ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

இரண்டு தண்ணீர் தாகமுள்ள பயணிகளும் கிணறும்

 முன்னொரு காலத்தில் ஒருகிராமத்தில்  ஒருகுருவும் ஒரு சீடனும் வாழ்ந்துவந்தனர்.சிலநாட்கள் கழித்து, அந்த குருவிடம் இன்னொரு சீடனும் சேர்ந்தான் புதியதாக சேர்ந்த இரண்டாது சீடன் முதல் சீடனை விட குறைந்த காலத்திலேயே  அதிகம் கற்றுக்கொண்டான். அதனால் முதல் சீடண் அதைக் கவனித்து தான் குருவிடமிருந்து புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தான்
அதனால் ஒரு நாள் முதல் சீடன் தன் குருவிடம் சென்று, "இரண்டாவது சீடன் வருவதற்கு முன்பிருந்தே உங்களிடம் கலைகளை கற்று வருகிறேன், ஆனால் நீங்கள்  என்னை  புறக்கணித்து இரண்டாவது சீடனுக்கு மட்டும என்னைவிட கூடுதலாக அனைத்தையும அதிகம் கற்றுக் கொடுக்கின்றீர்கள். ஏன்? அவ்வாறு செய்கின்றீர்கள்" எனவினவினான
அந்த குரு சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "முதலில் நான் ஒரு கதையைகூறுகின்றேன் அதைக் கேள். அதன்பிறகு நீயே முடிவுசெய்திடுவாய்." எனமுதல் சீடனிடம் கூறினார்.
முதல் சீடனும் தன்னுடைய குருவானவர் கூறப்போகும் கதையே கேட்க தயாகராக இருந்தான். குரு கதை சொல்லத் தொடங்கினார், "ஒருமுறை ஒரு பயணி பெருவழியில் வெகுதூரத்திலிருந்த நகரத்தினை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அந்த பயனிக்கு தண்ணிர் தாகம் எடுத்தது, அவரிடம் கைவசம் தற்போது போன்று தண்ணீர் குப்பிஇல்லை, அதனால் அந்த பெருவழிக்கு அருகில் தண்ணீர் கிடைக்கும என சுற்றிலும் பார்த்துகொண்டே தன்னுடைய பயனத்தை தொடர்ந்தார், அந்த பெருவழியில் சிறிது தூரம் நடந்தபோது, பாதைக்கு அருகில் ஒரு கிணற்றைக் கண்டார். அந்த கிணற்றில் தண்ணீர் இருப்பதைக் கண்டார் ஆனால் கிணற்றிலிருந்து நீரை மேலே கொண்டுவந்த தன்னுடைய தாகத்தை தனிப்பதற்கான கருவிகளான வாளியும் கயிறு இல்லை, அதனால், அவர் தண்ணீர் எதுவும் குடிக்காமல் அவ்விடத்தினை விட்டு அகன்று பெருவழியில் தன்னுடைய பயனத்தை தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் அந்த கிணற்றுக்கு அதே பெருவழியில் பயனித்த வேறு ஒரு பயணி வந்தார். அதே கிணற்றைப் பார்த்தார், தண்ணீர் இருப்பதைக் கண்டார். ஆயினும் முன்புபோலவேகிணற்றிலிருந்து நீரை மேலே கொண்டுவந்த தன்னுடைய தாகத்தை தனிப்பதற்கான கருவிகளான வாளியும் கயிறு இல்லாததை கண்டார்  ஆனால் இரண்டாவது பயனியானவர் அந்த கிணற்றிற்க அருகில்  மேலும் தீவிரமாக  சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார், உடன் ஒரு வாளியை  கண்டார். அதன் பின்னர் அவர் மேலும் தீவிரமாக கயிறுஇருக்கின்றதாவெனத் தேடத் தொடங்கினார், எந்த கயிற்றையும் காணவில்லை, ஆனால் அந்த கிணற்றிற்கு அருகில் உயரமாக புற்கள் வளர்ந்திருப்பதை கண்டார்  அதனால் கிணற்றிற்கு அருகில்  உயரமாக வளர்ந்திருந்த புல்லை கைகளால் பிடுங்கி அவைகளை உருட்டி கயிற்றை உருவாக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நீண்ட கயிறு தயாராகிவிட்டது அவர் அந்த நீண்ட கயிற்றினை அருகிலிருந்த வாளியுடன் இணைத்து  அந்தக் கயிற்றின் உதவியால், கிணற்றிலிருந்து தண்ணீரை மேலே கொண்டுவந்து தன்னுடைய தாகத்தைத் தணித்துக்கொண்டு அதே பெருவழியில் தன்னுடைய பயனத்தினை தொடர்ந்தார்." என குருவானவர் தன்னுடைய  சீடனிடம் கதையை கூறிமுடித்தபின்னர், "எந்தப் பயணிக்கு அதிக தாகம் இருந்தது என்று கூறுங்கள்?" எனமுதல் சீடனிடம் வினவினார்  உடனடியாக முதல் சீடன் , "இரண்டாவது பயனி." என பதிலளித்தார்
குரு சிரித்துக்கொண்டே, "ஆம்.இரண்டாவது பயணி தாகத்தைத் தணிக்க கடினமாக உழைத்ததால் அவருக்கு தாகம் அதிகமாக இருந்தது என க்கூறலாம்."
 அதேபோன்று  இரண்டாவது சீடனுக்குதான  அறிவு தாகம் அதிகமாகும், அதை நிறைவேற்ற அவன் கடினமாக உழைக்கிறான். அதனால் அவன் விரைவில் அனைத்து கலைகளையும் கற்றுக்கொள்கின்றான்  என விளக்கமும் அளித்தார் குரு
முதல் சீடன், அன்று முதல் அவன் கடினமாக உழைத்து அதிக கலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...