ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

யார் பெரிய முட்டாள்?

 முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில்,  ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் விடியற்காலையிலேயே  எழுவது அவரது வாடிக்கையான செயலாகும்
அதனை தொடர்ந்து காலைக்கடன்களை முடித்தபிறகு அவர் தனது மளிகை பொருட்களின் விற்பணை செய்திடும் கடைக்குச் சென்று மதிய உணவு நேரம் வரை மட்டும் விற்பணைபணி செய்தபின் தனது  கடையை மூடிடுவார். அதன்பிறகு மாலைமுதல் இரவு தூங்கபோகும் நேரம் வரையில் இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்து, தொண்டு செய்து வருவார்
அவரது இத்தகைய நடத்தையால் மக்கள் ஆச்சரியமடைந்தனர்  அவரை பைத்தியக்காரன் என்றும் நினைத்தார்கள்.
அவர் நாள்முழுவதும் தனது மளிகை பொருட்களின் கடையை திறந்து  வைத்திருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் அதனைவிடுத்த காலையில் மட்டுமே திறந்து மாலையில்  மூடிவிடுகின்ற ஒரு முட்டாள் என்று மக்கள் அவரை விமர்சிப்பார்கள். . அதுமட்டுமல்லாமல், அவர் அவ்வாறு சம்பாதிக்கின்ற  பணம் முழுவதையும் இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் தொண்டு செய்வதில் செலவிட்டிடுவார்
அதே கிராமத்தில் ஒரு பணக்காரர் இருந்தார்.
ஒரு நாள், பணக்காரர் மளிகைகடைக்காரரைச் சந்தித்து, அவரிடம் ஒரு தொப்பியைக் கொடுத்தார், "இந்த தொப்பி மிகப்பெரிய முட்டாளுக்கானது. எனவே, உங்களை விட பெரிய முட்டாளை என்னால் கண்டுபிடிக்க முடியாததால், இந்த தொப்பியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் நீங்கள் . உங்களை விட பெரிய முட்டாள் யாரையாவது பார்த்தால், நீங்கள் இந்த தொப்பியை அவ்வாறான முட்டாளுக்கு  கொடுக்கலாம்." எனக்கூறினார்
மளிகைகடைக்காரர் பதில் எதுவும் பேசாமல் பணக்காரர் தன்னிடம் கொடுத்த அந்த தொப்பியை வாங்கி வைத்துக் கொண்டார்.
சில வருடங்களுக்குப் பிறகு, பணக்காரர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகஇருப்பதை கேள்விப்பட்டார். எனவே அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
பணக்காரர் தன்னிடம் நலம் விசாரிக்க வந்த மளிகைகடைக்காரரிடம், "தம்பி, என் முடிவு நெருங்கிவிட்டது, நான் இந்த உலகத்தை  விட்டுகிளம்புகிறேன்." எனக்கூறினார்
உடன் மளிகைகடைகாரர், "ஐயா நீங்கள் பயனம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்வதற்காக  யாராவது  இருக்கின்றார்களா அதனோடு உங்களுடைய பயனத்தின போது உங்களுடைய மனைவி, மகன், பணம், கார், பங்களா போன்றவை.. உங்களுடன் கொண்டு போகமுடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு பணக்காரர், "தம்பி . என்னுடைய இறுதி பயனத்தின் போது யார் வருவார்கள்? என்னுடன் யாரும் வரப் போவதில்லை. நான் தனியாகத்தான் போக வேண்டும். என்னுடைய குடும்பம், செல்வம், அரண்மனை... எல்லாமே இங்கேயே இருக்கும்.. யாரும் துனையாக இருக்கப் போவதில்லை. என்னைத்த் தவிர." எனக்கூறினார்
இந்த சொற்களை கேட்ட மளிகை கடைக்கார் அங்கிருந்த எழுந்து தன் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் கழித்து  திரும்பினார்.
இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்ட பணக்காரர், "என்ன நடந்தது? எங்கு சென்று வருகின்றாய் தம்பி?" என பணக்காரர் வினவியபோது ஏற்கனவே பணக்காரர் தன்னிடம் கொடுத்த அந்த தொப்பியை பணக்காரரிடமே திருப்பி கொடுத்தவாறு, "ஐயா நீங்கள் கொடுத்த இந்த தொப்பியை எடுக்க சென்றேன், இந்தாருங்கள் நீங்களேவைத்துக்கொள்ளுங்கள் " என்றார் மளிகைகடைக்காரர்.  உடன் பணக்காரர் "இந்த தொப்பியை ஏன் என்னிடம் கொடுக்கிறாய்?"எனவினவியபோது
அதற்கு மளிகைகடைகாரர், "இந்த தொப்பியை நீங்கள் கொடுத்த போது, என்னை விட முட்டாள்தனமாக நான் கருதும் ஒருவருக்கு இதை கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இன்று நான் அந்த மனிதனைக் கண்டுபிடித்தேன்.
நீங்கள்தான் என்னை விட முட்டாள். ஏனெனில்
நீங்கள் இதுவரையில் சம்பாதித்த  சொத்து, வீடு ஆகிய எதுவுமே உங்களுடன் கொண்டு போகமுடியாது என தெரிந்ததும், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பேராசையில் ஈடுபட்டு, உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியான பிறகும், மேலும் அதிக பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டி மேலும் மேலும் பணம் ஈட்டுவதிலேயே உங்கள் வாழ்நாள் முழுவதும் கழித்து விட்டீர்கள், ஆயினும் இதுவரையில் நீங்கள் ஏழைகளுக்கு சேவை எதுவும் செய்யவில்லை,  அவரகளுக்கு தேவையான உதவி எதையும் செய்யவில்லை. . இப்போது புரிகிறதா யார் பெரிய முட்டாள் என்று". என நீண்ட விளக்கமளித்தார் மளிகைகடைகாரர்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...