புதன், 12 நவம்பர், 2014

வாழ்க்கையின் சிறந்த தருணம் எது?


அது ஒரு இளவேணிற்காலமாக இருந்தது, இன்னும் இரண்டு நாட்களில் என்னுடைய வயது முப்பது ஆக உயரபோகின்றது . நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தசாப்தத்தில் நுழைவதை பற்றி பாதுகாப்பற்று இருப்பதாக உணருகின்றேன் மேலும் என்னுடைய வாழ்வின் வசந்தகாலம் இதன் பின்னர் மட்டுமேஇருப்பதாகவும் அச்சபடுகின்றேன் இந்நிலையில் நான் என்னுடைய அன்றாட பணிக்கு செல்லுமுன் தினமும் பயிற்சிக்காக ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு செல்கின்றேன். அவ்வாறு அந்த உடற்பயிற்சிகூடத்திற்கு செல்லும்போது அங்கு தினமும் காலையில் என்னுடைய நண்பர் ஒருவரை சந்திக்கின்றேன். அவருடைய வயது எழுபத்தொன்பதாக இருந்தாலும் கட்டுகுலையாத உடல் வடிவில் அவர் இருந்தார். அதனால் அன்று அந்த நண்பரை முகமன்கூறி வரவேற்று வணங்கியபோது , அவர் '' நீங்கள் இன்று வழக்கமான முழு உற்சாகத்துடன் இல்லையே ஏன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?'' என என்னிடம் வினவினார் . அதற்கு. நான் "எனக்கு வயதுமுப்பது ஆவது பற்றி மிகஆர்வத்துடன் இருக்கின்றேன் இருந்தாலும். நான் உங்களுடைய வயது அடையும்போது நான் என்னுடை வாழ்க்கையை திரும்பி பார்த்தால் எவ்வாறு இருக்கும் என ஆச்சரியப்படுகின்றேன் ", எனக்கூறியதுடன் தொடர்ந்து அவரிடம், " அதனால் உங்களுடைய வாழ்க்கையின் வசந்த காலமாக இருந்தது எது?" என கேட்டேன்.

உடன் அவரும் தயக்கம் இல்லாமல், " எல்லாம் சரிதான் தம்பி , உங்களுடைய இந்த தத்துவமான கேள்விக்கு என்னுடைய பின்வரும் தத்துவமான பதிலை கூறுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள் ", என்று கூறினார்:

",நான் முதன்முதலில் ஒரு குழந்தையாக இருந்தபோது எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கி என்னை என் பெற்றோர்கள் நன்றாக கவனித்து வளர்த்தனர் , அதுவே என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக உணர்ந்தேன் ."

"அதன்பின்னர் நான் பள்ளிக்கு சென்று இன்று எனக்கு தெரிந்துள்ள அனைத்து செய்திகளையும் கற்று போது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

"பின்னர் நான் வாழ்க்கையில் வாழ்வதற்கான என்னுடைய முதல் பணி எனக்கு கிடைத்தது அதனோடு பொறுப்புகளும் சேர்ந்திருந்தது அந்த பணியில் என்னுடைய முயற்சிகளுக்கேற்ற பொருள் ஈட்டியபோது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

",அதன்பின்னர் நான் என்னுடைய வாழ்க்கை துனைவியான மனைவியை முதன்முதலில் சந்தித்து அன்பு செலுத்திய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து எங்களுடை உயிர்களை காப்பாற்ற நம்முடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக வெளிநாட்டிற்கு சென்ற ஒரு கப்பல் மீது ஒன்றாக பாதுகாப்பாக சென்றுகொண்டிருந்த போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாகஅது இருந்தது."

"அதன்பின்னர் போர்முடிந்து நாங்கள் நம்முடைய நாட்டிற்கு திரும்பிவந்து வழக்கமான எங்களுடைய குடும்ப வாழ்க்கையை தொடங்கிய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் எங்களுடைய குழந்தைகள் எங்களுக்கு பிறந்து வளர்ந்தபோது அவர்களை நான் ஒரு இளம் தந்தையாக நாங்கள் சிறந்த பெற்றோர்களாக அவர்களை கவணித்து வளர்த்து வந்தபோது, என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

" நண்பரே, இப்போது எனக்கு எழுபத்தி ஒன்பது வயதாகிறது. நான், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன் மேலும் என்னுடைய மனைவியை நான் முதன் முதலில் சந்தித்தபோது இருந்த அதே அன்புடன் இப்போதும் அவர்களை நேசிக்கின்றேன் . இதுவே என்னுடைய வாழ்க்கையில் சிறந்த நேரமாக உணருகின்றேன். "

"அதனால் நாம் எப்போதும் நமக்கு கிடைத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையே நம்முடைய இறுதி இலக்கு அன்று என்பதை நினைவில் கெள்க மேலும் நாம்முடைய வாழ்க்கையின் சிறந்த தருனம் மிகவிரைவில் நமக்கு வரவுள்ளது என எண்ணி எப்போதும் செயல்படுக" என எனக்கு அவர் அறிவுரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...