சனி, 15 மே, 2021

நான்கு கல்லூரி மாணவர்களும் ஆண்டுஇறுதி தேர்வும்

 

நான்கு கல்லூரி மாணவர்கள் அடுத்த நாள் காலையில் திட்டமிடப்பட்ட ஆண்டிறுதி தேர்விற்கு படிக்காமல் இரவு விருந்திலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டுகொண்டிருந்தனர்,அதனால் அவர்கள் மறுநாள் காலையில் நடைபெறவிருந்த ஆண்டுஇறுதி தேர்விற்கு ஒரு திட்டத்தை செயல்படுத்தமுடிவுசெய்தார்கள். அதன்படி அவர்கள் தங்களுடைய உடைகள் முழுவதும் கிரீஸை பூசிக்கொண்டும் அழுக்குகாகவும் வீனாக்கிகொண்டனர். பின்னர் அவர்கள் அவ்வாறான தங்களுடைய அழுக்கான உடைகளுடன் தங்களுடைய கல்லூரியின் துறைத்தலைவரிடம் நேரில் சென்று , தாங்கள் நேற்றிரவு நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வெளியூர் சென்றதாகவும், திரும்பி வரும் வழியில் தங்களுடைய காரின் டயர் வெடித்துவிட்டதாகவும், அதனைதொடர்ந்து அவர்கள் தாங்கள் பயனம் செய்த காரைத் தள்ளிகொண்டே வந்து சேர்ந்ததாகவும் கூறினார்கள். அதனால் தங்களால் அன்று நடைபெறவிருக்கும் ஆண்டுஇறுதி தேர்விற்கு தயாராக முடியவில்லை என்றும் கூறினார்கள்ர் . துறைத்தலைவர் ஒரு நிமிடம் யோசித்த பின்னர் , அந்நான்கு மாணவர்களும் 3 நாட்களுக்குப் பிறகு தங்களுடையஆண்டுஇறுதி தேர்வினை எழுதலாம் என்று அனுமதிப்பதாக கூறினார். அதனால் அந்நான்கு கல்லூரிமாணவர்களும் தங்களுடைய துறைத்தலைவருக்கு நன்றி தெரிவித்தார்கள், மூன்றுநாட்களில் அந்நான்கு கல்லூரிமாணவர்களும் ஆண்டுஇறுதி தேர்விற்கு தயாராகிய பின்னர் தங்களுடைய துறைத்தலைவரிடம் நேரில் சென்று தாங்கள் தேர்வு எழுத தயாராக இருப்பதாக கூறினார்கள் அதனால் . மூன்று நாட்கள் முடிந்தவுடன் நான்காவது நாள், துறைத்தலைவர் . நிபந்தனையுடன் கூடிய ஒரு தனித்தேர்வினை அவர்களுகாகவென நடத்துவதாக கூறினார் அதன்படி அந்த நான்கு பேரும் தேர்வினை எழுவதற்காக ஒவ்வொருவரும் தனித்தனி வகுப்பறைகளில் அமர வேண்டும் என்று துறைத்தலைவர் கூறினார். கடந்த 3 நாட்களாக அந்நான்கு கல்லூரி மாணவர்களும் ஆண்டு இறுதி தேர்விற்காக நன்றாகத் தயார் செய்திருந்ததால் அந்த நிபந்தனைக்கு அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். அந்த தேர்வானது மொத்தம் 100 மதிப்பெண்களுடன் இரண்டேயிரண்டு கேள்விகளை மட்டுமே கொண்டிருந்தது.
1) மாணவரின் பெயர் __________ (1 மதிப்பெண்)
2) மாணவர்கள் பயனம் செய்த காரின் எந்த டயர் வெடித்தது? __________ (99 மதிப்பெண்கள்)
அதற்கான வாய்ப்புகள் - (அ) முன் இடது (ஆ) முன் வலது (இ) பின் இடது (ஈ) பின் வலது
அந்நால்வரும் அவர்களுக்காகவென நடைபெறும் சிறப்புதேர்வில் இவ்வாறான கேள்விகளை எதிர்பார்க்காததாலும் வெவ்வேறு வகுப்பறைகளில் அமர்ந்து எழுவேண்டியிருந்ததாலும் இரண்டாவது கேள்விக்கு மட்டும் வெவ்வேறு பதில்களை தெரிவுசெய்திருந்தனர். அதனால் அந்நான்கு பேரும் ஆண்டிறுதி தேர்வில் தோல்விஅடைந்ததாக அறிவிப்பு செய்யப்பட்டது
நீதி: எந்தவொரு செயலையும் செயற்படுத்திடும்போது பொறுப்பாக நடந்து கொள்க,

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...