புதன், 29 மே, 2019

எவ்வாறான சூழலில் நாம் வாழ்ந்தாலும் நம்முடைய உண்மையான திறன்களையும் ஆற்றலையும் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிகொள்க


முன்னொரு காலத்தில் ஒரு உயரமான மலையின் உச்சியிலிருந்த மரங்களில் பருந்து கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அந்த கூட்டில் பருந்துகள் முட்டையிட்டு பாதுகாத்துவந்தன ஒருநாள் திடீரென நிலநடுக்கம் உருவாகி அனைத்து பொருட்களும் தன்னிலையில் இல்லாமல் அசைந்தாடி உருண்டோடி கொண்டிருந்தன அதனை தொடர்ந்து பருந்து முட்டைஒன்றும் உருண்டோடி கீழே மனிதர்கள் வாழும் தரைக்கு வந்து சேர்ந்து அவ்வாறு வந்து சேர்ந்த இடம் கோழிகள் வாழும் கோழிக்கூண்டாகும் அங்கு ஏற்கனவே கோழிமுட்டைகள் நிறைய இருந்தன அதனோடு இந்த பருந்து முட்டையைும் சேர்ந்துவிட்டது பின்னர் அந்த கோழிகூண்டிலிருந்த பெட்டைக்கோழியானது அனைத்து முட்டைகளையும் சேர்த்து அடைகாத்து குஞ்சுகளை பொறிக்கசெய்தது அதன்பின்னர் கோழிக்குஞ்சு-களோடு பருந்து குஞ்சும் சேர்ந்து வழக்கமான பறத்தல் மற்ற இரையை தேடி-பிடித்தல் போன்ற பணிகளுக்கு பதிலாக கோழிகள் செய்வதைபோன்று குப்பைகளை காலால் கிளரி கிடைக்கும் உணவுதானியங்களையும் புழுபூச்சிகளையும் தன்னுடைய அலகால் கொத்தி தின்பதற்கு பழகி கொண்டது அந்த சமயத்தில் வானத்தில் பருந்து ஒன்ற பறந்து கொண்டிருந்தது உடன் தாய்க்கோழியானது பிள்ளைகளே பருந்து ஒன்று வானத்தில் பறந்து வருகின்றது அது உங்களை கொத்தி கொண்டுசென்றுவிடும் அதனால் உடன் நம்முடைய கூட்டிற்கு சென்று பதுங்கி கொள்ளுங்கள் என எச்சரித்தது உடன்அனைத்து கோழிக்குஞ்சுகளும் தாம் வாழும் கூண்டிற்கு ஒடிச்சென்றன அவைகளுடன் இந்த பருந்துகுஞ்சும் மிகவிரைவாக கோழிக்கூட்டிற்குள் ஓடிசென்று பதுங்கிகொண்டது அதேபோன்று நல்லதிறமைகளும் ஆற்றல்களும் நமக்கிருந்தாலும் நாம் சேரும் சூழலிற்கேற்ப நம்முடைய அனைத்து திறமையும் ஆற்றலும் மறந்துசாதாரணமாக வாழும் நிலைஏற்பட ஏதுவாகிவிடும் அதனால் எவ்வாறான சூழலில் நாம் வாழ்ந்தாலும் நம்முடைய உண்மையான திறன்களையும் ஆற்றலையும் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிகொள்ள உறுதிகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...