செவ்வாய், 25 டிசம்பர், 2012

நம்முடைய உணர்வுகள் நாம்அதனை எடுத்துகொள்வதற்கேற்ப அதனுடையஅளவு தோன்றும்


பயிற்சியாசிரியர் ஒருவர் தம்கீழ் பயிற்சிபெறவந்துள்ள இளம் பயிற்சி யாளர்களிடம் ஒரு கைப்பிடி உப்பினை கொடுத்து அதன் சுவையை கூறும்படி கோரினார்

உடன் அனைவரும் உப்பு கரிப்பதாக கூறினார்கள்

பின்னர் அவ்வுப்பை ஒரு டம்ளர் தண்ணீரல் இட்டு அதனை நன்கு தண்ணீரில் கரையுமாறு கலக்கியபின் அந்த உப்புநீரை அருந்து மாறு கோரினார்

தற்போது உப்பின் கரிப்பு சிறிது குறைந்துள்ளதாக கூறினார்கள்

அதன்பின்னர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் அவ்வுப்பினை கொட்டி அந்த குளத்தினுடைய தணினீரில் அவ்வுப்பை நன்கு கரையுமாறு செய்தபின் தற்போது அந்த நீச்சல் குளத்தின நீரை அருந்துமாறு கூறினார்

உடன் அனைவரும் அந்த குளத்தின் நீர் கரிப்பு சுவையில்லாமல் சாதாரணமாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்கள்

அப்பயிற்சியாசிரியர் அந்த உப்பின் அளவு எந்த நிலையிலும் மாறவில்லை ஆனால் அது சேரும் இடம் மாறு படுகின்றது அதற்கேற்ப அதனுடைய சுவையும் மாறி அமைகின்றது அதுபோன்றே நம்முடைய வலி துன்பம் என்பனபோன்ற உணர்வுகளும் ஒரேஅளவுதான் இருக்கும் ஆனால் அதனை பேரளவிற்கு அதாவது குளத்தின் ,ஏரியின், கடலின் நீரில் கரைத்த உப்பினை போன்று எடுத்து கொண்டால் அவ்வுணர்வு மிக சாதாரணமாக அமையும் என தம்மிடம் பயிலவந்த இளம் பயிற்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...