ஞாயிறு, 30 நவம்பர், 2014

நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களை மதித்து வனங்க உறுதி எடுப்போதோடு மட்டுமல்லாது நம்முடன் வைத்து அவர்களை காத்திட உறுதி பூனுவோம்


ஒரு மனிதன் ஒரு பூக்கடை வாயிலில் தன்னுடைய மகிழ்வுந்தை நிறுத்தி இருநூறு மைல்கள் தொலைவில் வாழ்ந்த தன்னுடைய அன்னைக்கு சில பூக்களை தபால் வாயிலாக கொண்டு சென்று சேர்த்திடுமாறு கோருவதற்காக அவர் தனது காரில் இருந்து இறங்கியபோது ஒரு இளம் பெண் தன்னுடைய அன்னைக்கு வழங்குவதற்காக ரோஜா பூவொன்று வாங்க முடியவில்லையே என புலம்பிகொண்டு அமர்ந்திருந்ததை கவனித்தார்.

அவர் உடன் அப்பெண்ணின் அருகில் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் என வினவினார் அதற்குஅந்த பெண் என்னுடைய அம்மாவிற்காக ஒரு சிவப்பு ரோஜாபூ வாங்க வேண்டும் என்றார் . என்னிடம் ஒரு ரூபாய்தான் உள்ளது ஆனால் அந்த சிவப்பு ரோஜாவை பூக்கடைக்காரர் இரண்டு ரூபாய் என கூறுகின்றார் நான் என்னசெய்வேன் இன்று எங்களுடைய அன்னையின் பிறந்த நாளாயிற்றே நான் என்ன செய்வேன் என கூறியதை தொடர்ந்து அம்மனிதன் இரண்டுரூபாய் கொடுத்து அந்த ரோஜாபூவை வாங்கி பெண்ணே வா உங்களுடைய அன்னையை நேரில் காணலாம் என அந்த பெண்ணை அவருடைய மகிழ்ந்தில் ஏற்றி கொண்டு சென்றார்

ஆனால் என்ன ஆச்சிரியம்அந்தஇளம்பெண் அவர்களுடைய வீட்டிற்கு செல்லாமல் தங்களுடைய அன்னையை அடக்கம் செய்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட கல்லறையின் மீது அந்த ரோஜாபூவை வைத்து வணங்கினார்

அதை கண்ணுற்ற மனிதன் மனம்மிக நாம் நம்முடைய உயிரோடு இருக்கும் நம்முடைய அன்னையை மதிக்காமல் வெகுதூரத்தில் வாழ்ந்து வருகின்றோம் ஆனால் இந்த இளம்பெண் தன்னுடைய தாய் இறந்த பின்னர்கூட மறக்காமல் மரியாதை செலுத்துகின்றாரே என சங்கடப்பட்டது,

பின்னர் அந்த மனிதன் தன்னுடைய தாயின் பிறந்த நாளிற்காக தபால் வாயிலாக பூக்கள் அனுப்புவதை தவிர்த்து நேரடியாக அவரது அம்மா வாழும் வீட்டுக்கு இரு நூறு மைல்கள் மகிழ்வுந்தில் சென்று மலர்களை அவருடைய அன்னையின் காலில் வைத்து வணங்கினார்

ஆம் நாம் நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களை மதித்து வனங்க உறுதி எடுப்போதோடு மட்டுமல்லாது நம்முடன் வைத்து அவர்களை காத்திட உறுதி பூனுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...