சனி, 8 மே, 2021

வயதான பெற்றோர்களை நன்கு சரியாக பராமரித்திடுக

 
ஒரு நாள் இரவு உணவினை தயார்செய்ய இயலாததால் ஒரு மகன் தனது வயதான தந்தையை தங்களுடைய வீட்டிற்குஅருகிலிருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை மிகவும் வயதானவர், பலவீனமானவர், கைகால்கள் அனைத்தும் நடுங்கி கொண்டு இருந்தது அதனால் அவர் சாப்பிடும்போது , அவரது உடைகளில் உணவை சிந்திகொண்டும் சிதறிகொண்டும் சாப்பிட்டார். அவரது மகன் அவர் சாப்பிட்டு முடியும் வரை அமைதியாக காத்திருந்தார் ஆனால் அவ்வுணவகத்தில் உணவு உட்கொண்ட மற்றவர்கள் அனைவரும் அவரது தந்தை தன்னுடைய உடைகளின்மீது உணவினை சிந்திகொண்டும் சிதறிகொண்டும் சாப்பிடுவதை கண்டு மிககேவலமாக பார்த்தனர். அதுகுறித்து , வெட்கப்படாத அவரது மகன், அவர் சாப்பிட்டு முடித்ததும் அமைதியாக அவரை கைகழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவருடைய தந்தையின் உடைகளின்மீது சிந்திய சிதறிய உணவுத் துகள்களைத் துடைத்து, கறைகளை அகற்றி, அவருடைய கைகளையும் வாயையும் நன்கு கழுவி தலைமுடியை சரிசெய்து, உடைகளை பழையவாறு நன்கு சரிசெய்து இருக்கைக்கு அழைத்துவந்தார். பின்னர் தானும் தன்னுடைய தந்தையும் உண்ட உணவிற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு உணவகத்தை விட்டு அவர்கள் வெளியே வந்தபோது, உணவகத்தில் இருந்த அனைவரும் அமைதியாக அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தனர், . அந்த நேரத்தில், அந்த உணவகத்தில் உணவருந்தியவர்களில் ஒருவர் அம்மகனிடம், “நீங்கள் இவ்வுணவகத்தில் எதையோ விட்டுசெல்கின்றீர்கள் ” என்று வினவியபோது அம்மகன், “இல்லை ஐயா, நான் எதையும் விட்டு செல்லவில்லை” என்று பதிலளித்தார். அந்த முதியவர், “ஆனால் நீங்கள் ஒவ்வொரு மகனும் தன்னுடைய வயதான தந்தையை எவ்வாறு பராமரிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும்விட்டு,செல்கிறீர்கள் ”.என அம்மகனிடம் கூறினார். அவ்வுணவகம் அமைதியாக இருந்தது.
நீதி: ஒரு காலத்தில் நாம் சிறுகுழந்தையாய் இருந்தபோது நம்முடையபெற்றோர்கள் நம்மைக் எவ்வாறு கவனித்துக்கொண்டார்கள்என அறிந்து அவர்களை நாம் நன்கு கவணித்து பராமரிப்பதோடுமட்டுமல்லாமல் அவர்களை நேசிக்கவும், அவர்களை மதிக்கவும், செய்திடவேண்டியது அவசியமாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...