்ப்பின் வாயிலாக இழக்கநேர்ந்தது இதைத்தான்கெடுவான் கேடுநினைப்பான் என பழமொழியாக கூறிடுவார்கள்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...