சனி, 18 மே, 2019

சூழல் ஒன்றுதான் ஆயினும் அவருவருடைய கண்ணோட்டம் மட்டும் மாறிவிடுகின்றன


ஒரு நகரத்தில் ஒருகுடும்பத்தில் பிறந்த இரு சகோதரர்கள் வாழ்ந்துவந்தனர் அவர்களுள் மூத்தவன் எப்போதும் போதை மருந்தினை சாப்பிட்டுகொண்டும் குடித்துகொண்டும் வீட்டில் இவைகளை வாங்குவதற்காக பணம் தரவில்லையெனில் அடித்து உதைத்துகொண்டும் குடும்ப உறுப்பினர்களுடைய அனைவரின் வாழ்க்கையையும் வீணாக்கி அழித்துகொண்டுவந்தான் இளையவன் அதற்கு மறுதலையாக நல்ல உழைப்பாளி சிறியஅளவில் வியாபாரம் செய்து அவனுடைய குடும்பு உறுப்பினர்கள் மட்டுமல்லாது அந்தநகரில் வாழும் அனைவருக்கும் நல்லவனாக வல்லவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தான்.இந்நிலையில் ஒரே குடும்பத்தில் ஒரேசூழலில் பிறந்த இருசகோதரர்கள் எப்படி இவ்வாறு வெவ்வேறான நிலையில் வாழும் நிலைக்கு மாறிவி்ட்டனர் என்ற சந்தேகம் ஒருவருக்கு தோன்றியது அதனால் அதனை தீர்வுசெய்து கொள்வதற்காக அவர் மூத்தவனிடம் "தம்பி! நீயும் உன்தம்பியும் ஒரே வீட்டில் ஒரே சூழலில் பிறந்துவளர்ந்திருந்தாலும் நீ குடிகாரனாகவும் உன்னுடைய தம்பி நல்லவனாகவும் எவ்வாறு உருமாறி விட்டீர்கள்?” எனவினவியபோது மூத்தவன் "என்னுடைய அப்பாதான் காரணம் அவர் எப்போதும் போதை மருந்தினை சாப்பிட்டுகொண்டும் குடித்துகொண்டும் வீட்டில் இவைகளை வாங்குவதற்காக பணம் தரவில்லையெனில் அடித்து உதைத்துகொண்டும் இருப்பார் அதனால் அதனை கண்ணுற்ற நானும் அவரைபோன்றேஅச்சுபிசகாமல் வாழ்ந்து வருகின்றேன்" எனக்கூறினான் . அதன்பின்னர் அவர் அவனுடைய தம்பியிடம்அதே கேள்வியை கேட்டபோது "என்னுடைய அப்பா எப்போதும் போதை மருந்தினை சாப்பிட்டுகொண்டும் குடித்துகொண்டும் வீட்டில் இவைகளை வாங்குவதற்காக பணம் தரவில்லையெனில் அடித்து உதைத்துகொண்டும் இருப்பார் அதனால் அதனை கண்ணுற்ற நான் அவ்வாறு செய்வது தவறு நாம் சமுதாயத்தில் வாழும் மற்றவர்களை போன்ற நல்லவனாக வாழவேண்டும் என மனஉறுதி எடுத்துகொண்டு வாழ்ந்து வருகின்றேன்" எனக்கூறினான் சூழல் ஒன்றுதான் ஆயினும் அவருவருடைய கண்ணோட்டம் மட்டும் மாறிவிடுகின்றன .அதனால் நாம் வாழும் இந்த சமுதாயத்தில் சீரழிவை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சூழலில் வளர்ந்தாலும் நாம்வாழும் இந்த சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் நோக்கில் அவ்வாறான தீங்கான செயலை செய்யக்கூடாது என சிந்தித்து நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழவேண்டும் மனஉறுதியுடன் வாழமுயன்றிடுக என அறிவுறுத்தப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...